Monday, May 25, 2009

லீவு முடிகின்றது

குழந்தைகளுக்கு லீவு முடிகின்றது! இன்னும் ஒரு வாரம் தான்.

இப்போதெல்லாம் நன்றாக தூங்கி எழுகிறார்கள்... எப்படி டைம் மாற்ற முடியும் என்ற பார்க்க வேண்டும்.

பள்ளிக்கல்வி எப்படி மாறிவிட்டது பாருங்கள். அந்த காலத்தில் லீவு ஹோம் வர்க் இருக்கும்... இன்னும் பல... பெரிய க்ளாசில் க்வேச்டியன் பேப்பர் ஆன்சர் எழுதி செல்ல வேண்டும்.

இந்த முறை, கோவையில் குழந்தைகள் ஒரு இடத்தில் ( சாய்பாபா காலனி - அப்துல் கலாம் அவர்களின் நண்பர் வீடு அருகில் ) ஸ்லோகா படித்தார்கள். என் கணவர் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை! அன்னபூர்னாவில் நோட்டிஸ் பார்த்து இடம் பிடித்தேன்.

***********

அப்பா அம்மாவுடன், சர்வம் படம் பார்த்தோம். குழந்தைகள் ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். எதோ ஒரு இங்கிலிஸ் படம் தழுவி எடுக்கப்பட்டது போல? ஒரு குழந்தை ஆக்சிடன்ட்டில் இறக்கும் வலி ஒருவனை மன நோயாளி ஆக்குகிறது. அதை சுற்றி ஒரு படம். மாஞ்சா கயிற்றில் பட்டம் விடாதீர்கள் ப்ளீஸ்.

முன்னார் மிக அழகாக தெரியுது...

**********

குழந்தைகளோடு வாரம் சில முறை நான் வெஜ், ஸ்வீட் காரம் ஸ்நேக்ஸ் என்று வெயிட் ஏறி விட்டது. டையட் மற்றும் எக்செர்சைஸ் செய்ய வேண்டும். கோவையில் காலையில் நடப்பதற்கு நன்றாக இருக்கும்... ஆனால் குழந்தைகள் பேட்டை விட்டு சீக்கிரம் எழ மாட்டார்கள்...

*********

கோவையில் சில ஏரியாக்கள் பார்த்தோம். ஜி.வி.ரெசிடென்சியல் லேயவுட் - பெர்க்ஸ் ஸ்கூல் அருகில் நன்றாக இருக்கும் போல உள்ளது. இடம் விலை சென்ட்டுக்கு ஐந்து லட்சம் என்கிறார்கள். பார்க்க வேண்டும். ஒரு வீடு கட்டிக்கொண்டால், கோவைக்கு குடி புகுந்து விடலாம்!

எனக்கும் ஒரு வேலை கோவையில் கிடைத்து விட்டால் நல்லது!

ஆனால் இங்கு ரியல் எஸ்டேட் ஆட்கள், பணம் இருக்குது இன்வச்ட் செய்ய என்றால், தொந்தரவு தொல்லைகள் தாங்க முடியவில்லை! விளையும் குறைக்க மாட்டேன்கிறார்கள். சரி ஐ.டி. பார்க் வருவதால், எப்படி இடம் விலை ( ரெசிடென்சியல் ஏரியாவில் ) ஏறும்? லாஜிக்கே இல்லை! அப்பா சொன்னார் கே.ஜி. க்ரூப், சில நூறு கொடிகள் போட்டு இடம் வாங்கி, நஷ்டப்பட்டு உள்ளார்கள் என்று. எஸ்.ஈ.ஜெட்... ஏற்றுமதி ஏரியா... (மம்தா பானர்ஜிக்கு பிடிக்காது வார்த்தை ) இருகூர் வரை ஏக்கர் ஒரு கோடி என்று செய்துள்ளது. அப்பாவின் பத்து ஏக்கர் தெண்ணந்தோப்பு நல்ல விலை வரும். ஆனால், ரவுடிகள், கட்டாயமா விற்க வைப்பார்கள் என்ற பயம் வேறு.

***********

அமெரிக்க வரை ஐ.பி.எல் பாய்ந்துள்ளது. திவ்யாவும் எழுதியிருக்கிறார்...

"வாழ்க்கையும் கிரிக்கேட் மேட்சும்"

நேற்று இரவு, சென்னை மாகளுக்கு சோகம் தான். பைனல்ஸில் இல்லையே!

************

அப்புறம் ஸ்ரீலங்கா போராளிகள் குழி தலைவர் இறப்பு பற்றி பல செய்திகள்.

ராஜு என்பவர், இப்படி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

படிக்க சுவாரசியம் - End of an era, Brand Name

அவர் எழுதியதைப்போல, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அந்த பிராண்ட் நேமை மறைய விடாமால் அதை வைத்து பிசினஸ் செய்வார்கள். திருந்தமாட்டார்களா. இப்போது வாடி வதங்கி இருக்கும் ஸ்ரீலங்கா தமிழர்களின் நலன், சுய ஆட்சி, முக்கியம்மாக பணம் கொடுத்து உதவனும்.

என்னிடம் கொடுத்தால், நான் நல்லது செய்ய எண்ணம்.

No comments: