Sunday, December 21, 2008

திருட்டு கல்யாணங்கள்

திருட்டு கல்யாணங்கள் என்று ஒரு விஷயம், இந்த பாரீன் மாப்பிள்ளைகள் வைத்து தான் தெரியும்.

என் கணவரின் சொந்தம் ஒருவர், ஏற்கனவே கல்யாணம் ரெஜிஸ்டர் ஆபீஸில் செய்து விட்டு, பிறகு சில காலங்களில் பிரிந்து விட்டார்கள்.

நடிகர் பிரசாந்த் கேஸ் ஞாபகம் வருது.

இப்போது ஒரு பெரிய இடத்து பெண் ....கல்யாணம். மாபிள்ளை யு.கே. வேலை .... ரெஜிஸ்டர் செய்ய போகும் போது தான், விஷயம் தெரிந்த்து. நண்பர்கள் கட்டாயத்தில் விளையாட்டு கல்யாணம்... படிப்பு காலத்தில்...

முதல் கல்யாணம் இருக்கும் போது, இரண்டாம் கல்யாணம்?

போலிஸ் கேஸ் ஆகவில்லை. இருந்தாலும்... அந்த பெண்ணிற்கும் கல்யாணம் ஆகி, துபாயில் இருக்கிறாள்... எப்படி மேரேஜ் சர்டிபிகேட் இல்லாமல் சென்றாள்?

மாப்பிள்ளையும், அந்த பெண்ணும், முசுவல் டிவோர்ஸ் செய்த பிறகு... அவர் துபாய்க்கு செல்லும் போது பிரச்சனை வருமா?

இப்போது டிவோர்ஸ் ஒரு வருடம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்... பாவம் .. பெண். அவர் அப்பா வயசாகி நோயாளி... இந்த கஷ்டம்... மகள் லண்டன் செல்வாள் என்று இருந்தார்கள்...

எல்லோரும் உஷார். மாப்பிள்ளைகள் ஜாக்கிரதை....

No comments: