Friday, December 5, 2008

ஹிந்தி படிப்பது பற்றி

ஹிந்தி என்பது நாட்டின் மொழி ஆகிவிட்டது. நான் டிவி பார்ப்பது மூலம் சொல்கிறேன்.

How can we live without Kyu Ki Saas bi Kabhi Bahu thi?

தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயம் திணிக்கப்படுகிறது என்று சொன்னார்கள். எத்தோ ஒரு பள்ளியில். எங்கே என்று தெரியாது... Erode?

நேற்றிலிருந்து பெங்களூரில் ஐ.ஐ.எம்மில் ஒரு இரண்டு நாள் கோர்ஸ் ... கணவரோடு வந்தேன். பல மொழிகள். ஹிந்தி பேசுவதால்... அட்லீஸ்ட், ஆங்கிலத்தை தவிர ஒரு மொழி, கலந்து உரையாட. Hindi கட்டாயம் இல்லை. நல்ல விஷயம் ... மகிழ்ச்சி... நான் தமிழர் என்று நினைத்து ஒருவரோடு பேச, அந்த பெண், சாரி "நன்கே தமிழ் பரல்லா..." என்றார். At least there was English to converse.

சென்னையில் குழந்தைகள், கணவரின் அப்பா அம்மா பார்த்துக்கொள்கிறார்கள். இன்று மதியம் கிளம்பி அவர்களும் பெங்களூரில். ட்ரைன் பிடிக்க சீக்கிரம் போனால் சரி.

மொழி பற்றி... என் கணவருக்கு உருது நன்றாக பேசுவது எழுதுவது வரும். நாங்கள் இருவரும் தமிழ் தான் பேசிக்கொள்கிறோம். குழந்தைகள் எப்போதும் ஆங்கிலம் தான். தமிழ் பேசுகிறார்கள். ஹிந்தி நன்றாக படிக்கிறார்கள். இது அவர்களுக்கு மூன்றாம் லாங்குவேஜ். பக்கத்து வீட்டுக்காரர்கள் கன்னடம் பேசுகிறார்கள். அதனால் குழந்தைகள், கன்னடமும் சிறிது பேசுவார்கள்.

நாங்கள் நண்பர்களோடு சென்னையில் கட்டாயம் இங்கிலீஷ் தான். தமிழில் பேசினால், சுத்தமாக, கலப்படம் இல்லாமல் பேச முயற்சி செய்தால்... வினோதமாக பார்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை தேவை இருப்பின், கட்டாயம் இல்லாமல், ஹிந்தி படிப்பது நன்று.

ஒருவருடைய பதிவு... நான் இட்ட கமன்ட்... எப்போதும் போல பல வித பாடங்கள், பதில்கள். எதோ ஒரு பள்ளியில் கட்டாயம் ஹிந்தி படிக்க வைக்கிறார்கள், என்று எழுதி இருந்தார்.

நான் இட்ட கமன்ட்...

Please tell me one thing, if those kids who study there, end up getting a job only in North India, how would they survive?

My kids study in a school, where Tamil is also compulsory, apart from a third language, which can be Hindi/French or whatever.

Different thinking is needed to survive in this world.

Also half the Central secretariat is filled with Tamilians only in Delhi, which has more than 10 lakhs Tamil population.


சில பதிலுக்கு பதில்கள்... நல்ல விஷயங்கள்... நன்றி...

தேவை இருப்பின் கற்றுக்கொள்வதல்ல நம் பிரச்சனை. வலுகட்டாயமாகத் திணிப்பது தான் பிரச்சனை. அப்படி நாம் வட நாடு சென்று தான் ஆக வேண்டும் என்றால் ஹிந்தி ஒரு மாற்றுப்படமாக படிக்கலாம், இல்லை வெளியில் பயின்றுகொள்ளலாம். அவனவன் ஸ்பானிஷ் போன்ற மொழிகளையே 24 நாட்களில் கற்றுக்கொள்கிறார்கள்.

ஏன் தேவையில்லாமல் திணிக்க வேண்டும்? அதுவும் நம் தாய் மொழியை விட்டுவிட்டு ? :-))

இந்தி பேசாத இந்தியை தாய்மொழியாகக் கொள்ளத இந்திய மக்களிடம் இந்தி மொழியையோ பிறமொழியோ திணிப்பவர்கள்தான் உண்மையான “தேசத்துரோகிகள்” “மக்கள் விரோதிகள்” நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் .... ;-)

முற்றிலும் உண்மை. நம்ம ஊரிலும் வட நாட்டு மாணவர்கள், ஏன் ஆப்ரிக்கா மாணவர்கள் , சீனா மாணவர்கள் என்று நிறைய வந்து பயில்கிறார்கள். அவர்கள் எல்லாம் வாழவில்லையா? :-)

தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயப்பாடமாகும் என்று கனவிலும் கூட நான் கருதியதில்லை. இப்படி நாம் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருந்தது தான் காரணம் என்று நினைக்கிறேன். :-(

அது போலவே "தேவை" என்று வரும்போது தமிழன் ஹிந்தியும் பேசுவான், கொரியனும் பேசுவான் .... :-))

அதனால் இந்த இந்தி படிச்சா வடநாட்டுல போய் பொழைச்சுக்கலாம் என்ற பழைய பல்லவியை பாடுவதை நிறுத்துங்கள் முதலில்... ;-)

...உண்மை. ஹிந்தி நண்பர்களைச் சந்திக்கும்பொழுது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி என் தமிழர்களுக்கு ஹிந்தி தெரிவதில்லை? நீங்கள் இந்தியர்கள் தானே? என்று....அப்பொழுதெல்லாம் நான் அவர்களுக்கு எடுத்துக்கூறி, நாங்கள் இந்தியர்கள் தான் , ஆனால் ஹிந்தியர்கள் இல்லை என்று.... :-()

முடிவுகள் ஒன்று... தேவை இருப்பின் படிக்கலாம்...

Be a Roman in Rome, on a need basis.

நேற்று இரவு, ஒரு வீட்டிற்கு இரவு உணவிற்கு சென்றோம். உருது மட்டும் பேசிக்கொண்டார்கள். ஹிந்தி தெரிந்ததால்... தப்பித்தோம்.

Atleast, I could well come out of the embarassing situation, even being in South India.

3 comments:

நசரேயன் said...

/*அதனால் இந்த இந்தி படிச்சா வடநாட்டுல போய் பொழைச்சுக்கலாம் என்ற பழைய பல்லவியை பாடுவதை நிறுத்துங்கள் முதலில்... ;-)

...உண்மை. ஹிந்தி நண்பர்களைச் சந்திக்கும்பொழுது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி என் தமிழர்களுக்கு ஹிந்தி தெரிவதில்லை? நீங்கள் இந்தியர்கள் தானே? என்று....அப்பொழுதெல்லாம் நான் அவர்களுக்கு எடுத்துக்கூறி, நாங்கள் இந்தியர்கள் தான் , ஆனால் ஹிந்தியர்கள் இல்லை என்று.... :-()
*/
அருமையா சொன்னீங்க

DIVYA said...

Hindi is definitely needed, lucky me, I did Rastrabaasha course at my school, other than 2nd lang. Tamil.

Helped me in Ahmedabad. Never new I would end up in.

Now half my co-workers are Hindi speaking folks.

-Divya

தமிழ் said...

/தேவை இருப்பின் கற்றுக்கொள்வதல்ல நம் பிரச்சனை. வலுகட்டாயமாகத் திணிப்பது தான் பிரச்சனை/

அருமை