எதற்காக பதிவுகள் எழுதுகிறோம்? ஒரு நோக்கம் வைத்து தானே?
சரி, அந்த நோக்கம் தவறாக இருந்தால், ஆணாக இருந்தாலோ, பெண்ணாக இருந்தாலோ, அந்த பதிவை எடுத்து விட வேண்டியது தானே?
ஒரு பெண் எழுத்தாளர், சொல்லுகிறார், என்னிடம் கேட்காமல், ஒருவர், தன் நண்பியிடம் நக்கல் செய்துவிட்டார் என்று. அதற்காக ஒரு பதிவு போடுகிறார், தவறு என்றும் தெரிந்தும். மன்னிப்பு ஏற்கப்பட்டு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு மற்றும் அதன் தொடர்புடைய பதிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன. இப்போது இன்னும் அந்த கேனத்தனமான பதிவு உள்ளது. நக்கலா?
இடையில் சில நாட்டாமைக்காரர்கள், விசயத்தை திசை திருப்புகிறார்கள். தனி மனித தாக்குதல் மற்றும் ஆங்கில புலமை குறித்து பேசுகிறார்கள்.
ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள். சுண்ணாம்பு கேட்ட இசக்கி ஒரு பொருத்தமான கதை...
வம்பில் மாட்டிக்கொண்டு களி தின்ன போகாமல் இருந்தால் நலம்.
என் கணவரின் நண்பர் ஒரு பிரபலமான வார இதழில் எடிடோரியலில் வேலை செய்கிறார். நிறைய ஆட்கள் எழுதுவதில் கிசு கிசு என்று உண்மைக்கு புறம்பான சில தகவல்கள் சொல்லப்பட்டு உள்ளன. நான் வெளியிடப்போவதில்லை. சிலருக்கு மட்டும் இது புரிந்திருக்கும்.
This is not our House
3 weeks ago



1 comment:
Couldn't stop laughing reading this.
Nice.
Nonchalance is the word.
Post a Comment