Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, December 28, 2009

மூன்று மடையர்கள் ( 3 Idiots )

மூன்று மடையர்கள் படம் ஒரு வழியாக குழந்தைகளின் அன்பு தொல்லையால் சென்று பார்த்தோம். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது அது காலேஜ் செல்லும் குழந்தைகளுக்கு என்று.

சேடன் பகத்தின் Five point someone நாவல் மாதிரி இல்லாமல் பொம்மன் இராணியின் நடிப்பால் படம் அருமையாக நகர்கிறது. கரீனா கபூர் (? ) ஒரு நல்ல நடிகர் என்றும் தெரிகிறது.

எப்படி மடையர்களும் ப்ரில்லியன்ட் கோச்சிங் மூலம் ஐ.ஐ.டி க்கு சென்று வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் ( ? ) என அப்பட்டமாக சொல்கிறார்கள். சேடன் பகத்தின் சொந்த அனுபவம் போல? எல்லோரும் என்ன ..டி படித்தவுடன் அமெரிக்காவா செல்கிறார்கள்?

இந்தியர்களின் மக்கடிக்கும் கலாசாரம், வாத்தியார்களை சோப்படித்து மார்க் பெறுவது... (!) பணத்தால் எல்லாம் சாதிப்பது ( டூஷன், காலேஜ் சீட், எக்செட்ரா ... உண்மையோ உண்மை ) என்று காட்டுகிறார்கள்...

இந்த படத்தை பார்த்து நம் கல்வி தொழில் துறை மந்திரிகள் மாறி, வீட்டில் குழந்தைகளுக்கு ஹோம் வரக் கொடுப்பதை நிறுத்தி முன்னேற அசைன்மண்ட்ஸ் கொடுக்க வழி செய்ய வேண்டும். ( இப்போது என் மகன் டிஸ்கவரியில் க்ரோகொடாயில் வெர்சஸ் லயன் பார்கிறான்... )

வாழ்க்கையில் நாம் அடிக்கடி சந்திக்கும் மடையர்களை வெகுவாக கவரும் வண்ணம் இருக்கு இந்த படம். அதுவும் அந்த கல்யாணத்தில் சென்று நல்லா சாப்பாடு சாப்பிடும் திட்டம்... அஹா...

மூன்று நண்பர்கள் முற்றிலும் மடையர்கள்... ஒரு ஹிந்து, ஒரு முஸ்லிம் ஒரு கிறிஸ்துவர் என்று தேசிய மத ஒருமைப்பாடு மாதிரி காட்ட நினைத்து, கடைசியில் டப்பிங்கில் சொதப்பி இருக்கிறார்கள்... போஸ்டர் கலரில் ரெட் ( ஹிந்து ), ப்ளூ ( கிறிஸ்டியன் ) மற்றும் க்ரீன் ( முஸ்லிம் ) என காட்டுகிறார்கள்.

வினோத் சோப்ராவின் மகன், சேடன் பகதிர்க்கு எதற்கு அவ்வளவு பெரிய தொகை கொடுத்தார் என தெரியவில்லை! மட்டமான கதை. தமிழில் ப்ரெண்ட்ஸ் என வந்த கதை போல கொஞ்சம் இருக்கு. கொஞ்சம் ஷாஜகான் மாதிரியும் இருக்கு. ( சில காட்சிகள்! ).

சில டையலாக்ஸ் எரிக் சீகலின் The Class நாவல் வசனம் போல இருக்கு....

சரி சரி ராஜ்குமார் இராணியின் டைரக்சனில் இதுவும் ஒரு முன்னாபாய் லெவல் வெற்றி பெரும்.... கஜினி விட இது வசூலில் சூப்பராம்!

இந்த வருடம் விடுமுறைக்கு பணம் கஷ்டமாக இருப்பதால், சிம்லா மற்றும் மணலி ட்ரிப் கேன்சல். படத்தில் கொஞ்சம் பார்த்தோம்... சரி சரி..

Saturday, December 26, 2009

ஒரு வழியாக அவதார்

சரியான இந்தியன் படம். செம படம். ஜாலி படம். எல்லாமே கிராபிக்ஸா? சரி சரி...






ஒரு நவீன விட்டலாச்சார்யா படம் மாதிரி இருந்தது!

இந்த உயிர் ட்ரான்ஸ்பர் விஷயம், ரொம்ப ஓவர். கூடு விட்டு கூடு டைப். பாவம் யாரோ ஒரு இந்தியரின் கதையை சுட்ட மாமேதை, ஜேம்ஸ் கேமரூன்!

கடைசி பிரேமில் கண்ணை திறக்கும் நவி ஹீரோ, அடுத்த பாரட்டுக்கு ஆயுதம் ஆகிறாரா... பத்து வருட உழைப்பு. மூணு பார்ட் வந்தால் தான் ஹாலிவுடுக்கு நிம்மதி.

அப்புறம் வருடம் ஒரு ஸ்பெஷல் எப்பக்ட்ஸ் ஆஸ்கர்.

