Friday, November 28, 2008

சென்னை மழை தீரவில்லை

சென்னை மழை தீரவில்லை இன்னும். வெற்றிகரமான அடிதடியான மூன்றாவது நாள். மேட்டுக்குப்பத்தில் நெஞ்சளவு நீர் என்கிறார் கணவரின் நண்பர். ஒரு குளத்தில் வீடு போல? கார் மூழ்கி விட்டதாம்.

நல்ல வேலை, எங்கள் வீட்டு ஏரியாவில், கரண்ட் உள்ளது. பரவாயில்லை. கொஞ்சம் கீழ் மட்டமான இடங்களில்? பாவம் மக்கள். சென்னை மாநகாட்சி, எங்கெல்லாம், மழை தண்ணீர் தேங்கும் என்று ப்ளேன் செய்து கட்டிடம் கட்டும் போது பெச்மன்ட் அளவு பார்த்து உதவி செய்யலாம்.

அண்ணா சாலை வரை சென்று வந்தோம். கொடுமை. சேற்றை வாரி இறைக்கும் கொடுமை. கணுக்கால் அளவு நீர்.

ஒரு தமிழ்நாட்டு காபிடல் சிடி என்று சொல்லும் அளவு இல்லை சென்னை.

ஊரிலிருந்து சொந்தம் வரவேண்டியது ட்ரிப் கேன்சல் செய்தார்கள் நல்ல வேலை.

குடிக்கும் நீர், எப்படியோ அகுவாகார்ட் வைத்து சமாளிக்கிறோம். அதுவும் பவர் போனால் அழுகை தான்.

நல்ல வேலை சில கடைகள் உள்ளன, மாவு, அத்தியாவசியமான கிழங்கு, வெங்காயம் இருந்தது. யானை விலை.

அநியாயம். பாணி பூரி விற்கப்படுகிறது, பிளாட்பார்மில்..

கீழ்பாக்கம் மாறிய என் நண்பர் குடும்பம், தண்ணீர் இல்லாமல், குடிசை மாற்று வாரியம் ஏரியாவிற்கு சென்று குடங்களில் தண்ணீர் வாங்கி வந்துள்ளார்கள்.

நாளை மழை நிற்கும்.

1 comment:

Thamiz Priyan said...

நிறைய அப்டேட் தருகின்றீர்கள்.. நன்றி!