Thursday, April 30, 2009

உருப்படியாக லீவில் என்ன செய்வது?

நூற்றி ஐம்பத்து பதிவுகள் ஆகிவிட்டது... அனைவருக்கும் நன்றி.

குழந்தைகள் கைக்குள் அடங்காமல் போகிறார்கள்...

இரண்டு வாரம் கோவை சென்று வந்தாகிவிட்டது...

வோட்டு போட்டுவிட்டு (இல்லாவிட்டால் வேறு யாரோ போட்டு விடுவார்கள்)... இன்னும் இரண்டு வாரம் மே 16 முதல் என்று டிக்கட் முடிவு... பார்க்கலாம்... ( பாலக்காடு ட்ரிப் ஒன்றும் இடையில் உள்ளது..)

வெய்யில் கொடுமை தாள முடியலே.

எவ்வளவு நாள் தான் சென்னை பீச் சென்று வருவது?

நாளை உழைப்பாளர் திருநாள் (அட்வான்ஸ் வாழ்த்துக்கள்) மகாபலிபுரமும், அப்படியே ஒரு நாள் பாண்டிச்சேரி நங்கை வீட்டில் தங்கல்.... (பெட்ரோல் என்ன கிணற்றிலா வருது, என்று பேக்க்ரவுண்டில் சவுண்டு கேட்குது..) என்ன அவர்கள் சனிக்கிழமை நான் வெஜ் (மீன்) செய்யமாட்டார்கள் என்கிறாள் மகள்.

சென்னையில் குறைவான செலவில், மகிழ்வான இடங்கள் காட்ட குழந்தைகளை கூட்டி சென்று வர வேண்டும். நீங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்!

சம்மர் கேம்ப் என்று வீட்டு அருகில் ஆயிரம் செலவானது தான் மிச்சம். அதே பெயிண்டிங், அதே டூடில்ஸ். அடுத்த இரண்டு வாரம், சவேராவில் தினமும் நீச்சல் போக குழந்தைகள் முடிவு. காலையா, மாலையா, காசு பொறுத்து...

அப்புறம், ஸ்கூல் பீஸ் மாதம் இந்த வருடம்.ஒரு குழந்தைக்கு இரண்டாயிரம் போல வரும் .... என்ன விலைவாசி...

Wednesday, April 29, 2009

வீடு வாங்குவது

எந்த விலையில் சென்னையில் வீடு வாங்குவது?

என்ன பட்ஜெட்? என்ன வசதிகள்...

இப்போது எல்லாம் விலை வீழ்ச்சி ( டி.எல்.எப் ) என்று சொல்லுகிறார்கள்.

கோவையில் தான் பெட்டர் போல.

சென்ற முறை வீடு வாங்குவது பற்றி ஒரு பதிவு போட்டேன், ஒரு சிலர் கோவையில் எந்த இடம் வாங்கலாம் என்றார்கள்.

இன்று கேள்விப்பட்டது, வடவள்ளியில் சென்ற வருடம் விற்ற விலையில் அவினாஷி ரோட்டில் ( கோவை) வாங்கலாம் என்கிறார்கள்.

உண்ணாவிரதம் உச்சக்கட்டம்

எல்லோரும் எழுதிட்டாங்க, நாம கொஞ்சம் லேட்.

என்னவர் சொல்கிறார், இப்போ மீண்டும் ஆட்சி யு.பி.ஏ கையில் தான்.

படங்களோட பேசுவோமா?




ஆமாம், உலக கோர்ட் என்று ஒன்று உள்ளது. ஜெயலலிதா மீது 'தி ஹேக்'இல் நார்வே மாதிரி ஆட்களின் உதவியோடு, நாட்டை பிரிக்க தூண்டும் செயலுக்கு ஸ்ரீலங்கா கேஸ் போடுமா?

