ஒரு ப்ளோகில் எழுதும் போது சூழ்நிலைக்கு ஏற்ப எழுதுகிறார்.
சிலர் மற்றவர் எதாவது எழுதுகிறார்கள் என்பதற்காக எழுதுகிறார்கள். கமல் சொல்வது போல எழுதி பழகுகிறார்கள் இல்லையா?
நான் ஒன்றும் பெரிய இவள் இல்லை. எழுதுகிறேன்... எதோ ஒன்று எனக்கு பிடித்த, கருத்து சொல்லும் விசயத்தை...
சிலர் நல்ல தமிழ் பெயரை வைக்க கூட நாதி இல்லாமல், உணவு பொருட்களின் பெயர் வைத்து ப்லோக் போஸ்ட் போடுகிறார்கள். எங்கிருந்து வரும் அர்த்தம். உச்சகட்டம், ஆபாசமான ஜோக்குகளை, தமிழ்படுத்தி எழுதுவது...
இது வரை பரிசல்காரன் , நரசிம் போன்றவர்களின் எழுத்து தான் என்னை பொறுத்த வரை, தினமும், ஒரு வித மெருகேற்றி ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதை ( இலங்கை பிரச்சனை விடுங்கள், கலைஞர் விஷயம் மறந்துவிடுங்கள்) நன்றாக எழுதுறாங்க. வேறு சிலர் விடுபட்டுள்ளனர்.
மற்றவர்கள், இவர்களின் எழுத்தை தரம் பார்த்து அதை போல எழுதுவது நன்று. இது என் சொந்த கருத்து மற்றும் விருப்பம்.
அப்புறம், கோவை சித்தர் என்றழைக்கப்படும், லதானந்த் அவர்களின் எழுத்து, எனக்கு பிடித்த கோவை பேச்சு நயத்துடன் இருக்கிறது...
கமண்ட்ஸ் போடுபவர்கள், அந்த நேரத்தின் (மீ த பர்ஸ்டு தவிர) தன்மை பொறுத்து கருத்து போடுகிறார்கள். அப்துல்லா அண்ணேவின் ப்ளாகில் தமிழ் கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டுகிறார்கள், என்ன நியாயம்?
நிறைய எழுத வேண்டும், டைம் தான் இல்லை.
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
6 hours ago