Thursday, December 18, 2008

சத்யம் தவறிய சத்யம்

ஏழைகள் வயிற்றில் அடிக்காதே சேர்மேன் ராமலிங்க ராஜு! சத்யம் ஒரு கே.10 ஸ்டாக். .டி. கம்பனி. இன்னும் அவர்கள் தான் ஓனர்கள் என்ற நினைப்பு. மிகவும் கீழ்தரம் மிகுந்த செயல் செய்தார்கள் ராமலிங்க ராஜு குடும்பத்தினர். 8.65% ஷேர்கள் தான் வைத்துள்ளார்கள். மற்றவை எல்லாம் வெளிநாட்டு முதலீடு, மற்றும் எங்களை போன்ற மக்கள் வைத்திருப்பது...

ஹைதராபாத் தலைமை இடம். ராமலிங்க ராஜு சேர்மேன். சிறு கம்பனியாக இருந்து வளர்ந்தது. நல்ல அரசியல் ஒத்துழைப்பு. டி.டி.பி. நாயுடு.

மச்சான் ராம ராஜு ஒரு டைரக்டர். ஒன்பது பேர் குழு - மேனேஜ்மன்ட். ஆறு பேர் இண்டிபெண்டன்ட் டைரக்டர்ஸ். வெத்து வேட்டுக்கள். வெளி நாட்டு ஆள் எல்லாம் ஓடி விட்டார்கள். கேடன் பரேக் சூதாட்டத்தில் பணம் பண்ணிவிட்டு. இப்போது ஒருவர் மற்றும் படிப்பு சமந்தப்பட்ட இடத்தில்,. அதுவும் ஐ.எஸ்.பியில் சொல்லிகொடுதுக்கொண்டு வேலை செய்கிறார்.
இன்னொரு .எஸ்.பி ஆள் டைரக்டர்!

கேடன் பரேக் 10 ஸ்டாகுகளை இஷ்டத்திற்கு விலை ஏற்றி, சேர் ஒல்டர்களுக்கு நாமம் போட்டான்.

மகன்கள் மேடாஸ் (சத்யம் திருப்பி போட்டால் SATYAM -> MAYTAS )... பராபர்டிஸ் நடத்துகிறார்கள்... மொத்த மதிப்பு பத்தாயிரம்... ப்ரோமொடர்களுக்கு 36.64% சொத்து அதில் உள்ளது.

அதை சத்யம் வாங்க வைக்க ... ரூ 6800 கோடிகள் கொடுத்து.. தான் பிரச்சனை. ரிஸ்க் குறைப்பது என்று ஒரு நடவடிக்கை. 6300 ஏக்கர் நிலம் உள்ளதாம்... அதற்க்கு ஏக்கருக்கு ஒரு கோடி... இன்னும் பணம் கூட பைசல் செய்யாது நிலம். லேண்ட் பேங்க். நாற்பது லட்சம் பெறாது ஒரு ஏக்கர்,
ஹைதராபாத் சுற்றி... முப்பது கி.மி. தள்ளி.

அது எதை காட்டுகிறது... ஊரான் வீட்டு வெண்ணை எடுத்து குடும்பத்திற்கு கொடுப்பது... இதன் மூலம் அவர்கள் குடும்பத்தில், மகன்கள் சத்யமில் டைரக்டர் ஆவார்கள்... மற்றும்... ரூ 2500 கோடிகள் அல்வா.

இப்போது ஒரு நாள் வீழ்ச்சியில்... ரூ 600 கோடிகள் அவுட்.

கொடுமை... அக்டோபர் 27 அன்று தான் 30 ஸ்டாக் வாங்கினேன் 165 ருபாய் ஒன்றுக்கு. பி.ஈ ரேசியயோ 5.



*************

கொசுறு.. ராமலிங்க ராஜு அப்பா ஒரு பெரிய சூதாடி. எனக்கு ஒரு நண்பர் சொன்னார், அவர் ஜெயித்த சத்யம் மில்ஸ் வைத்து தான் குடும்பம் பிழைத்தது....

5 comments:

மு மாலிக் said...

ஸ்டாக் மார்கெட் விசயம் சுலபமானதல்லவென்று கூறுகிறார்களே ..

நெடுங்காலமாக ஈடுபாட்டுடன் மிகுந்த ஆய்வில் ஈடுபட்டபின்புதான், அதில் முதலீடே செய்ய முன்வரலாம் என ஒருவர் கூறினார்.

அது தரும் மன உளைச்சல் பற்றி ஒருவர் பதிவுகூட போட்டிருந்தார்.

DIVYA said...

VERY NICE HIT FOR RAMALINGA RAJU. He should be packed off to Aghan with family!

செல்வராஜ் said...

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !

Anonymous said...

ராமலிங்க ராஜூ மட்டுமல்ல, அம்பானி உட்பட எல்லா முதலாளிகளும் மக்கள் சொத்தை வைத்து இப்படித்தான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பதே இந்த மோசடிகளை எதிர்ப்பதற்குறிய ஓரே வழி

வினவு

Thangavel Manickam said...

என்னடா இது, சத்யம் மேட்டரா இருக்கே என்று பார்த்தேன். இப்படியெல்லாம் நடந்து இருக்கிறதா...