Showing posts with label ஹிந்துக்களும் மதவாதமும். Show all posts
Showing posts with label ஹிந்துக்களும் மதவாதமும். Show all posts

Wednesday, November 26, 2008

ஹிந்துக்களும் மதவாதமும்

நான் நேற்று இரவு என்.டி.டிவி நிகழ்ச்சி ஒன்றில் இரவு எட்டரை டு ஒன்பது மணிக்கு ஸ்ரீநிவாசன் ஜெயின் தொகுத்து வழங்கியது... எப்படி சாத்வி பிரக்யா அவர்கள், ஹிந்துக்களின் எண்ணங்களை மதிக்காமல், அடிக்கு அடி என்ற விதத்தில், ஆர்மி ஆள் ஒருவர் துணையோடு, தன்னை தானே சங்கராச்சார்யா என்று பறை சாற்றிக்கொண்ட ஒருவரோடு இணைந்து, அவர் சொற்படி நடத்தியதாக விவரம்.... மல்கவ் மற்றும் சூரத் வெடிப்பு. உண்மையோ பொய்யோ, இது வரை நடக்க விட்டிருக்க கூடாது. எதற்காக இது வேண்டும்? இன்னொரு விடயம்... ஆர்.எஸ்.எஸ் ஆட்களை கொள்ள, ஐ.எஸ்.எஸ். பணம் கொடுத்தார்களாம் இவர்களிடம்... எங்கே போயிற்று மதம் வாதம்?

அத்வானி அவர்கள் பாபர் மசூதி இடிப்பு சமயத்திலும், அதை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வர வாஜ்பாயுடன் சேர்ந்து ராமர் கோவில் ரத யாத்திரை செய்து பயன் படுத்திக்கொண்டார். செல்வி ஜெயலலிதாவும், இந்தியாவில் ராமர் கோவில் கட்டாமல், எங்கு கட்டுவார் என்றார். நான் அப்போதே சொன்னேன், ஸ்ரீலங்காவில், மலேசியாவில், சிங்கபூரில் எல்லாம் ஹிந்துக்களின் கோவில் உள்ளது, உலகில் எங்கு தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கு தமிழ் கடவுள் கோவில் உள்ளது. ஹிந்துக்கள் வாழும் இடத்தில் ஹிந்துக்கள் கோவில். ஆனால், எதற்கு ஒரு மசூதி மீது கட்ட வேண்டும்? பாலக ராமர் சிலை ஒன்றை உள்ளே சென்று வைத்துவிட்டால், போதுமா?

நாங்கள் வேலை விசயமாக அமெரிக்கா சென்ற போது சில சர்ச்சுகளில் உள்ளே சென்று பார்க்க அனுமதி உண்டு. இந்தியாவில் கோவாவில் மட்டும் நடக்கும்... சென்னை சாந்தோமில் சுற்றுலாத்தலமாக இருப்பதால் ஒ.கே. காசு கேட்பார்கள், வெளியே உட்கார்ந்துக்கொண்டு.

நாங்கள் அம்ரிட்சருக்கும் போய் உள்ளோம். அஜ்மீர் ஷேரிப்பிர்க்கும் போய் வந்தோம். நல்ல மரியாதை. பெண்களுக்கு அருமையான பாதுகாப்பு.

முதலில் ஜாதி கொடுமைகளை களைய பாருங்கள்.

அஹிம்சை தான் வாழ்க்கையில் வேண்டும். அமைதி வேண்டும்.

கேடு கெட்ட உலகம் இதுங்க.

இவர்கள் இப்படி செய்வதால், நாட்டில் உணவு பஞ்சம் தீருமா?

கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு படிப்பறிவு வருமா?

அரசியல்வாதிகளின் சொத்து அனைத்தும் பிடுங்கி, ஏழைகளுக்கு, தேவையானதை செய்ய வேண்டும். அதற்க்கு கடவுள் அருள் புரியட்டும்.

*************

நல்ல பதிவு ஒன்று இங்கே அண்ணன் வாஞ்சூர் அவர்கள் எழுதியது...

சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்