Thursday, March 5, 2009

குஷ்பு இட்லி

குஷ்பு இட்லி செய்வது பற்றி விளக்கவுரை எங்காவது கிடைக்குமா என்று தேடினேன். ஹுஹும்ம்... ஒரு பெரிய சீக்ரட் அசைன்மெண்ட் போல இருக்கு.

வெந்தயம் அதிகம் போட்டு (ஊற வைத்து ஆட்டினால்) எப்போதும் போல உளுந்து போட்டு, இட்லி (குண்டா) தட்டில், துணி போட்டு ஊற்றி ஆவி வர வைத்தால் போதும்... (குக்கரில் செய்தால் தட்டையாக தான் வரும்).

எனக்கு தெரிந்த வரை, மதுரை பஸ் ஸ்டாண்டில் தான், முதன் முதலில் இப்படி கூவி விற்றார்கள், ஒரு எட்டு வருடம் முன்பு இருக்கும்... (இல்லே சின்ன தம்பி வந்த டைம் ஆ?)

இன்றும் அங்கு விற்கும் சந்தகம் / சந்தவை அருமை என்கிறார்கள் நண்பர்கள். தேங்காய்ப்பால் அதன் மேல் போட்டு சாப்பிட்டால் தான் அதன் தனி டெஸ்ட். வீட்டிற்கு வாங்கி சென்று (பத்து ரூபாய்க்கு போதும்!) வெங்காயம் போட்டு தாளித்து விட்டால், குடும்பத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

********************

நரசிம் அவர்களின் பதிவில் படித்தேன்...

பெண்.. பிரிவுத்துயர்.. பார்வை..

எளிதில் விளங்க இந்த வரிகளைப் படித்து விட்டு...

நகக் கீற்றென் இருக்கும் நிலவுக் கீறல் வளர்ந்து,வளர்ந்து முழுநிலவாய்,பெளர்ணமிப் பந்தாய் வான்வெளியில் உருள்கிறதே.. அதுபோலத்தான் என்காதலும் காமமும்.. மெல்லிதாய் பூத்து,வல்லியதாய் வளர்ந்து,காமப் பந்தாய்உருண்டு, என்னை உருட்டி,உழுக்கி பின் கை வளையல்கள் கூட நெகிழ்ந்து விழும்அளவு என்னை உருக்கி விட்டது..அவரின் அருகாமைச் சுகம் அற்றுப்போனதால் மரம்தப்பிய கசங்கிய இலைபோல ஆகிவிட்டேன். என் தலைவனின் தீண்டல் இல்லாமல்துவண்டு போன என் நிலை கண்டு வானம் கூட அழுது மழையாய் பொழிகிறதே.. என் காதல் தலைவனின் காதல் விளையாட்டுகள் இல்லாமல் வாடிப்போய் வருந்தும்என்னைவிட என் மேல் இரக்கம் கொண்டு எனக்காக இந்த ஊர் மக்களும்வருந்துகிறார்களே...

எவ்வளவு அழகியல் தெறிக்கும் வார்த்தைகள்..

அந்த பாடல்...

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி! மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக்கண்ணும்
அவர்திறந்து இரங்கும் நம்மினும்
நம் திறந்து இரங்கும்,இவ் அழுங்கல் ஊரே.

புலவர்: பெருங்கண்ணன்.. முல்லைத் திணை பாடல்

//ஒரு பெண் தனியாக, பஸ் ஸ்டாப்பிலோ,தியேட்டரிலோ காத்திருந்தாலே சமூகத்தின் வறண்ட மனநிலை மனிதர்களின் தேவையற்ற பார்வையை தவிர்க்க முடிவதில்லை.//

அவர்கள் குடும்பத்தில் பார்க்கிற மாதிரி பெண்கள் இல்லாவிட்டால் தான் ( இந்த தவறு, சமுகம் சொல்லிகொடுப்பது ) ஏற்படும்.

பஸ் பிடிக்கும் அவசரம், இல்லை, மாதக்கடைசி செலவு என்று இருப்பார்கள்.

பார்வை எங்கோ இருக்கும்.

***********************

ஆமாம் இப்போதெல்லாம், தமிழ் ப்லோகர்கள் எல்லாம், தங்கள் பெயரில் வலைமனை வைத்திருக்கிறார்கள். செலவு குறைவா?

2 comments:

narsim said...

நன்றி..

UMA said...

எங்கள் நெய்வேலி பஸ் ஸ்டாண்ட் ஹோட்டெலில் குஷ்பு இட்டெலி கிடைக்கிறது.மிகவும் மெதுமெது என்று இருக்கும்.
neysamy.blogspot.com