Thursday, November 20, 2008

நிலத்தில் முதலீடு

எதில் முதலீடு செய்யலாம்? எங்கள் வருமானத்தில், சென்னையில் வீடு வாங்க முடியாது. வாடகை செலவு போன்றவை, தீர்த்துவிடும் ஆளை. நிச்சயம் எதாவது பில்டர்கள் வருவார்கள், எங்களுக்கும் ஒரு கூடு இருக்கும், சொந்தமாக.

வேலை ஆரம்பித்த புதிதில் என் கணவருக்கும் ஒரு ஆசை. ஆனால் வீட்டு நிலைமைகள், பெரு நகரத்தின் செலவு, போன்றவை, இன்னும் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலை... அப்பப்பா கொடுமை.

ரமேஷ் எழுதுகிறார்... இந்தியாவில் ரியல் எஸ்டேட் அது பணம் இருப்பவர்களுக்கு ....

வாடகை கொடுத்து வாழ்பவர்களுக்கு, அதே தவணையில், முப்பது வருடங்களில் ஒரு வீடு கிடைக்குமா?

யோசிக்க வேண்டிய விஷயம்.

1 comment:

anujanya said...

புற நகருக்கும், புற நகரில் முயற்சி செய்யலாம். நிலத்தில் முதலீடு செய்வது என்றாவது நல்ல நிலையைத் தரும். பெரும்பாலான நடுத்தர மக்கள் வீடு வாங்கும்போது மிகுந்த சிரமங்கள் பட்டு தான் வாங்குகிறார்கள். மலை போல் தெரியும்; பல சமயங்களில் பனியாய் மறைந்துவிடும்.