தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று அமேரிக்காவில் இருக்கும் சிலருக்கு வியப்பு வரும் போது எங்களுக்கு எப்படி இருக்கும். ;-)
ஸ்ரீ லங்கா பிரச்சனை வைத்து வோட்டு போட்டுளார்கள் என்கிறார்கள். தெரியவில்லை.
கடைசி ஒரு மணி நேரத்தில் பத்து சதவிகிதம் வாக்கு பதிவு. எங்கேயோ ஒரு ப்ராப்ளம்... தமிழ்நாட்டில் 90% ஐந்து சதவிகிதம் தான் எப்பவும் வெற்றி மார்ஜின். சரி சரி நாளை காலை பதினோரு மணிக்கு தெரிந்து விடும், எல்லோர் ஆட்டமும்.
35-5, 25-15, 20-20 என்னவோ நடக்குது! சரி விஜயகாந்த் கட்சி என்ன ஆகும்?
சென்ற முறை மாதிரி இல்லாமல் 72% வோட்டு. 10% அதிகம். அப்போ ஆளும் கூட்டணிக்கே லாபம் எனலாம்.
*************
தேர்தல் முடிவுகள் மாதிரி இந்த ப்ளஸ் 2 முடிவுகள் இருக்கு. எங்க வீட்டு பக்கத்தில் தேறாதே கேஸ் என்பவர்கள் எல்லாம், நல்ல மார்க் வாங்கியிருக்காங்க. அதுக்காக, நல்ல படிச்சவங்களை குறை சொல்லலே. எதோ எங்கேயோ இஷ்டத்துக்கு மார்க் போடறாங்க! கணக்கில் எனக்கு ஒரு மார்க்கில் சென்டம் போச்சு அந்த காலத்தில்.... டிகேட். (இதுக்கும் இரு முறை செக் செய்து பார்த்தேன்.... என்னை பார்த்து காப்பி அடிச்சு அன்பு கூட சென்டம் எடுத்திருந்தாள்... அது தாங்க தமிழ்நாட்டு போர்ட் சிஸ்டம்... ;-))
குறைவான மார்க் வாங்குனவுங்க கவலை படாதீங்க. அதை வச்சு, கிடைக்கும் கோர்ஸ் படிச்சு, பெரிய ஆள் ஆகலாம் நீங்க. இந்த காலத்தில், சீட்டு கிடைகிறதே பெரிய விஷயம்.
ஏதாவது டிகிரீ முடிச்சாலும்... ஐ.ஐ.எம் கோர்ஸ் படிச்சு பெரிய ஆள் ( அண்ணன் நரசிம் அவர்கள் மாதிரி...).. இல்லே பரிசல் அண்ணன் கிட்டே சொல்லி திருப்பூரில் வேலை வாங்கலாம்.
என்.ஐ.ஐ.டி கோர்ஸ் இருக்கு கம்ப்யுட்டர் தொழில் குறையாது, திறமை வளர்திடுங்க. பேங்க் வேலை... அப்புறம் இருக்கவே இருக்கு கவர்ன்மென்ட் ஜாப். நானும் ரெஜிஸ்டர் செஞ்சு ஆறு எழு வருஷம் ஆச்சு. ஒரு வேலையும் வரலே.
இப்போ டைம் லிமிட் ( வயசு வச்சு ) ஆகிடுமோன்னு பயம் தான்.
சொந்த தொழில் இருக்கு... கவலை இல்லே.
******************
அப்புறம் நெஞ்சை உறைய வைக்கும் விளம்பரம்...
பெண் சிசு கொலை பற்றி ஒரு விளம்பரம்
This is not our House
5 days ago



2 comments:
Someone joked that I cannot even enter IIM. C'mon I have done one marketing course for 2 days at IIMB. ;-)
வினிதா, படிச்சு முடிச்சு வேலை கிடைக்காட்டியும் ஜாலியா படுத்து தூங்கலாம். என்ன பிரச்சனை ?
Post a Comment