Tuesday, November 22, 2011

Supercalifragilisticexpialidocious

Supercalifragilisticexpialidocious

What is this?

Tuesday, June 14, 2011

கனடா இம்மிக்ரேசன்

கனடா இம்மிக்ரேசன் பற்றி சில விபரங்கள் தேவை.


ஈஸியா?


எவ்வளவு செலவாகும்?


( நீண்ட நாட்களுக்கு பிறகு வலைமனை வந்தேன்... )


Monday, August 9, 2010

மீண்டும் எழுதுகிறேன்

நீண்ட நாட்கள்... எழுதவில்லை. என் ஆங்கில பதிவில் மூன்று பதிவுகள் போட்டேன்... அதுவும் இமெயிலில் இருந்து கட் & பேஸ்ட் ... மேலும் அங்கு நேரம் கிடைக்கவில்லை.

கணவர் வேலை காரணமாக யுரோப் சென்றதால்... சம்மர் வெகேசன் ( மார்ச் இறுதி முதல் ஜூன் முதல் வாரம் வரை ) நாங்களும் டூசல்டார்ப் சென்றோம். அவர் அங்கு தான் இருக்கிறார். பெங்களூரு வந்த ஒன்பது மாதங்களில், நல்ல வேலை என்று நம்பி வந்த கம்பெனி செயலற்று போனதால்... பெப்ரவரி நடுவில் அவர் இந்த புது கம்பெனியில் சேர்ந்தார். உடனே ஆறு மாதத்திற்கு அவருக்கு புது ப்ரொடக்ட் வேலை. அதற்கு ஆறு மாதம் ஆன்சைட். கம்பெனி மூலம் (விமானத்திற்கு ஐ.டி.) இப்போது ஜெர்மனியில். இந்த மாதம் கடைசியில் திரும்புகிறார்.

நிறைய இடங்கள் பார்த்தோம். அதை பற்றி மெதுவாக எழுதுறேன். இத்தாலியில் சியன்னா என்ற இடம் சென்றது மிக அருமை. ஜூஸ் படுகொலைகள் நடந்த இடமான சென் சப்பாவிற்கும் சென்றோம். நிறைய இடங்களுக்கு ட்ரெயினில் தான் சென்றோம். யுரோ ரெயில் பாஸ் கட்டணம் குறைவு.

எங்கு சென்றாலும் நிறவெறி ஆதிக்கம் இருக்கின்றது. Are you SriLankan என்று சில இடங்களில் கேட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை.

ஜெர்மனியில் படிப்பு செலவு ஒரு குழந்தைக்கு மாதம் முன்னூறு யுரோ ஆகுமாம். நமக்கு கட்டுபடி ஆகாது. மேலும் சில பள்ளிகளில் வருமானம் பொறுத்து இலவசமாம்.


***

சரி அப்துல்லா அண்ணன் குறிப்பிட்டிருக்கும்

பிரபல பெண் பதிவருக்குப் பகிரங்கக் கடிதம் பதிவில் உள்ள பெண் யார்?


மீண்டும் கலகமா?

Monday, February 22, 2010

பழைய நினைவுகள்

என் குழந்தைகள் வரைந்த ( கம்ப்யுட்டரில் செய்த பெயின்ட் கிறுக்கல்கள் உட்பட ) இன்று எடுத்து வைத்து பார்த்தோம்.

அவர்களே ஆச்சிரியபட்டார்கள். "நானா இதை செய்தது?" என்று...

சரியான ஆசிரியர் இருந்தால் வாழ்க்கை நலம் தான்.

காலம் எப்படி வேகமாக போகிறது பார்த்தீர்களா?

அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது பரிசளிக்க வேண்டும்.

***

முகம் தெரியாத ப்ளாகர்கள் எல்லாம்.... சரி விடுங்கள்....

கிரிக்கெட்டுக்கும் எனக்கும் தூரம் அதிகம். தொடர் பதிவு வேண்டாமே?

Wednesday, February 17, 2010

இதுவரை

பிசி என்று சொல்லாமல், வீட்டில் கம்ப்யுடர் டைம் கிடைப்பதில்லை, அதனால் பதிவுலகம் பக்கம் வரவில்லை.

