ஏர்டெல் சூப்பர் சிங்கர் ராகினிஸ்ரீ பற்றி எனக்கு நல்ல ஒபினியன் இல்லை.
மதிப்புடன் சொல்கிறேன், சென்ற இரண்டு வருடங்கள் போல, ராகினிஸ்ரீ வெற்றி பெற (அந்த கர கரப்பு வாய்ஸ் நல்லாவே இல்லை) எதோ ஒரு குழு வேலை செய்கிறது. மால்குடி சுபா. எல்லாம் தூக்குகிறார். எதோ சினிமா ஸ்டார் மாதிரி இருப்பதாலா? அல்லது ஏ.வி.ரமணன் சொன்ன மாதிரி, சினிமா உலகில் சஞ்சரிக்க வேறு ஸ்பெஷல் காரணம் உண்டா? அவர் நடத்திய சப்தஸ்வரங்கள் மூலம் எவ்வளவு அருமையான பாடகர்கள் வந்துள்ளார்கள்!
இரண்டாம் எபிசோடில் இருந்து கவனிக்கிறேன், ராகினிஸ்ரீ பெற்றது எதோ ஒரு மரியாதையான கவனிப்பு. மூன்று நடுவர்கள், சொல்லி கொடுத்து தேர்ந்தெடுத்த போட்டியில், உடனடி தேர்வு செய்தார்கள்... ஒரே ஒருவர் தங்க காசு பெற்றார். அப்போது இருந்தவர் மால்குடி சுபா மற்றும் ஒரு தாடிக்காரர்...
எஸ்.எம்.எஸ் பண்ண சொல்லி சொல்வார்கள் அல்லவா... வரட்டும்... எங்கள் நண்பர்கள் குழு எங்களால் முடிந்த வரை செலவு செய்து, தகுதியான ஒருவரை தேர்ந்து எடுப்போம்...
இந்த வாரம் சின்மயீ காணவில்லை? யுகேந்திரன் மற்றும் அவர் மனைவி வந்தார்கள்.... என்ன ஆயிற்று? நல்ல காம்பயர்.
நல்லவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
6 hours ago