Tuesday, January 13, 2009

கோபங்களும் தீர்வுகளும்

நேற்று அந்த சோதா அக்பர் பெண் பற்றி விஜய் டிவியில் பார்த்தேன். எதோ டுபாகூர் போல இருக்கு கோபிநாத். இதை வைத்து, நீங்கள் கப்சா நடந்தது என்ன என்று ஒரு தனி ப்ரொக்ரேம் போடலாம்.

உரைநடைகளில் தங்கள் நண்பர்கள் விலாவரியாக விவரித்த கூற்றுகளை, கோடிட்டுக்காட்டுவது தமிழர் மரபு. சாலமன் பாப்பையா, அவ்வை ஷண்முகம் போன்றவர்கள் இதில் கை தேர்ந்தவர்கள்.

நானும் கல்கி, குமுதம், ஆனந்த விகடன் போன்ற பிரபல இதழ்களில் நிறைய வருடங்களாக எழுதுகிறேன் வேறு புனைப்பெயரில். ஆசிரியர் குழுக்கள் எனக்கு மிகவும் பரிச்சியம். கதைகள் கட்டுரைகள் எழுதுவது யார், என்று தெரியும். ஆண் வடிவில் பெண்ணா, அல்லது பெண் வடிவில் ஆணா என்பதும் கூட.

ஒரு பெண் எழுதுறாங்க, அவர் இவரை பற்றி குறிப்பிட்டு எழுதும் முன், பதிவு போடும் முன் இவரிடம் கேட்டிருக்கவேண்டுமாம்.... சரி அவர் தான் இவரிடம் அது பற்றி முதல் ஆளாக கேட்டுவிட்டார் அல்லவா? அதன் பிறகு ஏன் மூன்று மாதங்கள் கழித்து எழுதவேண்டும்? அது அது இல்லை , அது மாதிரி என்று சொல்லிவிட்டார் அல்லவா? பின்னும் ஏன் நக்கல்? இன்னும் ஏன் அந்த பதிவு வாழ்ந்துக்கொண்டு இருக்கு?

தவறு இருப்பின் சம்பந்தப்பட்டவர் மறக்க வேண்டும், அந்த பதிவு போட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், இவ்வளவு வளர விட்டிருக்க மாட்டேன்.

ஒன்றை கவனிக்கவும், நான் யாருக்கும் சப்போர்ட் செய்யவில்லை. நியாயம் உள்ள பக்கம் தான் ஜெயிக்கும்.

அது இல்லாததுனால் தானே இவ்வளவு பதிவுகளும் தூற்றுகளும், குழாயடி சண்டை போல?

இதற்கெல்லாம் காரணம் வலையுலக மார்கெட்டிங் என்ற பதிவாக இருக்கலாம்.

இந்த பதிவை பாருங்கள், எவ்வளவு மனம் நொந்து எழுதுகிறார் திவ்யா.

பதிவுபோதை அய்யா நீங்க நலமா

ஆமாம், வேலை நேரத்தில் ப்லோக் பக்கம் வந்து டைம் வேஸ்ட் செய்பவர்களை, வேலையில் இருந்து தூக்கிவிடமாட்டார்களா? எச்.ஆர். பாலிசி என்ன சொல்லுது? எல்லாம் காலேஜ் முதல் இந்த ப்ராக்சி செய்யும் வேலை.

எப்படியோ, பார்த்து நடந்து கொள்ளவும்.

************

தமிழ்மணத்தில் போட்ட ஓட்டுக்களும் செல்லாமல் போய் விட்டன. மீண்டும் டைம் வேஸ்ட் பண்ணனுமா? என்ன கண்றாவியோ!

No comments: