Thursday, May 21, 2009

பிடித்த பாடல்கள் , கவிதை

எனக்கு பிடித்த பாடல்கள் இரண்டு.

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா

முதல் முறை உன்னைப் பார்த்த...

அப்புறம் ராஜு எழுதின இந்த கவிதை, ஒரு போட்டி போல?

காதல் சண்டே - படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3

*************************

ப்ளாக் எழுதி நாள் ஆச்சு. எலெக்சன் ரிசல்ட் வந்தப்புறம், கோவையில் தான் இருக்கோம். இரண்டு மூன்று இடம், விலைக்கு வாங்க பார்த்தோம். என்னவர், சென்னை சென்று விட்டார். சனி காலை அவர் வந்துவிட்டு, இரவே கிளம்புகிறோம்.

தேர்தல் முடிவுகள் 2009

நான் சொன்ன மாதிரி தானா இருந்துச்சு?

எப்படியோ, சம்மர் ஹீட் குறைந்து விட்டது.

ஜூன் ஒன்று முதல் பள்ளி. ஞாயிறு காலை சென்னையில் இருப்போம்.

கோவை வெதர் நல்லா தான் போகுது.

Friday, May 15, 2009

தேர்தல் முடிவுகள் 2009

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று அமேரிக்காவில் இருக்கும் சிலருக்கு வியப்பு வரும் போது எங்களுக்கு எப்படி இருக்கும். ;-)

ஸ்ரீ லங்கா பிரச்சனை வைத்து வோட்டு போட்டுளார்கள் என்கிறார்கள். தெரியவில்லை.

கடைசி ஒரு மணி நேரத்தில் பத்து சதவிகிதம் வாக்கு பதிவு. எங்கேயோ ஒரு ப்ராப்ளம்... தமிழ்நாட்டில் 90% ஐந்து சதவிகிதம் தான் எப்பவும் வெற்றி மார்ஜின். சரி சரி நாளை காலை பதினோரு மணிக்கு தெரிந்து விடும், எல்லோர் ஆட்டமும்.

35-5, 25-15, 20-20 என்னவோ நடக்குது! சரி விஜயகாந்த் கட்சி என்ன ஆகும்?

சென்ற முறை மாதிரி இல்லாமல் 72% வோட்டு. 10% அதிகம். அப்போ ஆளும் கூட்டணிக்கே லாபம் எனலாம்.

*************

தேர்தல் முடிவுகள் மாதிரி இந்த ப்ளஸ் 2 முடிவுகள் இருக்கு. எங்க வீட்டு பக்கத்தில் தேறாதே கேஸ் என்பவர்கள் எல்லாம், நல்ல மார்க் வாங்கியிருக்காங்க. அதுக்காக, நல்ல படிச்சவங்களை குறை சொல்லலே. எதோ எங்கேயோ இஷ்டத்துக்கு மார்க் போடறாங்க! கணக்கில் எனக்கு ஒரு மார்க்கில் சென்டம் போச்சு அந்த காலத்தில்.... டிகேட். (இதுக்கும் இரு முறை செக் செய்து பார்த்தேன்.... என்னை பார்த்து காப்பி அடிச்சு அன்பு கூட சென்டம் எடுத்திருந்தாள்... அது தாங்க தமிழ்நாட்டு போர்ட் சிஸ்டம்... ;-))

குறைவான மார்க் வாங்குனவுங்க கவலை படாதீங்க. அதை வச்சு, கிடைக்கும் கோர்ஸ் படிச்சு, பெரிய ஆள் ஆகலாம் நீங்க. இந்த காலத்தில், சீட்டு கிடைகிறதே பெரிய விஷயம்.

ஏதாவது டிகிரீ முடிச்சாலும்... ஐ.ஐ.எம் கோர்ஸ் படிச்சு பெரிய ஆள் ( அண்ணன் நரசிம் அவர்கள் மாதிரி...).. இல்லே பரிசல் அண்ணன் கிட்டே சொல்லி திருப்பூரில் வேலை வாங்கலாம்.

