Monday, December 29, 2008

மைசூர் பயணம்

மைசூர் பயணம் ஒரு மாதத்திற்கு முன் பிளான் செய்தோம்.

பெங்களூர் சென்ற போது ஐடியா கிடைத்தது. நாங்கள் மங்களூர் அலல்து கோவா தான் பிளான் செய்தோம். உங்களுக்கே தெரியும் கூட்டம் மற்றும், இந்த தீவிரவாதிகள் பயம்....

பெங்களூரை விட கொஞ்சம் சூடு.

சனி காலை எட்டரை மணிக்கு சென்று சேர்ந்தோம்.

உடனே குளித்து ரெடி ஆகி, பப்பே ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு... மைசூர் பேலஸ் முடித்தோம். லன்ச் அருகில் நார்த் இந்தியன் சாப்பிட்டோம். பிறகு அப்படியே சாமுண்டி ஹில்ஸ். நான் மட்டும் குழந்தைகளோடு கோவில் உள்ளே சென்று வந்தேன். சுடிதார் போட்டு உள்ளே சென்ற முதல் ஆள் நான் தான் என நினைக்கிறேன்.

ஹோட்டல் வந்து, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, டி குடித்தபின், நான்கு மணிக்கு கிருஷ்ணராஜ சாகர் டேம் பயணம். பிருந்தாவன் கார்டன்ஸ். ஆறு மணிக்கு மேல் டேன்சிங் பவுண்டன் என்றார்கள். ஏழு மணிக்கு ஆண் செய்தார்கள். சில பாடல்கள், வித விதமான வண்ண விளக்குகள். சில பாரீனர்கள் வந்திருந்தனர்.

இரவு வரும் வழியில் ஹெரிடேஜ் என்ற ஹோட்டலில் டின்னர். மீண்டும் நான் ரோடி பன்னீர். குழந்தைகளுக்கு இது அலுக்காதா?

இரவு வந்து தூங்கி, காலை ஆறரைக்கு எழுந்து, வெளியே சிறு வாகிங். குழந்தைகள் டிவியில் ஹிந்தி படம் பார்த்தார்கள். அவசரமாக சென்று ப்ரேக்பாஸ்ட் முடித்துவிட்டு, பத்து மணிக்கு... ஸ்ரீரங்கப்பட்டினம். ஒரு மணிக்கு மைசூர் திரும்பி, காமத் ஹோட்டலில் லன்ச். சவுத் இந்தியன் தாளி. மினி பூரிஸ் அழகாக கொடுக்கிறார்கள். பெங்களூரில் சாளுக்கியாவில் சாப்பிடுவது போல இருந்தது.

இரண்டு மணிக்கு ஹோட்டல். இரண்டு நாட்கள் டாக்சி சார்ஜ் ருபாய் ஆயிரத்து ஐந்நூறு. சென்னைக்கு பரவாயில்லை?

ரெஸ்ட் எடுத்து விட்டு, ஆறு மணிக்கு ரெடி ஆகி மைசூர் பயணம் முடித்தோம்.

மைசூர் டு பெங்களூர் வழியெல்லாம், செல் போன் வேலை செய்கிறது. மடிக்கணினியும் இண்டெர்நெட்டும் என டைம் சென்றது. நாங்கள் இருந்த 3 டயர் ஏசி கம்பார்ட்மென்டில் ஒரே சத்தம், பெங்களூர் விட்டு கிளம்பும் போது பதினொன்றே முக்கால். காலை ஆறேகாலுக்கு சென்னை வந்து இறங்கினோம்.

*******

ப்ரெட் ப்ரேக்பாஸ்ட் முடித்துவிட்டு கணவர் ஆபிஸ் சென்று விட்டார், புளியோதரை செய்துவிட்டு, நான் இண்டர்நெட்டில் ....

3 comments:

A N A N T H E N said...

:)

DIVYA said...

Looks like you had a nice trip! You have chopped half your pic? ;-)

Thangavel Manickam said...

சென்னையில், அறுபது கிலோ மீட்டர் தூரம் சென்று வர 750 ரூபாய் வாங்கி கொண்டார்கள்.

கோவையில் பதினைந்து கிலோ மீட்டர் சென்று விடுவதற்கு 150 ரூபாய் வாங்கிக் கொண்டார்கள்.