நோட்டில் தான் சில கவிதைகள் எழுதினேன். அப்புறம் ப்ளாகில்.

பரிசல்காரன் புத்தகம் வந்திருக்கு. கேபிள் சங்கர் புத்தகம் வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

நாங்கள் பெங்களூரு வந்து சில காலம் ஆகியும் இன்னும் செட்டில் ஆகவில்லை.

அபார்ட்மெண்டில் இரவு தினமும் கையால் துவைக்கும் ஒரு பெண், விடாமல் சோக பாட்டு பாடுகிறார். கணவனை சென்னையில் விட்டுவிட்டு இங்கு தனியாக வேலை... ரூம் மேட்ஸ் உண்டு.

தமிழ் படம் மற்றும் அசல் பார்த்தோம். பிடித்திருந்தது.

ரேணிகுண்டா, போர்க்களம் படம் சிடியில் பார்த்தோம்.

புதிய ஹைவே பளை ஓவர் சில்க் போர்டு முதல் எலெக்ட்ரானிக் சிடி வரை சென்று வந்தோம்.

இப்போதெல்லாம் கம்பளி தேவையில்லை இரவில். குளிர் விட்டாச்சு.

குழந்தைகள் கடைசி டெர்ம் பரீட்சை இன்னும் ஒரு மாதத்தில். ஒரு வருட பாடம் ரிவைஸ் பண்ணனும்.

கணவர் வேலை தேடுகிறார்.

Wednesday, January 13, 2010

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

பெங்களூரில் சங்கராந்தியும் இன்றிரவு கொண்டாடுகிறார்கள்!

Thursday, December 31, 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எல்லாம் வல்ல இறைவன் ( இயற்கை ) எல்லோருக்கும் சந்தோசம் கிடைக்க வழி செய்யட்டும்.

Monday, December 28, 2009

மூன்று மடையர்கள் ( 3 Idiots )

மூன்று மடையர்கள் படம் ஒரு வழியாக குழந்தைகளின் அன்பு தொல்லையால் சென்று பார்த்தோம். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது அது காலேஜ் செல்லும் குழந்தைகளுக்கு என்று.

சேடன் பகத்தின் Five point someone நாவல் மாதிரி இல்லாமல் பொம்மன் இராணியின் நடிப்பால் படம் அருமையாக நகர்கிறது. கரீனா கபூர் (? ) ஒரு நல்ல நடிகர் என்றும் தெரிகிறது.

எப்படி மடையர்களும் ப்ரில்லியன்ட் கோச்சிங் மூலம் ஐ.ஐ.டி க்கு சென்று வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் ( ? ) என அப்பட்டமாக சொல்கிறார்கள். சேடன் பகத்தின் சொந்த அனுபவம் போல? எல்லோரும் என்ன ..டி படித்தவுடன் அமெரிக்காவா செல்கிறார்கள்?

இந்தியர்களின் மக்கடிக்கும் கலாசாரம், வாத்தியார்களை சோப்படித்து மார்க் பெறுவது... (!) பணத்தால் எல்லாம் சாதிப்பது ( டூஷன், காலேஜ் சீட், எக்செட்ரா ... உண்மையோ உண்மை ) என்று காட்டுகிறார்கள்...

இந்த படத்தை பார்த்து நம் கல்வி தொழில் துறை மந்திரிகள் மாறி, வீட்டில் குழந்தைகளுக்கு ஹோம் வரக் கொடுப்பதை நிறுத்தி முன்னேற அசைன்மண்ட்ஸ் கொடுக்க வழி செய்ய வேண்டும். ( இப்போது என் மகன் டிஸ்கவரியில் க்ரோகொடாயில் வெர்சஸ் லயன் பார்கிறான்... )

வாழ்க்கையில் நாம் அடிக்கடி சந்திக்கும் மடையர்களை வெகுவாக கவரும் வண்ணம் இருக்கு இந்த படம். அதுவும் அந்த கல்யாணத்தில் சென்று நல்லா சாப்பாடு சாப்பிடும் திட்டம்... அஹா...