என்.ஐ.ஐ.டி கோர்ஸ் இருக்கு கம்ப்யுட்டர் தொழில் குறையாது, திறமை வளர்திடுங்க. பேங்க் வேலை... அப்புறம் இருக்கவே இருக்கு கவர்ன்மென்ட் ஜாப். நானும் ரெஜிஸ்டர் செஞ்சு ஆறு எழு வருஷம் ஆச்சு. ஒரு வேலையும் வரலே.

இப்போ டைம் லிமிட் ( வயசு வச்சு ) ஆகிடுமோன்னு பயம் தான்.

சொந்த தொழில் இருக்கு... கவலை இல்லே.

******************

அப்புறம் நெஞ்சை உறைய வைக்கும் விளம்பரம்...

பெண் சிசு கொலை பற்றி ஒரு விளம்பரம்

Sunday, May 10, 2009

சில பதிவுகள்...

பதிவுகள் போட்டு ரொம்ப நாள் ஆச்சு.

முதலில் .... யாரோ ஒருவன் ஒன் சக பெண் பதிவரை துன்புருத்துகிறானாம்... என்ன கொடுமை இது. எனது நண்பி திவ்யாவின் ப்ளாகில் தான் அப்படி ஒரு தொல்லை இருந்தது...

மேலும் படிக்க...

பாலபாரதியின் ப்ளாக் ...பெண் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும், மே-10க்கான அழைப்பும்..

*****

சில நேரங்களில் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுதறாங்க...

இது மாதிரி...

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

//என்ன சொல்ல வரீங்கன்னு புரியலே. மாட்டையும், அம்மாவையும் எதுக்கு வீனா கலக்கி ஒரு பதிவு?//

***********

தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய்!

அன்னையர் தின வாழ்த்துகள் - மே 10, 2009

**********

சங்கமத்தில் பேருந்து பற்றி ஒரு போட்டி. அதில் சில படித்தவை...

பேருந்துப்பயணத்தில் முடிவான வாழ்க்கை : கதிரவன் (கொஞ்சம் பெரிய பதிவு)

பாலம் - சங்கமம் போட்டிக்கு : வெட்டிப்பயல் (பரவாயில்லை)

பிரிவில் புரியும் உறவின் அருமை
பிரிந்து பார்த்தேன்
என்னில் நீ
உன்னில் நான்
புரிந்தது உனதருமை மட்டும் அல்ல
உன் அருகாமையும் தான் !

யாதுமாகி நின்றாய் : புன்னகை (மேலே உள்ள கவிதை நன்று தவிர, வீண் சண்டைக்கு ஒரு மேலோட்ட முடிவு)

பேருந்து பயணம் : விஜயஷங்கர் (எதார்த்தமாக, எளிய நடையில் அனுபவம் உள்ளது)

*************

அப்புறம்


அப்துல்லா அண்ணன் அவர்கள் சினிமா பாடகராகியிருகிறாராம். வாழ்த்துக்கள்.


தம்பியின் டைரிக் குறிப்புகள் (07/05/09)

Thursday, April 30, 2009

உருப்படியாக லீவில் என்ன செய்வது?

நூற்றி ஐம்பத்து பதிவுகள் ஆகிவிட்டது... அனைவருக்கும் நன்றி.

குழந்தைகள் கைக்குள் அடங்காமல் போகிறார்கள்...

இரண்டு வாரம் கோவை சென்று வந்தாகிவிட்டது...

வோட்டு போட்டுவிட்டு (இல்லாவிட்டால் வேறு யாரோ போட்டு விடுவார்கள்)... இன்னும் இரண்டு வாரம் மே 16 முதல் என்று டிக்கட் முடிவு... பார்க்கலாம்... ( பாலக்காடு ட்ரிப் ஒன்றும் இடையில் உள்ளது..)

வெய்யில் கொடுமை தாள முடியலே.

எவ்வளவு நாள் தான் சென்னை பீச் சென்று வருவது?

