படபடக்கும் நெஞ்சில்
விளைந்தது ஒரு கவிதை
அது பாதி என நான் நினைக்க
வெறும் எதுகை மோனையாகியது
திட்டிக்கொள்கிறார்கள் பதிவுலகில்
அரசியல் நாடகம் ஆடுகிறார்கள்
குறை சொல்கிறார்கள்
சுய தம்பட்டம் அடிக்கிறார்கள்
க்ரூப்போன்று சேர்த்து கும்மி அடிக்கிறார்கள்
ஆனால் நண்பர்களை வைத்து
கோமாளித்தனம் வேண்டாமே!
எங்கு போய் சொல்லிக்கொள்வது
இலக்கியம் இப்போது தன் தொடங்கியது
எப்போது முடியும், அதற்கு விடிவு வரும்
என யாருக்கும் தெரியாது!
அவரவர் வேலை கஷ்டம் அவரவர்க்கு
அருமையான பொழுதுபோக்கு
இந்த இண்டெர்நெட்டு
பதிவுலகம், பயன்பாட்டு தளம்
மக்களை இணைத்து நண்பர்களாக்கும் இடம்
இன்னும் எழுத இருக்கிறது
இந்த பாதி கவிதையில்....
நூலகம்- அறிவும் அதிகாரமும்
4 hours ago