மூன்று நண்பர்கள் முற்றிலும் மடையர்கள்... ஒரு ஹிந்து, ஒரு முஸ்லிம் ஒரு கிறிஸ்துவர் என்று தேசிய மத ஒருமைப்பாடு மாதிரி காட்ட நினைத்து, கடைசியில் டப்பிங்கில் சொதப்பி இருக்கிறார்கள்... போஸ்டர் கலரில் ரெட் ( ஹிந்து ), ப்ளூ ( கிறிஸ்டியன் ) மற்றும் க்ரீன் ( முஸ்லிம் ) என காட்டுகிறார்கள்.

வினோத் சோப்ராவின் மகன், சேடன் பகதிர்க்கு எதற்கு அவ்வளவு பெரிய தொகை கொடுத்தார் என தெரியவில்லை! மட்டமான கதை. தமிழில் ப்ரெண்ட்ஸ் என வந்த கதை போல கொஞ்சம் இருக்கு. கொஞ்சம் ஷாஜகான் மாதிரியும் இருக்கு. ( சில காட்சிகள்! ).

சில டையலாக்ஸ் எரிக் சீகலின் The Class நாவல் வசனம் போல இருக்கு....

சரி சரி ராஜ்குமார் இராணியின் டைரக்சனில் இதுவும் ஒரு முன்னாபாய் லெவல் வெற்றி பெரும்.... கஜினி விட இது வசூலில் சூப்பராம்!

இந்த வருடம் விடுமுறைக்கு பணம் கஷ்டமாக இருப்பதால், சிம்லா மற்றும் மணலி ட்ரிப் கேன்சல். படத்தில் கொஞ்சம் பார்த்தோம்... சரி சரி..

Saturday, December 26, 2009

ஒரு வழியாக அவதார்

சரியான இந்தியன் படம். செம படம். ஜாலி படம். எல்லாமே கிராபிக்ஸா? சரி சரி...






ஒரு நவீன விட்டலாச்சார்யா படம் மாதிரி இருந்தது!

இந்த உயிர் ட்ரான்ஸ்பர் விஷயம், ரொம்ப ஓவர். கூடு விட்டு கூடு டைப். பாவம் யாரோ ஒரு இந்தியரின் கதையை சுட்ட மாமேதை, ஜேம்ஸ் கேமரூன்!

கடைசி பிரேமில் கண்ணை திறக்கும் நவி ஹீரோ, அடுத்த பாரட்டுக்கு ஆயுதம் ஆகிறாரா... பத்து வருட உழைப்பு. மூணு பார்ட் வந்தால் தான் ஹாலிவுடுக்கு நிம்மதி.

அப்புறம் வருடம் ஒரு ஸ்பெஷல் எப்பக்ட்ஸ் ஆஸ்கர்.

காசு, அவார்ட்ஸ் எல்லாம் அள்ளும்.

இப்போவே பெங்களூரு வீதிகளில் 2D திருட்டு டிவிடிக்கள் விற்பனையில்.

Tuesday, December 1, 2009

உடல் எடை

உடல் எடை குறைக்க எவ்வளவு பாடு பட வேண்டி உள்ளது.

இந்த பதிவு அருமை. எழுதியவர் லதானந்த்.

போசி

செய்யும் வேலை பொறுத்து கேலரிஸ் தேவையை உடல் சொல்லாது. நாம் தான் அனுபவபட்டு சாப்பிட வேண்டும்.

நிறைய நீர் பதார்த்தங்கள் குடித்தால் / சாப்பிட்டால் - வயிறு பெரிதாகும் என்று தாத்தா பாட்டி காலத்தில் சொல்வது உண்மை தான் போல.

அது போக என்டிடிவி குட் டைம்ஸ் போன்ற சேனல்கள் சமையல் கலை பற்றி அதுவும் இதுவும் செய்து காட்டி அட்டகாசம் செய்கிறார்கள். சாப்பிட்டு வெயிட் போட வேண்டியது தான். ( வெயிட் குறைக்க வழி என்ற போர்வையில் )

நம்ம தமிழ் சேனல்கள் பற்றி சொல்ல போவதில்லை. எல்லாமே வெயிட்டான அயிட்டங்கள் தான்! ( சுவை )

*** லதானந்த் அவர்கள் ப்ளாகில் கமன்டாய் ***

1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதுதான் சிறந்தது.

2. சரியான நேரத்தில் சாப்பிடவும்.

3. எண்ணெப் பதார்த்தங்களை தவிர்க்கவும்.