நாளை உழைப்பாளர் திருநாள் (அட்வான்ஸ் வாழ்த்துக்கள்) மகாபலிபுரமும், அப்படியே ஒரு நாள் பாண்டிச்சேரி நங்கை வீட்டில் தங்கல்.... (பெட்ரோல் என்ன கிணற்றிலா வருது, என்று பேக்க்ரவுண்டில் சவுண்டு கேட்குது..) என்ன அவர்கள் சனிக்கிழமை நான் வெஜ் (மீன்) செய்யமாட்டார்கள் என்கிறாள் மகள்.

சென்னையில் குறைவான செலவில், மகிழ்வான இடங்கள் காட்ட குழந்தைகளை கூட்டி சென்று வர வேண்டும். நீங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்!

சம்மர் கேம்ப் என்று வீட்டு அருகில் ஆயிரம் செலவானது தான் மிச்சம். அதே பெயிண்டிங், அதே டூடில்ஸ். அடுத்த இரண்டு வாரம், சவேராவில் தினமும் நீச்சல் போக குழந்தைகள் முடிவு. காலையா, மாலையா, காசு பொறுத்து...

அப்புறம், ஸ்கூல் பீஸ் மாதம் இந்த வருடம்.ஒரு குழந்தைக்கு இரண்டாயிரம் போல வரும் .... என்ன விலைவாசி...

Wednesday, April 29, 2009

வீடு வாங்குவது

எந்த விலையில் சென்னையில் வீடு வாங்குவது?

என்ன பட்ஜெட்? என்ன வசதிகள்...

இப்போது எல்லாம் விலை வீழ்ச்சி ( டி.எல்.எப் ) என்று சொல்லுகிறார்கள்.

கோவையில் தான் பெட்டர் போல.

சென்ற முறை வீடு வாங்குவது பற்றி ஒரு பதிவு போட்டேன், ஒரு சிலர் கோவையில் எந்த இடம் வாங்கலாம் என்றார்கள்.

இன்று கேள்விப்பட்டது, வடவள்ளியில் சென்ற வருடம் விற்ற விலையில் அவினாஷி ரோட்டில் ( கோவை) வாங்கலாம் என்கிறார்கள்.

உண்ணாவிரதம் உச்சக்கட்டம்

எல்லோரும் எழுதிட்டாங்க, நாம கொஞ்சம் லேட்.

என்னவர் சொல்கிறார், இப்போ மீண்டும் ஆட்சி யு.பி.ஏ கையில் தான்.

படங்களோட பேசுவோமா?




ஆமாம், உலக கோர்ட் என்று ஒன்று உள்ளது. ஜெயலலிதா மீது 'தி ஹேக்'இல் நார்வே மாதிரி ஆட்களின் உதவியோடு, நாட்டை பிரிக்க தூண்டும் செயலுக்கு ஸ்ரீலங்கா கேஸ் போடுமா?

********

அப்புறம் பெங்களூர் கனகபுரா ரோட்டில் இருக்கும் காஸ்ட்லி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (கப்சா பிரணயாமம் புகழ் - சோ ஹம்) ஸ்ரீலங்கா சென்று அங்கு இருக்கும் தமிழ் நிலைமை பற்றி சொல்லியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் அகதி முகாம்களை விட அருமையாக இருக்கிறார்களாம், கவர்ன்மென்ட் முகாம்களில்.... என்ன அவர்களுக்கு பாரின் வாழ்க்கை (இந்தியா) கிடையாது!

அப்புறம், பாரிஸ், டொரோண்டோ மற்றும் லண்டனில் அகதி உரிமை கோரும் ஸ்ரீலங்கன் தமிழர் அதிமாகும் என்கிறது ஊடகம்.

பெங்களூர் வழியாக (தொந்தரவு இல்லாத ஏர்போர்ட்), எஜன்ட்டுக்கள் மூலம், தமிழ்நாட்டுக்காரர்களே, போலி ஸ்ரீலங்கா பாஸ்போர்டில், ஆள் மாறாட்டம் செய்து, வெளிநாட்டில் அகதிகள் ஆகிறார்களாம். எல்லாம் எதற்கு?

