Saturday, July 25, 2009

புன்னகை

பிறந்த குழந்தையின் புன்னகை
எதற்கும் ஈடில்லை
வாழ்வதற்கும் ஒரு அர்த்தம்
கற்பிக்கும் மலர்ந்த முகம்
அப்பா அம்மவின் கவலை
தீர்க்கும் மருந்து
வளரும் பருவத்திலும் அதே
புன்னகை தீயாய் பரவும்
ரயில் பயணங்களில்
நல்ல மார்க் எடுக்கையில்
கடி ஜோக் கேட்கையில்
நண்பர்களோடு அரட்டையில்
அழகான அம்சமான
ஆணோ பெண்ணோ கடக்கையில்!
ஆனால் எதற்கும் ஈடில்லை
தாயின் மலர்ந்த சிரிப்பு
குழந்தை வெற்றியின் புன்னைகைக்கு
சிறு விளையாட்டாகட்டும்
அது மதிபெண்ணாகட்டும்
இல்லை தான் விரும்பும்
மன வாழ்க்கை கிடைத்த சந்தோசமாகட்டும்
பேரக்குழந்தை கையில் கொடுக்கும்போதும்
ஆனந்தம் அற்புதம்!

:-)

3 comments:

Raju said...

ரொம்ப அருமையா இருக்குங்க கவிதை!

ஊருக்கு போய் வரும்போது, வலியனுப்புற எங்கம்மா புன்னகை இது வரை சூப்பருங்க!

கல்யாணம் ஆனப்புறம் என்னவோ...

Ramesh said...

அட்டகாசமான கவிதை!

Hindu Marriages In India said...

நல்ல கவிதை