காசு, அவார்ட்ஸ் எல்லாம் அள்ளும்.

இப்போவே பெங்களூரு வீதிகளில் 2D திருட்டு டிவிடிக்கள் விற்பனையில்.

Saturday, July 25, 2009

விகடனும் ஜனரஞ்சகமும்

இந்த பதிவை படித்தேன்

ஜூ.வி ஆசிரியர் அனுப்பிய நிருபர்

அதில் நான் போட்ட கமன்ட்...

நான் விகடன் , குமுதம் வாங்குவதில்லை.

நான் நடத்தும் பெண்கள் பதிவுகள் என்ற ப்லாகினை ஜூலை 29 , 2009 இதழில், பக்கம் 43 இல் அவர்கள் வரவேற்பறையில் அறிமுகம் செய்ததால் வாங்கினேன்!

நிறைய விஷயங்கள் மிகவும் குப்பை. சினிமா ஒன்றியே உள்ளது.

ஜனரஞ்சகம் என்பது அது மட்டுமல்ல....

--
வினிதா

Wednesday, June 10, 2009

சில காதல் வார்த்தைகள்

நம் திரைப்படங்களில் சில காதல் வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படும்.

இது எனது பதிவில் காதல் கடிதங்கள் வரிசையில் மூன்றாவது பதிவு...

நிலவில் ஆரம்பிக்கும்...

நிலா,
உயிரே,
மானே,
தேனே,
கண்ணே,
கண்மணி,
நெஞ்சே,
மனசு,
இதயம்,
மூச்சு,
வார்த்தை,
நோகுது,
தெரியாதா,
போகாதே,
நில்,
முத்தம்,
தாலி
,
பாடல்,
இதழ்,
அப்பா,
அம்மா,
அம்மம்மா,
ஐயோ!

*******

கவிஜர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய் மற்றும் வைரமுத்து ஒரு பஸ்ஸி லாஜிக் பாடல் ஜெனரேடர் எழுதி ரெடியாக வைத்து, கேட்கும் இடத்திர்க்கேர்ப்ப ( சீன ) பாடல் வந்து விழுகும்.

மூசிக்? கீபோர்டை யாராவது குழந்தை கையில் கொடுத்துவிட்டால், போதும்... வருவதெல்லாம் சுக ராகம் தான்!

டண்டனக்கா...

Wednesday, January 21, 2009

வில்லு

வில்லு பத்தி நிறைய, காரசாரமான விமர்சனங்கள் வந்துள்ளன.

'வில்லு ‍- பார்ப்பவனையெல்லாம் கொல்லு'

வில்லு - விவ'கார'மான விமர்சனம்

ஒரு நாளில் இரண்டு படங்கள்

பார்க்கலாம் என்ற எண்ணமே, போய் விடும் போல உள்ளது...

இது வகை ரிவர்ஸ் சைகாலேஜியா? படம் ஓடும் எனத்தான் தோனுது... அது தான் டிவி'லே அடிக்கடி பாட்டு வருதே...

Friday, January 2, 2009

புது வருடம் முதல்

புது வருடம் முதல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.

2008 என்பது இப்போது முடிந்து போன ஒரு கனவு.

நேரம் கிடைக்கும் போது எழுதுவது ஒரு கலை.

அதுவும் ப்லோக் படிப்பது, மிகவும் தெரிந்த ஆட்கள் எழுதுவது தான் முதலில் படிக்க தோன்றுது.

அப்புறம் ஆங்கிலத்தில் இரண்டு மில்லியன் ப்லோக் இருக்கு. அதில் இந்தியா டாபிக்ஸ் படிக்க வேணும்.

எப்படியும், வாரம் ஒரு முறை அல்லது பல முறை ப்லோக் எழுத வேண்டும்.

**************

2008 டப் டென் சினிமா (தமிழ் ... எம்மொழியும்...)

10. ஜெயம் கொண்டான்
9. பொய் சொல்ல போறோம்
8. வாரணம் ஆயிரம்
7. சாது மிரண்டால்
6. வெள்ளி திரை
5. தசாவதாரம் (முக கவசதிற்க்காக)
4. அஞ்சாதே
3. குசேலன் (பசுபதி நடிப்புக்காக)
2. சுப்ரமணியபுரம்
1. பூ


என் வாசகர்களை ஒரு தொடர் பதிவாக எழுத வேண்டுகிறேன்.

இந்த வரிசையை பயன் படுத்தி உங்கள் ரேடிங்கும் கொடுக்கலாம்.

பின் குறிப்பு...

நீங்கள் பார்த்த படத்திற்கு ஒரு அளவுகோல். மற்றவை, பார்க்காத ஒவ்வொரு படத்திற்கும் சில விமர்சனம் படித்து ரேங்கிங் இடலாம்.

*****************************
நான் அழைக்கும் மூவர்

கே.ரவிசங்கர்
பரிசல்காரன்
ரமேஷ்

(மற்ற எல்லோரும் எழுதுங்க!)