Tuesday, April 28, 2009

யு.கே. கம்பெனியில் நூறு இலவச ஷேர்கள்

யு.கே. கம்பெனியில் நூறு இலவச ஷேர்கள்!

இங்கே கிளிக்குங்கள்

நன்றி நண்பர் ரமேஷ் அவர்கள்.

இலவசம் பிரிடன் கம்பெனியில் 100 ஷேர்கள்

ஒரு பைசா செலவு இல்லே, ட்ரை பண்ணி தான் பாருங்க. ;-)

அர்த்தம் தெரியாத எழுத்துக்கள்

ஒரு ப்ளோகில் எழுதும் போது சூழ்நிலைக்கு ஏற்ப எழுதுகிறார்.

சிலர் மற்றவர் எதாவது எழுதுகிறார்கள் என்பதற்காக எழுதுகிறார்கள். கமல் சொல்வது போல எழுதி பழகுகிறார்கள் இல்லையா?

நான் ஒன்றும் பெரிய இவள் இல்லை. எழுதுகிறேன்... எதோ ஒன்று எனக்கு பிடித்த, கருத்து சொல்லும் விசயத்தை...

சிலர் நல்ல தமிழ் பெயரை வைக்க கூட நாதி இல்லாமல், உணவு பொருட்களின் பெயர் வைத்து ப்லோக் போஸ்ட் போடுகிறார்கள். எங்கிருந்து வரும் அர்த்தம். உச்சகட்டம், ஆபாசமான ஜோக்குகளை, தமிழ்படுத்தி எழுதுவது...

இது வரை பரிசல்காரன் , நரசிம் போன்றவர்களின் எழுத்து தான் என்னை பொறுத்த வரை, தினமும், ஒரு வித மெருகேற்றி ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதை ( இலங்கை பிரச்சனை விடுங்கள், கலைஞர் விஷயம் மறந்துவிடுங்கள்) நன்றாக எழுதுறாங்க. வேறு சிலர் விடுபட்டுள்ளனர்.

மற்றவர்கள், இவர்களின் எழுத்தை தரம் பார்த்து அதை போல எழுதுவது நன்று. இது என் சொந்த கருத்து மற்றும் விருப்பம்.

அப்புறம், கோவை சித்தர் என்றழைக்கப்படும், லதானந்த் அவர்களின் எழுத்து, எனக்கு பிடித்த கோவை பேச்சு நயத்துடன் இருக்கிறது...

கமண்ட்ஸ் போடுபவர்கள், அந்த நேரத்தின் (மீ த பர்ஸ்டு தவிர) தன்மை பொறுத்து கருத்து போடுகிறார்கள். அப்துல்லா அண்ணேவின் ப்ளாகில் தமிழ் கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டுகிறார்கள், என்ன நியாயம்?

நிறைய எழுத வேண்டும், டைம் தான் இல்லை.

Thursday, April 23, 2009

கேபிள் டிவி புறக்கணிப்பு

பந்த் என்று சொல்லிவிட்டு, சினிமா போட்டு (இரட்டை அர்த்த வசனங்கள் படம் வேறு) கேபிள் டிவி கேவலப்படுத்துகிறது தமிழ்நாட்டு அரசு.....

தமிழ்நாட்டில் இருந்து அனைவரும் ஓடி விட வேண்டும் பக்கத்து மாநிலங்களுக்கு.

பந்த் என்ற பெயரில் நடக்கும் கூத்து. அதனால் எங்கள் அபார்ட்மென்டில், கேபிள் டிவி புறக்கணிப்பு செய்துள்ளோம். லோகல் கேபிள் ஆபரேட்டரை அழைத்து கேபிளை எடுத்து போக சொன்னோம்.

நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இதை செய்ய வேண்டும். அப்போது தான் மாறன் ப்றேதர்ஸ் மற்றும் கலைஞர் டிவி ஆட்கள் ஆட்சி மட்டும் செய்வார்கள்.

வருமானத்தை கட் செய்தால் அடங்கிவிடுவார்கள்.

விஜயகாந்த் கட்சி தான் இந்த முறை அதிக இடங்களை அள்ளப்போகிறது... இந்த தி,மு.க, அ.தி.மு.க அவ்வளவு தான். வாழ்க வளமுடன்.