4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.

5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.

6. இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும்.

7. பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.

8. பசிக்கும்போது நொறுக்குத்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்சாறு அல்லது முட்டைகோஸ் சாப்பிடலாம்.

9. மாவுச்சத்து குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண்டு.

10. வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.

11. மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.

12. சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்

Thanks to : http://www.darulsafa.com

Saturday, November 28, 2009

மாவீரர் தின உரை

அஹிம்சை வழி தான் எப்பவும் சால சிறந்தது. இந்த வருடம் யார் தான் மாவீரர் தின உரை நிகழ்த்தினார்கள்?

பிரபாகரன் இப்போது உயிருடன் இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

வெளிநாடு வாழும் இலங்கை தமிழ் இனத்தவர், சிறிலங்காவில் வாடும் எம் தமிழர்க்கு உதவி புரிந்திட ஓடோடி வரவேண்டும். தேயிலை தொழிலோ, விவசாயமோ, தெரிந்த தொழிலோ கொண்டு உயிர் வாழ்ந்திட வகை செய்ய வேண்டும். வேலை செய்யாமல் கேம்பில் இருந்து வாழ யாருக்கும்பிடிக்காது.

தொடர்புடைய பதிவு

மாவீரர் தினம்

Friday, November 27, 2009

என்ன சொல்வது?

இந்த பட்டு ஜாக்கெட் ( லைட் கலர் ) மாத்திரம் அக்குள் வியர்வை கறை ட்ரை க்ளீனிங் செய்தாலும் போகவில்லை.

எப்படி அதை சரி செய்வது? என்ன சொல்வது?

விவரம் தெரிந்த தோழியர் சொல்லவும்!

Wednesday, November 25, 2009

பெங்களூரும் சென்னையும்

நாங்கள் சென்னையிலிருந்து பெங்களூரு வந்து கொஞ்சம் காலம் ஆனாலும், இன்னும் சென்னை மழையை மறக்கவில்லை. ரோடெல்லாம் கந்தலாகி...

இங்கு மழை எப்போது வேண்டுமானாலும் வருகிறது. பெங்களூரில் குடை எடுத்துக்கொண்டு தான் வெளியில் இந்த மழை காலத்தில் செல்ல வேண்டும்!

***

காய்கறி விலை, மற்றும் வீட்டு வாடகை குறைவு. மாதம் எங்கள் குடும்பத்திற்கு ஐந்தாயிரம் குறைவான செலவு எனலாம். ஆனால் சினிமா டிக்கட் விலை, ஹோட்டல் சாப்பாடு விலை அதிகம் தான். வெஜ் கூடத்தான். தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டியது இல்லை. :-)

கரண்ட் பில் மாத்திரம் அதிகம் செய்துள்ளார்கள். அதில் சென்னை கொஞ்சம் குறைவு!

***

அவர், மைசூர் கம்பெனி ஆபிசுக்கு அடிக்கடி சென்று வரும் வேலை. காலையில் ஆறு மணிக்கு கிளம்பினால் ஐராவட் பஸ்ஸில் சென்று சாயந்திரம் ஒன்பது மணிக்கு வீடு திரும்பிவிடுகிறார்! இரண்டரை மணி நேரம் தான் - சூப்பர் பஸ் சர்வீஸ். இனி ரோடு சரி செய்தால், புது ரோடு வேறு வருதாம் , நூற்றி முப்பது கிலோமீட்டர்கள் ஒன்றரை மணி நேரத்தில் கடக்கலாம்! ஆனால் இந்த சிட்டிக்குள் பத்து கிலோமீட்டர் போக வர இரண்டு மணி நேரம் வேண்டும்!

***

இந்த பேன்க் வட்டி விஷயம் கொஞ்சம் புரியவே இல்லை. ஐந்து லட்சத்திற்கு, பெர்சனல் லோன் பதினைந்து பர்சன்ட் வட்டி என்றால், மாதம் கொஞ்சம் கொஞ்சம் கட்டினால் - இரண்டு வருடத்தில் எப்படிங்க மொத்தம் கட்டுறது எழு லட்சம் வரும்? புரிந்தவர்கள் சொல்லுங்க!

இன்னொரு கொடுமை, கடன் வாங்கிய இரண்டாவது மாதம் மொத்தமாக திருப்பி கட்டினால் ( பணம் கிடைத்து சென்றோம் ) ஆறு மாதம் வரை ஈ.எம்.ஐ தான் கட்டணுமாம். பிறகு அவுட்ச்ட்டேன்டிங் அமவுண்டில் நான்கு பர்சன்ட் அதிகம் சேர்த்து கட்டலாம் என்றார்கள். தலை சுற்றுது.

நல்ல வேலை, அபார்ட்மென்ட் லோனில் அந்த அமவுண்ட் குறைத்து கடன் பெறுவோம்!

கடன் சுமை தான் வாழ்கையில். சொந்த வீடு வேண்டும் என்றால், கையில் மொத்த காசோடு தேடுங்கள்.

***

நிறைய விசேஷங்கள் இங்கு. அவருக்கு சொந்தம் இங்கு அதிகம். பட்டு சேலைகள் அதிகம் கட்ட வேண்டி உள்ளது.

இந்த Silk பட்டு ஜாக்கெட் ( லைட் கலர் ) மாத்திரம் அக்குள் வியர்வை கறை ட்ரை க்ளீனிங் செய்தாலும் போகவில்லை. எப்படி அதை சரி செய்வது? விஷயம் தெரிந்த தோழியர் உதவுங்கள்!

Tuesday, November 3, 2009

நாட்டுக்கு நல்லது செய்வோம்: இருநூறாவது பதிவு

நாட்டுக்கு நல்லது செய்வோம்

இது எனது இருநூறாவது பதிவு! ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆதரவு அளித்து வரும் வாசகர்க்கு என் நன்றிகள். இதுவரை இருபதாயிரம் பார்வைகள்.

இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்தது - தொடர் டிகிரி மேல்நிலை கல்விக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது தான் தெரிந்தது, அரசாங்கம் ஒரு மண்ணும் செய்யவில்லை, இதுவரை மிகவும் குறைந்த அளவே பணம் செலவழிக்கிறது என்று.

கர்நாடக அரசாங்கம், ஒரு படி மேலே போய், மாதம் ரூ. இரண்டாயிரம், மேல்நிலை டிகிரி கல்வி படிதவர்குக்கு கொடுக்க யோசனை செய்கிறது. எப்படி வெள்ளை இல்லாதவர்க்கு இப்படி கொடுக்க முடியும்? அவர்களை, தேர்ந்த தொழில் கல்வி கொடுக்க - ஆசிரியர் ஆக வழி செய்யலாம் அல்லவா?

தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு முறை எம்.ஜி.ஆர் அரசாங்கம் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல், ஐந்து வருடங்களுக்கு மாதம் இருபது ரூபாய் கொடுத்தாக நண்பர் ஒருவர் கூறுகின்றார்! ( சினிமா பார்க்க கூட அது உதவியிருக்காது... அது வேறு விஷயம்! )

கட்டாய இராணுவம் - சேவை என்று இருக்க வேண்டும் என்கிறார், என் கணவர். நிச்சயம் அவருக்கு அந்த எண்ணம் வர காரணம், அரசியல்வாதிகள் வேலை இல்லா பட்டதாரிகளுக்கு - வேலை கொடுக்கிறேன் என்ற வழியில் - அவர்களை ரவுடிகள் ஆக்குகிறது!

( நாங்கள் வாங்கிய வீட்டிற்கு அட்வான்ஸ் ருபாய் ஐந்து லட்சம் கொடுத்த பிறகு, இன்னும் சில லட்சங்கள் கொடுக்க அவர்கள் கொடுத்த இரு வாரங்களுக்கு பிறகு மேலும் சமயம் கேட்ட போது, முடியாது என்று, படித்த ரவுடிகள் வந்து மிரட்டுகிறார்கள்... 18% வட்டி வேறு முன் பணத்திற்கு வசூல் செய்கிறார்கள்! நல்ல வேலை கணவர், பெர்சனல் லோன் 15% வட்டியில் வாங்கி, கட்டிவிட்டார்! இன்னும் லோன் டிச்பர்ஸ் ஆகவில்லை - காரணம், புதிதாக இங்கு பெங்களூரில் வேலைக்கு சேர்ந்தபடியால்!)

***

சரி வெளிநாட்டு மோகம் கொண்டு அலைகிறார்களே மக்கள் அதற்க்கு என்ன செய்ய வேண்டும்?

என் சித்தி பையன், சொந்த காசில் பெயருக்கு அமேரிக்காவில் வேலை என்ற பெயரில் - மாஸ்டர் டிகிரி வாங்கிய பிறகு, ப்ராக்டிகல் ட்ரெயினிங் சமயம் ரிலேக்ஸ் செய்கிறான். அவர்கள் குடும்பத்திற்கு அது பெருமை. எப்படியாவது நிஜமாக அங்கு வேலை கிடைத்து, ஒரு வசதியான பெண் பார்த்து செட்டில் ஆகிவிடுவான். எல்லோரும் அப்படி இருக்க முடியுமா?

என்னை பொறுத்த வரை, அவன் இந்தியாவில் வந்து பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்ளலாம்! ( அவனுடைய அக்காவும், வசதி பார்த்து கட்டிக்கொடுத்த பின்னும், பி.ஈ., எம்.பி.ஏ படித்த பெண், இப்போது மளிகை கடை - டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கல்லாவில் உட்கார்ந்து இருக்கிறாள்! )

Saturday, October 31, 2009

டிஸ்லெக்சியா

கதிரவனுக்கு அன்று பெரிய தலைகளோடு மீட்டிங்.

சில கல்லூரிகள் முதல்வர்கள், சில வருமான வரி துறை அதிகாரிகள் எனக்கூட்டம்.

ஸ்டேட் செக்ரடரி என்றால் சும்மாவா?

மாநில அரசாங்கம் ஒரு ஆர்டர் போட்டிருந்தார்கள். அதாவது பள்ளிகளில் ( தனியார் ) படிக்க வரும் குழந்தைகள் சிலருக்கு தனி கவனம் தேவைப்படுவதால், அதற்கு சிறப்பு பயிற்சி கட்டணம் முழுவதும், வருமானவரி கழிவிர்க்கு மத்திய அராசாங்கத்தின் ஒப்புதல் பெற்று தந்திருந்தார்கள்...

கல்லூரிகளுக்கும் அதை பெற்று தர வேண்டும் என்று கேட்க தான் கல்லூரி முதல்வர்கள் வந்திருந்தனர். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை சொல்ல வருமான வரி அதிகாரிகள்....

"நிச்சயம் பண்ணலாங்க" என்றார்கள் வருமான துறை அதிகாரிகள். அதற்கு சான்று எப்படி வரையறுக்க வேண்டும் என்பதற்கும் வழி கொடுத்தார்கள்.

"நான் சின்ன வயசுலே பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது!", என்றவாறே புன்னகைத்துக்கொண்டார் கதிரவன்.

முப்பது வருடங்களுக்கு முன்...

சிறு வயதில் அவனால் டிஸ்லெக்சியா பாதிப்பால் படிக்கமுடியாமல் ரொம்பவும் திணறி இருந்தான்! வீட்டிலும் மக்கு பண்டாரம் என திட்டு வேறு... எவ்வளவு நாள் தான் அப்பா அம்மா படி என்று அடிப்பார்கள். வாத்தியார்கள் தேறாத கேஸ் என்று சொல்லிவிட்டனர். படிக்கனும்னு ஆர்வம் இருந்தால் தான் படிப்பு வரும் என்று புத்தி சொல்லியும் அவனால் படிக்க முடியவில்லை.

ஆறாவது பெயில் ஆனவுடன் கோவை செல்வபுரம் மாமாவின் சாயப்பட்டறையில் சேர்ந்தவன், நிறங்களோடு நீர்த்துப்போனான்! அவனோடு வேலை செய்த ஒருவர், தனியாக பள்ளியில் படிக்காமல் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முயன்ற போது, அதை பார்த்து அறிந்து அவனும், முயன்று படித்து, ப்ளஸ் 2 முடித்து, கல்லூரி படிப்பு நேரடியாக முடித்து, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி... ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து, இன்று அவர் ஸ்டேட் செக்ரடரி!

***

இது சர்வேசனின் நச் கதைபோட்டிக்கு சமர்பிக்கிறேன்!