Friday, January 16, 2009

டிவியும் பொங்கல் திருவிழாவும்

டிவியும் பொங்கல் திருவிழாவும் ... வந்து போய்க்கொண்டு இருக்கின்றது...

டிவி மூலம் தான் நாம் எந்த விழாவும் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறோம்.

நான் கல்யாணம் செய்து பத்து வருடங்கள் ஆகிறது. எதையும், எதிர்பார்த்து விழா என்று செய்வதில்லை. சில சமயம் அப்பா அம்மா வருவார்கள்.

சொந்தங்கள் வாரம் ஒருவராவது காலையில் குளித்து ரெடி ஆகி செல்ல வருவார்கள். ஒரு பிட் ஸ்டாப் என்பார், கணவர். இருந்தாலும், ஊரிலிருந்து ஏதாவது எடுத்து வருவார்கள், மகிழ்ச்சியின் பகிர்தல்கள்....

********************

அமிதாப் பச்சனின் ப்லோக் படித்தேன். எப்படி மீடியா அட்டகாசம் செய்கிறது பாருங்கள்.

இது கொஞ்ச நாள் முன் என் நண்பர்கள் பற்றி சிலர் அடித்த கூத்து (அனைத்து வயதினரும்) ஞாபகம் வருது...

அவர் ப்ளோகில் நான் கமன்ட் போட்டிருந்தும், எதோ காரணம் எனக்கு தெரியவில்லை. இந்த ப்லோக் விலாசம் (உரல்) கொடுத்தால் இருக்குமோ?

ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற சேரிவாழ் கோடீஸ்வரன் படம் குறித்து, அவருக்கு வந்த கமண்ட்ஸ் எழுதியிருந்தார். பிற்பாடு, நேயர்களின் கருத்து கேட்டிருந்தார். அதை அவர் கருத்தாக பத்திரிக்கைகள் அளித்து விட்டன.

அமிதாபும் ஜோக்காக மன்னிப்பு கேட்கிறார்... (நண்பர் எழுதிய மன்னிப்பு கோருகிறேன் பதிவு தான் ஞாபகம் வருது)

அதை போலவே இன்னொரு விஷயம். அக்சய் குமார் என்ற நடிகர், பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்குபவர்... வருடம் 70 கோடிகள் என்கிறார்கள்... அமிதாபை மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டு, அமிதாப் தான் தவறு செய்தார் என்ற ரீதியில்... ஒரு போஸ்ட். இங்கே படியுங்கள்.

http://www.uaedailynews.com/entertainment/1592.html

என்ன கொடுமை இது? பாவம் வயதானவர், குளிரால் பாத்ரூம் போக எப்படி சிரமம் பட்டிருப்பார்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?

சிலர் அப்படி தான் திருந்தமாட்டார்கள்... பெயர், வாசகர் பார்வை, என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஒரு கிக் இல்லையா?

No comments: