Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, September 5, 2009

நான் வினிதா

என் பெயர் வினிதா
நான் தான் உலகில் பெரியவள்
என்று நினைக்க தோன்றுது...
சிறியவர்கள் பெரியவர்கள்
நிறைந்த பேரன்டமடா இது
என்ன சொல்லி யாருக்கு
புரிய வைப்பது...
ஒன்று சொன்னால்
மற்றொன்று என நினைக்கும்
டூப்புவாசிகள் நிறைந்த உலகமடா
நான் ஒன்று நினைத்து எழுத
நீங்கள் ஒன்று நினைத்துக்கொள்ள
காமடி ஆனது வாழ்விலே
கமன்ட்டுக்கள் ரூபத்திலே!

Wednesday, July 29, 2009

வியர்வை

வியர்வையை வாசம் நாத்தம்
என்று ஒதுக்கி விட முடியாது
உடல் நன்றாக வேலை செய்கிறது
என்றே காட்டுகிறது!
குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும்போது
வாரி அணைக்கும் போது
வரும் கம கம வியர்வை வாசம்
காத்திருந்து அவர்களை காணும் சொர்கம்!
உடலை கண்ணா பின்னாவென்று வளர்த்தி
பின் வருத்தி உடல் குறைக்க
வியர்வை வரவைக்கும் மனிதர்களை
பார்த்தால் வரும் சிரிப்பு!
கஷ்டப்பட்டு சைக்கிள் ரிக்சாவை
மிதிக்கும் மனிதர்களின் வியர்வை
அவர்கள் குடும்பத்திற்கு
கொடுக்கிறது சந்தோசம்!
உடலுக்கு தெரியும்
எப்படி உணர்த்துவது என்று...
பரமானந்தம்!

Tuesday, July 28, 2009

நுண்ணிய உண்மைகள்

எனக்கு வேண்டிய உதவிகள்
செய்ய துடிக்கும் நண்பர்கள்
பொறி வைத்து பிடிக்கவில்லை
வேண்டுமென்ற கேட்கவில்லை
தானாக வந்தது அது
மகிழ்வோடு
படித்து செய்தார்கள்
எல்லோருக்கும் ஒரு உதவி
எண்ணத்திலும் செய்தார்க்கு
நெஞ்சத்தில் இடமுண்டு
எப்படியாகினும்
தன் கையே தனக்குதவி
என்ற தத்துவம்
எக்காலமும் நிற்கும்
என்றும் நிலைத்து!

காக்கை

மரத்தில் மாட்டிக்கொண்ட காக்கை
அதை விடுவிக்க போலீஸ படை
சந்தோசமாய் இறக்கை அடித்து பறந்து
அது உதவியவர்கள் மேல் ஆய் போட்டது
மனித மனமும் இப்படித்தானே
உதவியவர்களை மறந்துவிட்டு
தன் வேலையை பார்க்கபோவது?
வள்ளுவரும் மற்றவர்களும்
சொல்வது யார் காதிலும் கேட்காது
ஆனால் காக்கை கரைந்துண்ணும்
நிலையை மட்டும் விடாமல்
பிடித்துக்கொண்டு பாடம் கற்பிக்கிறார்கள்
மனிதம் பெரிதா மானிடம் பெரிதா
இல்லை விலங்கினம் தான் சிறிதா?
அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லோரும் சௌக்கியமே!

Saturday, July 25, 2009

புன்னகை

பிறந்த குழந்தையின் புன்னகை
எதற்கும் ஈடில்லை
வாழ்வதற்கும் ஒரு அர்த்தம்
கற்பிக்கும் மலர்ந்த முகம்
அப்பா அம்மவின் கவலை
தீர்க்கும் மருந்து
வளரும் பருவத்திலும் அதே
புன்னகை தீயாய் பரவும்
ரயில் பயணங்களில்
நல்ல மார்க் எடுக்கையில்
கடி ஜோக் கேட்கையில்
நண்பர்களோடு அரட்டையில்
அழகான அம்சமான
ஆணோ பெண்ணோ கடக்கையில்!
ஆனால் எதற்கும் ஈடில்லை
தாயின் மலர்ந்த சிரிப்பு
குழந்தை வெற்றியின் புன்னைகைக்கு
சிறு விளையாட்டாகட்டும்
அது மதிபெண்ணாகட்டும்
இல்லை தான் விரும்பும்
மன வாழ்க்கை கிடைத்த சந்தோசமாகட்டும்
பேரக்குழந்தை கையில் கொடுக்கும்போதும்
ஆனந்தம் அற்புதம்!

:-)

Thursday, May 21, 2009

பிடித்த பாடல்கள் , கவிதை

எனக்கு பிடித்த பாடல்கள் இரண்டு.

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா

முதல் முறை உன்னைப் பார்த்த...

அப்புறம் ராஜு எழுதின இந்த கவிதை, ஒரு போட்டி போல?

காதல் சண்டே - படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3

*************************

ப்ளாக் எழுதி நாள் ஆச்சு. எலெக்சன் ரிசல்ட் வந்தப்புறம், கோவையில் தான் இருக்கோம். இரண்டு மூன்று இடம், விலைக்கு வாங்க பார்த்தோம். என்னவர், சென்னை சென்று விட்டார். சனி காலை அவர் வந்துவிட்டு, இரவே கிளம்புகிறோம்.

தேர்தல் முடிவுகள் 2009

நான் சொன்ன மாதிரி தானா இருந்துச்சு?

எப்படியோ, சம்மர் ஹீட் குறைந்து விட்டது.

ஜூன் ஒன்று முதல் பள்ளி. ஞாயிறு காலை சென்னையில் இருப்போம்.

கோவை வெதர் நல்லா தான் போகுது.

Thursday, March 5, 2009

குஷ்பு இட்லி

குஷ்பு இட்லி செய்வது பற்றி விளக்கவுரை எங்காவது கிடைக்குமா என்று தேடினேன். ஹுஹும்ம்... ஒரு பெரிய சீக்ரட் அசைன்மெண்ட் போல இருக்கு.

வெந்தயம் அதிகம் போட்டு (ஊற வைத்து ஆட்டினால்) எப்போதும் போல உளுந்து போட்டு, இட்லி (குண்டா) தட்டில், துணி போட்டு ஊற்றி ஆவி வர வைத்தால் போதும்... (குக்கரில் செய்தால் தட்டையாக தான் வரும்).

எனக்கு தெரிந்த வரை, மதுரை பஸ் ஸ்டாண்டில் தான், முதன் முதலில் இப்படி கூவி விற்றார்கள், ஒரு எட்டு வருடம் முன்பு இருக்கும்... (இல்லே சின்ன தம்பி வந்த டைம் ஆ?)

இன்றும் அங்கு விற்கும் சந்தகம் / சந்தவை அருமை என்கிறார்கள் நண்பர்கள். தேங்காய்ப்பால் அதன் மேல் போட்டு சாப்பிட்டால் தான் அதன் தனி டெஸ்ட். வீட்டிற்கு வாங்கி சென்று (பத்து ரூபாய்க்கு போதும்!) வெங்காயம் போட்டு தாளித்து விட்டால், குடும்பத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

********************

நரசிம் அவர்களின் பதிவில் படித்தேன்...

பெண்.. பிரிவுத்துயர்.. பார்வை..

எளிதில் விளங்க இந்த வரிகளைப் படித்து விட்டு...

நகக் கீற்றென் இருக்கும் நிலவுக் கீறல் வளர்ந்து,வளர்ந்து முழுநிலவாய்,பெளர்ணமிப் பந்தாய் வான்வெளியில் உருள்கிறதே.. அதுபோலத்தான் என்காதலும் காமமும்.. மெல்லிதாய் பூத்து,வல்லியதாய் வளர்ந்து,காமப் பந்தாய்உருண்டு, என்னை உருட்டி,உழுக்கி பின் கை வளையல்கள் கூட நெகிழ்ந்து விழும்அளவு என்னை உருக்கி விட்டது..அவரின் அருகாமைச் சுகம் அற்றுப்போனதால் மரம்தப்பிய கசங்கிய இலைபோல ஆகிவிட்டேன். என் தலைவனின் தீண்டல் இல்லாமல்துவண்டு போன என் நிலை கண்டு வானம் கூட அழுது மழையாய் பொழிகிறதே.. என் காதல் தலைவனின் காதல் விளையாட்டுகள் இல்லாமல் வாடிப்போய் வருந்தும்என்னைவிட என் மேல் இரக்கம் கொண்டு எனக்காக இந்த ஊர் மக்களும்வருந்துகிறார்களே...

எவ்வளவு அழகியல் தெறிக்கும் வார்த்தைகள்..

அந்த பாடல்...

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி! மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக்கண்ணும்
அவர்திறந்து இரங்கும் நம்மினும்
நம் திறந்து இரங்கும்,இவ் அழுங்கல் ஊரே.

புலவர்: பெருங்கண்ணன்.. முல்லைத் திணை பாடல்

//ஒரு பெண் தனியாக, பஸ் ஸ்டாப்பிலோ,தியேட்டரிலோ காத்திருந்தாலே சமூகத்தின் வறண்ட மனநிலை மனிதர்களின் தேவையற்ற பார்வையை தவிர்க்க முடிவதில்லை.//

அவர்கள் குடும்பத்தில் பார்க்கிற மாதிரி பெண்கள் இல்லாவிட்டால் தான் ( இந்த தவறு, சமுகம் சொல்லிகொடுப்பது ) ஏற்படும்.

பஸ் பிடிக்கும் அவசரம், இல்லை, மாதக்கடைசி செலவு என்று இருப்பார்கள்.

பார்வை எங்கோ இருக்கும்.

***********************

ஆமாம் இப்போதெல்லாம், தமிழ் ப்லோகர்கள் எல்லாம், தங்கள் பெயரில் வலைமனை வைத்திருக்கிறார்கள். செலவு குறைவா?

ரசித்த கவிதை

இந்தி கவிதை, எங்கோ படித்தது, தினமலர் வாரமலர் என்று ஞாபகம்.

கெமிஸ்ட்ரி லேபில்
ஸ்வேதாவை வலுக்கட்டாயமாக
முத்தமிட்டது
இப்போது வலிக்கிறது!
தாவணியில்
பள்ளிக்குச் செல்லும்
மகளை பார்க்கும்போது!


***********

படித்த இடம்... பரிசல்காரனின்....

"எண்ணிப் பார்க்கிறேன்!"


அசத்தல் பதிவு.... கடைசி பத்தி அருமை!

Sunday, November 16, 2008

காதலும் பாடலும்

கைதட்டி பாடிய
பாடலின் கரங்களோ
ஒட்டிய மணற் துகள்களை
தட்டி வழியனுப்பிகொண்டிருந்தன

வீட்டிற்கு செல்ல வேண்டும்
நேரமாகிக்கொண்டு இருக்குது
கணவரின் கடைக்கண் பார்வை
சிறு அசைவில் காதல் சொல்கிறது

உப்புமா பொங்கலானது
தொட்டுக்கொள்ள ஊறுகாய்
பேச்சு மூச்சு இல்லை
காதல் ரொம்ப இனிக்கிறது!

(நேற்று இரவு எழுதிப்பார்த்தேன், நன்றாக உள்ளதா?)

Monday, September 15, 2008

அண்ணா நாமம் வாழ்க

அண்ணா நாமம் வாழ்க!

செப்டம்பர் பதினைந்து - அறிஞர் அண்ணா (துரை) பிறந்த நாள்! நூறு.

கட்டாயம் விடுமுறை.
மனதிற்கு குதுகலிப்பு.
குழந்தைக்கு காய்ச்சல்.
புரட்சி (புரட்டாசி) வருகிறது.
கோழிகறி இன்றும் உண்டு.
மூன்று லோடு துவைத்தல்.
சரோஜா போர்.
ப்லோக் எழுதனும்.
கலைஞர் டிவியில் இன்று புது படம் என்ன?

Monday, July 7, 2008

சப்பைக் கட்டுத்தமிழ்

சப்பைக் கட்டுத்தமிழ்

விரும்பினால்
நாவல்கள் பிடிக்கும்
காதல் போரடித்த காரணமா தெரியவில்லை!
மற்றவர்கள்
வரலாறு என்றது சோகமானது
பலர் மூர்க்கம், பலர் நாற்றம்
நடித்தது?
எப்படி
இவ்வளவு சப்பைக் கட்டுகள்?
என் சப்பைக் கட்டுத்தமிழ்!

Friday, July 4, 2008

சலவை

Read somewhere!

எல்லோரும் நல்ல ட்ரெஸ் போடறாங்கோ

இன்னும் எனக்கு வேலை கிடைக்கவில்லை!

சலவை

Thursday, July 3, 2008

எண்ணங்கள்!

புத்தி,ஞானம்,அறிவு
மனதிற்கும், மூளைக்கும் உள்ள
இருபொருள்வாதம்
எங்கும் பிரிக்கவில்லையே?
எண்ணங்கள்!