வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான். இரண்டு ஆஸ்கார்கள். அருமை.
நிச்சயம் கிடைக்கும் என்று நம்பியவர்கள் தமிழர்கள்.
நிஜமாக உங்கள் பக்கம் அம்மா (க்கள்) உள்ளனர். நீங்கள் சொன்ன ஹிந்தி பட வசனம்... மேரி பாஸ் மா ஹே.
ஒரு இந்தியன் ஆஸ்கர் வாங்குவதை காண வேண்டும் என்ற என் கனவும் நிறைவேறியது. கமலை நான் ஒரு பேச்சுக்கும் நம்பவில்லை. அது வேறு விஷயம்! ;-)
ஈழம் குறித்து நீங்கள் பேசியிருக்கலாம்... ஏ.ஆர்.ரகுமான்... உலகத்தின் எம்மூலையிலும் கருத்து எதிரொலித்திருக்கும். அமைதி அன்பு வழியில் தான் உலக அமைதி வரும் என்பதை எவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் சொன்னீர்கள்!
ரஹ்மானும் ஸ்லம் வாழ்க்கை மாதிரி தான் இந்துவாக திலீப் என்ற பெயரில் பிறந்து பிறகு முஸ்லீமாக வளர்ந்து... வாழ்ந்து பிறகு சினிமாவில் வளர்ந்து, இந்த இடத்தை பிடித்துள்ளார். வெறும் பத்தாம் வகுப்பு தான். அவர் பலரை இப்போது படிக்க வைக்கிறார். சில இன்ஜினியர்கள் மற்றும் டாக்டர்கள் உருவாக காரணம் அவர். என் கணவர் மூலம் விவரம் தெரிந்தது. மதம் சார்பு இருந்தாலும், அவர் நல்லவர்.
என்ன ஓர் மனக்குறை, ஏழை வீட்டில் பெண் எடுக்காமல், ஒரு பணக்காரியை கட்டினார். ஒரு சராசரி ஆள் என்பதை காட்டினார்.
இன்னொரு விஷயம், ஏ.ஆர்.ரகுமான்னோடு இருக்கும் (பாட்டு வரிகள் மாற்றப்பட்ட விசயத்தில்) கருத்து வேறுபாடு காரணமாக, குல்சார் அமெரிக்கா செல்ல விரும்பவில்லையாம். என்ன ஒரு வித்தியாசம்!
இளையராஜா மனமுவந்து பாராட்டினால் தகும்!
*********
தமாஸ் பதிவு.... ஆஸ்கார் நாயகன் கமலுக்கு விருது இல்லையா?
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
6 hours ago