Friday, December 12, 2008

நானைய விகடனில் ரஜினிகாந்த்

நானைய விகடனில் ரஜினிகாந்த் பற்றி ஒரு செய்தி, இட்லிவடை செய்து கொடுக்கிறேன். படித்து பயன் பெருக.

படத்தின் மீது கிளிக் செய்தால், நன்றாக படிக்கலாம்...

சரி படித்தால் என்ன பயன்?

நாம கொடுக்கும் டிக்கட் காசு எப்படி யூஸ் ஆகுதுன்னு தெரியும்.

சும்மா டைம் பாஸ்!

Thursday, December 11, 2008

அரசியலும் ஜோதிடமும்

கேள்வி : பதினாறு வயதிலிருந்து என் கணவர் அரசியலில் இருந்து வருகிறார். இருப்பினும் மேலே வர இயலவில்லை. இதற்குக் கட்சியில் சிலர் செய்துள்ள செய்வினைதான் காரணம் என்கிறார்கள். உண்மையா? வரவிருக்கும் தேர்தலில் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. சீட் கிடைக்க வாய்ப்புள்ளதா? பரிகாரம் என்ன செய்தால் இந்த வாய்ப்பு கிடைக்கும்?

பதில் : தற்போது தங்கள் கணவருக்கு 58 வயதாகிறது. உங்கள் கூற்றுப்படி அவர் 42 வருடங்களாக அரசியலில் இருந்து வருகிறார். இந்நீண்ட கால அரசியலில் அவர் உயர்பதவி எதுவும் பெறவில்லை என்று வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள்.

தங்கள் கணவரின் ஜாதகப்படி அவருக்குச் செய்வினை எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. அவரது செய்யாவினைதான் அவரது தோல்விக்கும், ஏமாற்றத்திற்கும் காரணங்களாகும். அதாவது அவர் செய்யாத சில காரியங்கள் (செய்யாத வினை) என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம்.

வெற்றிக்குப் `பரிகாரம்' : இந்திய அரசியலில் முன்னுக்கு வரவேண்டுமென்றால், கட்சித் தலைவரைத் `திருப்தி' செய்யவேண்டும்! அவர் சந்தோஷப்படும்படி நடந்துகொள்ள வேண்டும். மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டுக் கட்சித் தலைவரின் `கொள்கைகளுக்கு'த் தலையாட்ட வேண்டும்.

எந்த மேடையில் பேசினாலும் தலைவரை வானளாவப் புகழவேண்டும். வழியைப் பற்றிக் கவலைப்படாமல், கட்சி நிதிக்குப் பணம் சேர்த்துத் தரவேண்டும். உங்கள் பிறந்தநாளாக இருந்தாலும், தலைவரின் பிறந்தநாளாக இருந்தாலும் தலைவருக்குப் `பெரிய அளவில்' ரூபாய் நோட்டுக்களாலான மாலையை அவருக்கு அணிவித்து, அவரது `ஆசி'யைப் பெறவேண்டும்.

சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் கட்சித் தலைவரின் `திருவடிகளில்' சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும். அவரது கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டால் மிகவும் நல்லது. தலைவரின் திருக்கண் பார்வை உங்கள் மீது படும்போது, அளவற்ற மரியாதையினால் உங்கள் உடல் உங்களையும் அறியாமல் கூனிக்குறுகி நெளிய வேண்டும். அதாவது, அந்த அரசியல் தலைவரின் கண் பார்வை படுவதற்கு நீங்கள் மகத்தான பாக்கியம் செய்திருப்பதாக நீங்கள் உணர்வதை அவருக்கு வெளிப்படுத்தவேண்டும்! பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

அரசியலில் உறுதியாக வெற்றி பெற இத்தகைய `உன்னதமான' வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்க நம் நாட்டில் பள்ளிகள் இல்லை. ஆதலால், உங்கள் கணவரிடம் சொல்லி இவ்வழிமுறைகளைப் பின்பற்றி இன்று `நல்ல' பதவிகளில் அமர்ந்துள்ள `அரசியல் பட்டதாரிகளிடம்' சீடனாகச் சேர்ந்து கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். எவ்வளவு சீக்கிரம் இதில் தேர்ச்சி பெறுகிறாரோ, அவ்வளவு சீக்கிரத்தில் அவர் எந்த அளவிற்கு உயர்ந்த பதவிகளை அவர் அடைவார் என்பது அவரது `திறமை'யைப் பொறுத்தது. அரசியல் வெற்றிக்கு இது ஒன்றே தக்க `பரிகாரம்' ஆகும்.

நன்றி : குமுதம் ஜோதிடம்

ஏ.எம்.ஆர். அவர்கள் இப்படி காமடி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

Wednesday, December 10, 2008

இது சரியா?



படம் - உண்மை தமிழன் ப்ளோகில் இருந்து இட்லிவடை செய்தது.

தவறில்லை தான். ஸ்வீடன் வோல்வோ கம்பனி தலைவர் அவர். ஸ்வீடிஷ் ஆட்கள் வாயில் வேறு முத்தம் கொடுப்பார்கள். என் கணவர் அங்கு சென்ற போது பட்ட கஷ்டம் மாளாது! பெண்கள் தொல்லை என்றார், சிகரெட் வாசத்தோடு....

அவுங்க நாட்டு கலாச்சாரம்... அவங்களுக்கு நாம தான் சொல்லணும்.

பீனாவின் கண்ணில் வேண்டா (இம்ம்... ஒ.கே.) வெறுப்பு தெரியுது.

விரும்பி படித்த இரண்டு பதிவுகள்

எனக்கு பிடித்த, நான் விரும்பி படித்த இரண்டு பதிவுகள் (பயணங்கள்)

ஒரு மலைக்கிராமம் ஜெயமோகன் எழுதியது. நினைவுகளை அழகாக செதுக்கி உள்ளார். மலையேற்றம் அருமை, அதுவும் அந்த கர்ப்பிணி பெண்...

எனக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு பயணக்கட்டுரை... இங்கே...

கடவுள்களின் பள்ளத்தாக்கு! - இது தான்டா சுஜாதா...

*****

நிறைய கமண்ட்ஸ் நன்றாக இல்லை, ரொம்ப மோசம். என்ன செய்வது? மாடரேசன் தான் ஒரே வலி. (வழி)

நல்லா சிரிங்க



கண்டிப்பா நம்மூர் மாதிரி இல்லை. போட்டோ புடிசிட்டு வேடிக்கையா பாக்குறீங்க, போய் தீயை அணைங்க! இது ஒரு சூட்டிங் ஸ்பாட் ஆக இருக்கலாம்.

பங்களாதேஷில் தாஜ் மஹால்

பங்களாதேஷில் தாஜ் மஹால் ஒன்று கட்டுகிறார், சினிமா இயக்குனர்.

அது டாகாவில் இருந்து ஒரு மணி நேரம் தள்ளி இருக்கிறது... மோனி என்பவர் கட்டுகிறார் கடந்த ஐந்து வருடங்களாக.

Taj replica in Bangladesh, image from 5 December

நல்ல விஷயம் தான். வாழ்த்துக்கள்.

டூரிஸ்டுகள் வருவார்கள். வேலை வாய்ப்பு போன்றவை.

Tuesday, December 9, 2008

வீட்டுக்கடனும் அமெரிக்காவும்

இந்த பதிவு திவ்யா எழுதியது... வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால் விரிவாக, புரிகிற மாதிரி உள்ளது. நன்றி திவ்யா.

இதனால் எப்படி இண்டியா அடிபட்டது என்பதை கொஞ்சம் யாரவது எழுதினால் நலம்.

நான் தேடி பார்த்த வகையில், பாகிஸ்தானுக்கு சில பில்லின் நிதி கொடுத்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு 400 பில்லியன் நிதி கொடுத்த சிடிபான்க் போன்றவை தான் வருகின்றன. நன்றி: பதிவுபோதை.

யாரும் விரிவாக இன்னும் எழுதவில்லை. தமிழ் கொஞ்சம் கஷ்டமான மொழி புரிய வைக்க.

படிப்பதற்கு டைம் கிடைத்தால், படிக்கலாம்.

மீண்டும் பகர் ஈத் வாழ்த்துக்கள்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவு

[5_state_poll_result.jpg]

நன்றி எங்கிருந்தோ காபி செய்த இட்லிவடை.

இதுவும் ஒரு வகை டேரரிசம் தான்

உடல் ஊனமுற்றவர்களை துன்புறுத்துவது, அரசாங்க ஊழியர்களின் வேலையாக போயிற்று போல. திருந்தமாட்டார்களா? அவர்கள் தான் மனதில் ஊனம் படைத்தவர்கள்.

திவ்யாவின் ப்ளோகில் இருந்த இணைப்பில் இந்த பதிவை பார்த்தேன்.

ரகசிய வன்முறை

தங்கவேல் அவர்கள் எழுதியது.

நாடு திருந்த வேண்டுமென்றால், மக்கள் மனது திருந்த வேண்டும்.

கொடுத்த வாங்குவது தான் வாழ்க்கை.