**********

நாளை வேண்டுமென்றால் இருக்குது டிஷ் டிவி. (தமிழ்நாட்டுக்காரன் சொந்தமான ஐட்டம் வேண்டாம்).

இலங்கையில் நடக்கும் போர், என்ன ஆகும் எனத் தெரியவில்லை.

இங்கே இலங்கைக்கு பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்றவர்கள் ( மொரிசியஸ், வெஸ்ட் இண்டீஸ் உதாரணம் எடுத்துக்கொள்ளுங்கள் ) அங்கு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அங்கும் ஜாதி, மதம் , மொழி என்று பாகு பாடு தான் இத்தனை அழிவிற்கும், முக்கியமாக, மக்கள் பணம் கொடுத்து டேரரிசம் வளர்த்து இப்போது கஷ்டப்படுகிறார்கள்... ( ஒரே சர்வதிகார தலைவன் முப்பது ஆண்டுகளாக)... அங்கிருக்கும் தமிழர் அனைவருக்கும் அது ஒரு இழுக்கு. மாபியாத்தனம்.

தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து, வாழ்வது, லோகல் மக்களுக்கு கொடுமையாகும்.

என் அப்பா அங்கிருந்து வந்து, கொண்டு வந்த சொத்தில் தான் வியாபாரம் செய்து வாழ்க்கை அமைத்தார். எவ்வளவு நாட்கள் தான் தண்டல் கட்ட வேண்டும், தமிழ் என்ற பெயரால்.

சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் மூலம் என்ன நடக்கிறது? தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

Monday, April 20, 2009

வெளியில் உணவும், மண்டை காயும் வெய்யிலும்

நேற்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், அவரது கல்யாண விருந்து கொடுத்தார்.(சிங்கப்பூரில் கல்யாணம் செய்துள்ளார் அதனால் இங்கு எங்களுக்கு ஒரு பார்டி வைத்தார் ;-) )

மதியம் வெய்யில் கொடுமை. எங்கள் பழைய ஏழு வருட ஏசி மக்கர் செய்ததால், புது ஏசி (கொரியன் கம்பெனி) ஒன்று காலையில் ஆர்டர் செய்தோம். மாலை ஐந்து மணிக்கு வந்து பிட் செய்தார்கள். பழையதுக்கு ஒரு விலை கூட கொடுத்தார்கள்.... குழந்தைகள் தூக்கம் கோவை போல இருக்கும். கரண்ட் தான் கேடு.

இரவு பூந்தமல்லி வெஸ்லி ஸ்கூல் முன்னால் நம்பர் 91, இருக்கும் ஒரு ஸ்பா மற்றும் ரெஸ்டரன்டில் ஏற்பாடு. அந்த நண்பரின் நண்பர்கள் முதலீட்டாளர்களாம். பெயர் வாயில் நுழையாது ஒன்றல்ல. எதற்கு வீண் விளம்பரம்?

உணவும் நல்ல விலை தான். பொன்னுசாமியை விட இரு மடங்கா இருக்கும்! இருந்தாலும், அதிகம் சாப்பிடும் (குழந்தைகள், கேட்கும் போன்லஸ் சிக்கேன்) போன்றவை, குறைவாகவே செலவானது. காரணம், விலையா, அங்கு புது இடம் என்பதால, அல்லது ருசியா?

நண்பருக்கு புது மண வாழ்வுக்கு வாழ்த்து சொல்லி, நன்றி கூறினோம். ( அருமையான இடம் கூட, மூன்று மணி நேரம் மொத்தம் செலவானது)

எப்படி முதலில் நன்றாக இருந்து பின்னால், பல ஹோட்டல்கள் சுமார் ஆகி, பெயர் கெட்டுப்போனால் மீண்டும் நல்ல உணவு கொடுப்பார்கள், அது மாதிரி ஆகாமல் இருந்தால் சரி. வாழ்த்துக்கள்.

