Friday, December 5, 2008

பூக்கள்

பூக்கள் தான எத்தனை வகை! பெங்களூரில் மல்லிகை முழம் பத்து ரூபாய். கனகாம்பரம் இல்லை. ஆனால் ரோஸ் விலை கம்மி ஒன்று ஒரு ருபாய் என்று கொடுத்தார் ஒரு பெண். சென்னையில் கொள்ளை.

நாங்கள் தங்கியது ஒரு கெஸ்ட் ஹவுஸ். என் கணவரின் ஆபிஸ் ஏற்பாடு செய்து கொடுத்தது.

மிச்சிகனில் இருக்கும் ஒருவர் வந்து கோர்ஸில் உதவி செய்தார். வெளிநாட்டு படிப்பு எப்படி இருக்கும் என தெரிந்தது.

ஒரு வழியாக மார்க்கெட்டிங் கோர்ஸ் முடிந்துவிட்டது. புதிய விஷயம் கற்றேன். என் எம்.பி.ஏ படிப்பிற்கு உதவும். அப்புறம் பயோ டேட்டாவில் ஐ.ஐ.எம்மில் ஒரு கோர்ஸ் என்று போட்டால், மதிப்பு தான்.

இப்போது கண்டோன்மென்ட் அருகில் கணவரின் சொந்தம் ஒருவர் வீடு இருக்கிறது, அங்கு செல்கிறோம். அப்படியே குழந்தைகளை அழைத்து வரும் மாமனார், மாமியார்... ரிசீவ் செய்து ... பத்து மணி ஆகும்... எம்.ஜி.ரோட் அருகில் ஒரு லாட்ஜ். ஞாயிறு இரவு ட்ரைன் டிக்கட் கிடைத்து விட்டது.

இரண்டு நாட்கள். என் நண்பர்கள் இங்கு உள்ளனர். பார்க்க வேண்டும்.

பெங்களூரில் சில்க் சாரிகள், அலங்கார் பிளாசாவில் துணி... எம்.டி.ஆர். சாப்பாடு... கணவருக்கு பிடித்த ஹோட்டல்... என போகும் நேரம்.

************

என் ஹிந்தி பற்றி பதிவிற்கு பதிலுக்கு பதிலாக ரமேஷ் அவர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார்.

ஹிந்தி ரஜினிகாந்த் நான்

எதற்கு அந்த பாட்டு போட்டீர்?

1 comment:

மீன்துள்ளியான் said...

akka hosur pakkam niraya rose payirduraagna...athanala rempa vilai kuraivu...