இறைவன் சிலரை சில சங்கடங்களுடன் படைத்துவிடுகிறான்.

அவர்களும் மனித பிறவிகள் தானே?

உதவி செய்வது நம் கடமை.

கல்யாணம் என்றால்

கல்யாணம் என்றால் என்ன? ஒரு ஆண் பெண் அவரவர் துணை.... குடும்பம் காட்சி.

உலகத்தின் நியதி.

விட்டுக்கொடுத்தல் ஒரு சுகம்.

எல்லோரும் கராக்டான ஆட்களாக இருந்ததில்லை.

சில நிறை குறைகள் இருக்கும். அட்ஜஸ்ட் செய்து வாழ்க்கை போகும்.

செக்சன் 498 ஏவை வைத்து கொடுமை படுத்தும் பெண்கள் பற்றிய பதிவு ஒன்று இங்கே. ஆண்டவன் என்று ஒருவன்(ள்) இருந்தால், அந்த பெண்கள் நிலை என்னவாகும்?

கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும்

**********

பக்ரித் வாழ்த்துக்கள். (ஈகை பெருநாள், மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்....)

Monday, December 8, 2008

உங்கள் வருகைக்கு நன்றி

பதிவு உலகில் வந்து ஏழு மாதங்களில் நிறைய விஷயங்கள் படித்தேன்.

நானும் எழுதினேன். 85 பதிவுகள்! :-)

இன்று ஐந்தாயிரம் வாசகர் பார்வைகள்.

உங்கள் வருகைக்கு நன்றி!

Sunday, December 7, 2008

நல்ல பதிவுகள்

இன்று ஞாயிறு, பெங்களூரில் உட்கார்ந்துக்கொண்டு, நிறைய நேரம் இருக்கிறது.

நல்ல பதிவுகள் படித்தேன்.....

சுவாமி ஓம்கார் அவர்கள் எழுதியது...

உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா?

நான் இட்ட கமன்ட்...

ஹிந்துக்களுக்கு மட்டும் தான இது உதவும், மற்ற ரிலிஜன் ஆட்கள் என்ன செய்ய வேண்டும்?

அப்டேட் ...

ஜோதிட ரீதியாக என்று நான் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால், மற்ற மதத்தில், அவர்கள் ஜோதிடம் (இந்து / இந்தியன் முறை) நம்பமாட்டார்கள் அல்லவா? அவர்கள் பெயர் வைப்பது...வெஸ்டர்ன், நுமேரோலாஜி, தொழில் முறை, ஜார்ஜ் புஷ் குடும்பம் போல அரச வழி ஜூனியர் சீனியர் என்று...

தொடர்புடைய ஒரு பதிவு... குழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.

ஏற்கனவே ஒரு பதிவில் எழுதிவிட்டேன்.... குழந்தைகள்

கதை எழுதுவது பற்றி.... நண்பர் கே.ரவிசங்கர் எழுதியது. சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது... என்னை பொறுத்த வரை பாலகுமாரன் எழுதியவை நீண்ட சிறுகதைகளே. நண்பர் ரமேஷ் அந்த ஸ்டைல் பார்த்து தான அவர் பதிவுபோதை ப்ளோகில் சில கதைகள் எழுதியுள்ளார். பிறகு நரசிம் என்பவர் புதிய முயற்சி செய்கிறார். அப்புறம் பரிசல்காரன். ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதும், கச மூஸா கதைகள், இலக்கணம் இல்லாதவை. லக்கிலுக் என்பவர் எழுதுவதும் அப்படிதான். மொத்தத்தில் சிறுகதை என்றால் ஒரு சம்பவத்தை வைத்து படிக்கதூண்டுபவை. ஸூபர் என்றால்... லதானந்த் அவர்கள் எழுதுவது, பதிவுகளில் வரும் கதைகள். நினைவில் நிற்கும் சம்பவங்கள். உண்மையா பொய்யா தெரியாது.

சிறு கதை எழுதுவது எப்படி? பதிவர்களே படியுங்கள்!

அப்புறம் இரா.வசந்த குமார் அவர்கள் எழுதியது... நவீனங்கள், அறிவியல் புனைவுகள் எழுதுபவர்... படியுங்கள்... அவர் சொல்லுகிறார்...

எழுத்தாளர் ஆக எக்கச்சக்க ஆசையா?

*****
காலத்திற்கு தகுந்த பதிவு...


An interesting article from Divya...

Some conspiracy theory on LBS

You should also read this...

Beware of these Holiday Scams

Thanks to all the pointers for my job search. Few guys have even specified the target big co. with a guaranteed job and costs! Great!