சிறு வயதில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு எதிரில் இருக்கும் புஹாரியில் தான் பிரியாணி வாங்கும் வழக்கம். ஊருக்கு போகும் போது, கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஏறும் முன், அங்கு லன்ச் வாங்கும் பழங்கால பழக்கம்...

சரி சரி, எலெக்சன் சமயத்தில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் தினமும் பிரியாணி தான்.

Sunday, April 19, 2009

படித்ததில் பிடித்தவை

பள்ளி விடுமுறை.

இரண்டு வாரம் வெளியூர் பயணம். இப்போது தான் சில மணி நேரம் முன் வீடு திரும்பினோம்.

கணவர் மட்டும், வீட்டை பார்த்துக்கொள்ள, நான் மற்றும் குழந்தைகள் கோவையில்... அதை பற்றி ஒரு பதிவு நாளை.

கோவையில் ஆர்.பிரபு நிச்சயம் வெற்றி பெறுவார்! காங்கிரஸ். கிளீன் கய்...

அப்புறம், சென்னை விட கோவை வெதருக்கு மேல்!

*************

சில பதிவுகள், சில மணி நேரம் முன் படித்தேன். நன்று.

ரமா : காஃபி சாப்பிடப்போலாமா?

நடிகர் விவேக் சொற்பொழிவு

சோகம்

குடும்பமும் கோலாகலமும்

DAY 358 (அமிதாப் பச்சன் ஒரு வருடம் ப்ளாக் உலகில்... வாழ்த்துக்கள்!)

Friday, April 3, 2009

ஜாதிக்கு இடம் வேண்டாம்

ஜாதிக்கு இடம் வேண்டாம் ..

ஏழ்மைக்கு இடம் கொடுங்கள்....

மக்களை முன்னேற்றுங்கள்...

இந்த பதிவு படித்தேன்...

என் அறிவுக்கண் திறந்த டி.வி.எஸ் நிறுவனம்

என்னுடைய கமன்ட் இங்கே...

அண்ணே ஜாதி என்கிற களம் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும். தன் திறமையால் தான் ஒருவர் இடம் பிடிக்க வேண்டும்! ஏழ்மை நிலைக்கு படிக்க இடமோ பொருளோ அரசாங்கம் கொடுக்கலாம்.

Tuesday, March 31, 2009

தமிழர்கள் சுட்டுக் கொலை

இந்த நியூஸ் படித்தவுடன், சே என்றாகிவிட்டது, தமிழர்கள் நிலைமையை பார்த்து.

குடும்பச் சண்டை-அமெரிக்காவில் 6 தமிழர்கள் சுட்டுக் கொலை

//

சான்டா கிளாரா (கலிபோர்னியா): நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (42). யாஹூ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.

மனைவி ஆபா (34) மற்றும் அகில் என்ற 11 வயது மகன், நேஹா என்ற 4 வயது மகளுடன் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் வசித்து வந்தார் தேவராஜன்.

ஆபாவின் சகோதரர் அசோகன் (35). இவரது மனைவி சுசித்ரா (25). இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது.

அசோகனும் என்ஜீனியர். அசோகன் குடும்பத்தினர் இந்தியாவில் வசித்து வந்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக அசோகனுக்கும், தேவராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது.

இந் நிலையில், புதிய பிளாட் வாங்கினார் தேவராஜன். இதற்கு அண்ணன் குடும்பத்தை அழைத்திருந்தார் ஆபா. இதற்காக அசோகன் தனது மனைவி, மகளுடன் சான்டா கிளாரா வந்திருந்தார்.

நேற்று இரவு நடந்த விருந்தின்போது திடீரென தேவராஜனுக்கும், அசோகனுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கைத் துப்பாக்கியை எடுத்து அசோகன் குடும்பத்தினரை சரமாரியாக சுட்டுத் தள்ளினார் தேவராஜன்.

இதில் அசோகன், அவரது மனைவி சுசித்ரா மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து விழுந்தனர். இதைப் பார்த்து ஆபா ஓடி வந்து தடுக்க முயன்றார்.