********

அப்புறம் பெங்களூர் கனகபுரா ரோட்டில் இருக்கும் காஸ்ட்லி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (கப்சா பிரணயாமம் புகழ் - சோ ஹம்) ஸ்ரீலங்கா சென்று அங்கு இருக்கும் தமிழ் நிலைமை பற்றி சொல்லியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் அகதி முகாம்களை விட அருமையாக இருக்கிறார்களாம், கவர்ன்மென்ட் முகாம்களில்.... என்ன அவர்களுக்கு பாரின் வாழ்க்கை (இந்தியா) கிடையாது!

அப்புறம், பாரிஸ், டொரோண்டோ மற்றும் லண்டனில் அகதி உரிமை கோரும் ஸ்ரீலங்கன் தமிழர் அதிமாகும் என்கிறது ஊடகம்.

பெங்களூர் வழியாக (தொந்தரவு இல்லாத ஏர்போர்ட்), எஜன்ட்டுக்கள் மூலம், தமிழ்நாட்டுக்காரர்களே, போலி ஸ்ரீலங்கா பாஸ்போர்டில், ஆள் மாறாட்டம் செய்து, வெளிநாட்டில் அகதிகள் ஆகிறார்களாம். எல்லாம் எதற்கு?

Tuesday, April 28, 2009

யு.கே. கம்பெனியில் நூறு இலவச ஷேர்கள்

யு.கே. கம்பெனியில் நூறு இலவச ஷேர்கள்!

இங்கே கிளிக்குங்கள்

நன்றி நண்பர் ரமேஷ் அவர்கள்.

இலவசம் பிரிடன் கம்பெனியில் 100 ஷேர்கள்

ஒரு பைசா செலவு இல்லே, ட்ரை பண்ணி தான் பாருங்க. ;-)

அர்த்தம் தெரியாத எழுத்துக்கள்

ஒரு ப்ளோகில் எழுதும் போது சூழ்நிலைக்கு ஏற்ப எழுதுகிறார்.

சிலர் மற்றவர் எதாவது எழுதுகிறார்கள் என்பதற்காக எழுதுகிறார்கள். கமல் சொல்வது போல எழுதி பழகுகிறார்கள் இல்லையா?

நான் ஒன்றும் பெரிய இவள் இல்லை. எழுதுகிறேன்... எதோ ஒன்று எனக்கு பிடித்த, கருத்து சொல்லும் விசயத்தை...

சிலர் நல்ல தமிழ் பெயரை வைக்க கூட நாதி இல்லாமல், உணவு பொருட்களின் பெயர் வைத்து ப்லோக் போஸ்ட் போடுகிறார்கள். எங்கிருந்து வரும் அர்த்தம். உச்சகட்டம், ஆபாசமான ஜோக்குகளை, தமிழ்படுத்தி எழுதுவது...

இது வரை பரிசல்காரன் , நரசிம் போன்றவர்களின் எழுத்து தான் என்னை பொறுத்த வரை, தினமும், ஒரு வித மெருகேற்றி ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதை ( இலங்கை பிரச்சனை விடுங்கள், கலைஞர் விஷயம் மறந்துவிடுங்கள்) நன்றாக எழுதுறாங்க. வேறு சிலர் விடுபட்டுள்ளனர்.

மற்றவர்கள், இவர்களின் எழுத்தை தரம் பார்த்து அதை போல எழுதுவது நன்று. இது என் சொந்த கருத்து மற்றும் விருப்பம்.

அப்புறம், கோவை சித்தர் என்றழைக்கப்படும், லதானந்த் அவர்களின் எழுத்து, எனக்கு பிடித்த கோவை பேச்சு நயத்துடன் இருக்கிறது...

கமண்ட்ஸ் போடுபவர்கள், அந்த நேரத்தின் (மீ த பர்ஸ்டு தவிர) தன்மை பொறுத்து கருத்து போடுகிறார்கள். அப்துல்லா அண்ணேவின் ப்ளாகில் தமிழ் கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டுகிறார்கள், என்ன நியாயம்?

நிறைய எழுத வேண்டும், டைம் தான் இல்லை.