Tuesday, June 9, 2009

வித்தியாச காதல் மடல்

நரசிம் அவர்களின் பதிவில், ஒரு வித்தியாச காதல் மடல் படித்தேன்...

வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா,

*******

அருமை!

*******

பெண்ணாக இருந்தால் காதல் கடிதம் எதாவது வகையில் ( கடிதம் தான் வருமென்று எதிர் பார்க்க வேண்டாம்...) வந்திருக்கும்.

காதல் பார்வை - மாமன் மகன்கள், உறவின் தையிரியம்!
காதல் பேச்சு - கல்லூரி ஆண்கள் , பள்ளி - பையன்கள்
மற்றும் பல வாராக, கல்யாணம் செல்லும் போது, ஒரு விழாவிற்கு செல்லும் போது, எதோ பேச வேண்டும் எனதுடிக்கும் கண் - பார்வைகள்...

***********

வெளிநாட்டில் - சினிமா, நண்பர்கள் கோட்டம், டேட்டிங் (?) போல உதாரணங்கள். அப்புறம் பர்சில் எவ்வளவு காசு இருக்கு என்பதை பொறுத்து, யார் செலவு செய்கிறார்கள் என்பதை பொறுத்து இருக்கும்?

வித்தியாசம்!

கடைசியில் கல்யாணம் என்று வரும் போது, காதல் ஒப்புதல் பெற ஆண் தான் கதறவேண்டும்... பெண்ணுக்கு, கொஞ்சம் ஈசி. பெண்ணின் பெற்றோருக்கு பையன் நல்லவன், வைத்து காப்பாற்றுவான் என்று நம்பிக்கை வந்தால் போதும்!

சரி...

காதல் கல்யாணத்திற்கு பிறகு எப்படி இருக்கும்?

இருவரின் குடும்பத்தாரும் இணங்கி போனால், நன்று. அமிர்தம் தான்!

இல்லாவிட்டால், முள் மீது விழுந்த சேலை மாதிரி, ஒவ்வொரு முள்ளாக, பார்த்து பார்த்து எடுக்க வேண்டும். அன்பு தழைத்தோங்கும்!

*******

எனக்கு காதல் இமெயில் மட்டும் தாங்க வந்தது... என்னவரிடம் இருந்து, கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு!

2 comments:

Raju said...

நல்ல இருக்கு சகோதரி வினிதா. :-)

உங்களுக்கு வந்த இண்டரெஸ்டிங் 'கடி'தங்கள் பப்ளிஷ் பண்ணுங்க!

priyamudanprabu said...

எனக்கு காதல் இமெயில் மட்டும் தாங்க வந்தது... என்னவரிடம் இருந்து, கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு!
///

ம்ம்ம்

வருத்தமா?? சந்தோசமாஆ??