அப்போது ஆபா, தனது இரு மகள்கள் ஆகியோரையும் சுட்டார் தேவராஜன். இதில் அவர்களும் படுகாயமடைந்தனர்.

பின்னர் தேவராஜன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரத்தம் கொட்டிய நிலையி்ல் ஆபா வீட்டுக்கு வெளியே வந்து உதவி கோர முயன்றார். ஆனால் முடியாமல் அப்படியே விழுந்து விட்டார்.

படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த அவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் தேவராஜன், சுசித்ரா, அசோகன், நேஹா, அகில் ஆகியோர் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்தனர். கைக்குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அக்குழந்தைக்கு டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர். ஆனால் அது சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது.

படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தி்ல் மிதந்த ஆபா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவராஜன் குடும்பத்தினர் வசித்து வந்த இடம் சிலிக்கான் வேலி பகுதியில் உள்ள ரிவர்மார்க் எனப்படும் குடியிருப்புப் பகுதியாகும். இங்கு 1,100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்போரில் பெரும்பாலானவர்கள் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டினர்தான். இதில் இந்தியர்களே அதிகம்.

இந்த குடியிருப்புக்கு அருகில்தான் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உள்ளது.

//

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். அடிபட்ட ஆபாவிர்க்கு, உடல் நிலை தேற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். மன தையிரியமும் கிடைக்கட்டும். பெண் பிழைத்துவிடுவாள், என மனசு சொல்கிறது!

என்ன இருந்தாலும், குடும்பம் என்று இருந்தால் சண்டை (இதில் சொத்து விஷயம் அதிகம்) இருக்கும். அதற்கு இந்த இந்திய அமெரிக்கர்கள், துப்பாக்கி எடுத்து காட்டி விளையாடுவது, தேவையற்ற ஒன்று. அதுவும், அமெரிக்காவிற்கு அழைத்து ஒரு குடும்பத்தை கொல்வது வேதனையான ஒன்று. பணம் செய்யும் மாயம்....

அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம், சொத்துக்கு அதிபதியாம், இந்தியாவில் இருக்கும் குடும்ப சொத்தை நிறைய பேர் (கூட பிறந்தவர்கள், பெற்றோர்) தர மாட்டார்கள். கேள்விப்பட்டுள்ளேன்...

சாண்டா க்ளாராவில், எனக்கு தெரிந்த சில குடும்பத்தினர் இருக்கிறார்கள். வேறு கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.

என்ன விந்தை இந்த உலகத்தில்.

Saturday, March 28, 2009

உலக தினம் (எர்த் ஹவர்)

இன்று மார்ச் 28, 2009 அனைவரும் இரவு எட்டரை மணிக்கு லைட் எல்லாம் ஆப் செய்து விட்டு, உலக தினம் (எர்த் ஹவர்) கொண்டாடுங்கள்.

ஆற்காட்டார் எப்படியும், கட் பண்ணுவார்.

:-)


ஒரு மணி நேரம் பல சிட்டிகள் கரண்ட் ஆப் செய்தால், பல வருடம் கார்பன் எமிசன் மிச்சம் ஆகும், உலகம் சீர்படும்.

*****

எதாவது ப்லோகர்கள் தனியாக செய்ய வேண்டும் என்றால், நாளை முழுதும் கம்ப்யுட்டர் ஆன் செய்ய வேண்டாம். முடியுமா?

Friday, March 27, 2009

உகாதி தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும்... என் இதயம் கனிந்த உகாதி தின வாழ்த்துக்கள் ...

மாங்காய் சாதம், பச்சிடி மற்றும் வேப்பம்பூ வெல்லம் எதிர் வீட்டிலிருந்து வரும்!

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அரை கிலோ வாங்கி வந்து ப்ரெசண்ட் செய்ய வேண்டும்...

அப்புறம்... வீட்டில் பருப்பு போளி மற்றும் புளியோதரை!

***

இன்று முதல் பள்ளி விடுமுறை. குழந்தைகளுக்கு கொண்டாட்டம்.

டிவியில் படங்கள், பழையது தான் (முதன்முறையாக என்று சொல்லி போடுவார்கள்?)