Friday, November 28, 2008

ரோடி மேகர்

ரோடி மேகர் அனுபவம்...

நிஜமா இது உங்களை, கொஞ்சம் சந்தோசப்படுத்தும்.

படியுங்கள் இங்கே... பிடித்தால் வாங்கவும். இது ஒரு கரண்ட் யூஸ் செய்யும் ஐட்டம்.

Roti and Roti Maker

நீங்கள் சிரிப்பது தெரிகிறது...

ஆம், சப்பாத்தி உருட்டும் வேலை இல்லை.

பெண்கள் உடம்பு ஏற்றுவார்கள் இல்லையா?

சென்னை மழை தீரவில்லை

சென்னை மழை தீரவில்லை இன்னும். வெற்றிகரமான அடிதடியான மூன்றாவது நாள். மேட்டுக்குப்பத்தில் நெஞ்சளவு நீர் என்கிறார் கணவரின் நண்பர். ஒரு குளத்தில் வீடு போல? கார் மூழ்கி விட்டதாம்.

நல்ல வேலை, எங்கள் வீட்டு ஏரியாவில், கரண்ட் உள்ளது. பரவாயில்லை. கொஞ்சம் கீழ் மட்டமான இடங்களில்? பாவம் மக்கள். சென்னை மாநகாட்சி, எங்கெல்லாம், மழை தண்ணீர் தேங்கும் என்று ப்ளேன் செய்து கட்டிடம் கட்டும் போது பெச்மன்ட் அளவு பார்த்து உதவி செய்யலாம்.

அண்ணா சாலை வரை சென்று வந்தோம். கொடுமை. சேற்றை வாரி இறைக்கும் கொடுமை. கணுக்கால் அளவு நீர்.

ஒரு தமிழ்நாட்டு காபிடல் சிடி என்று சொல்லும் அளவு இல்லை சென்னை.

ஊரிலிருந்து சொந்தம் வரவேண்டியது ட்ரிப் கேன்சல் செய்தார்கள் நல்ல வேலை.

குடிக்கும் நீர், எப்படியோ அகுவாகார்ட் வைத்து சமாளிக்கிறோம். அதுவும் பவர் போனால் அழுகை தான்.

நல்ல வேலை சில கடைகள் உள்ளன, மாவு, அத்தியாவசியமான கிழங்கு, வெங்காயம் இருந்தது. யானை விலை.

அநியாயம். பாணி பூரி விற்கப்படுகிறது, பிளாட்பார்மில்..

கீழ்பாக்கம் மாறிய என் நண்பர் குடும்பம், தண்ணீர் இல்லாமல், குடிசை மாற்று வாரியம் ஏரியாவிற்கு சென்று குடங்களில் தண்ணீர் வாங்கி வந்துள்ளார்கள்.

நாளை மழை நிற்கும்.

டிபன் சாம்பார்

நீங்கள் சாம்பார் பிரியரா?

வெஜிடேரியனிசம் உடலுக்கு நல்லது... அதுவும் மழை காலத்தில்...

காலையில் இட்லி செய்தேன். தொட்டுக்கொள்ள சாம்பார்.

கைகளால் குழந்தைகள் ஈசி உணவு என்று சாப்பிடுவது இது தான்.

அருமை. அருமை.

இங்கே பாருங்கள் ரெசிபி.

Tiffin Sambar

சென்னையில் மழை

சென்னையில் சரியான மழை. இரண்டு நாட்களாக விடாது கொட்டுகிறது. புயல் என்றார்கள். பரவாயில்லை நீர் கிடைக்கும் என்றால், குளத்தூரில், வாய்க்கால் வெட்டி, நீரை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார்கள்.

அதுவும் வானிலை அறிக்கை சொன்னால் போதும். தலைகீழாக நடக்கிறது.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. காய்ச்சல். கொடுமைங்க.

நிறைய பேர், ப்ளேட்பாரம் வாசிகள், எங்கள் வீட்டில் முன் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

அரசாங்கம் ஒன்று செய்யவில்லை.

குப்பை கூளம் நாறுகிறது.

Thursday, November 27, 2008

சில நிகழ்வுகள்

இன்னும் மும்பை கஷ்டம் தீர்ந்தபாடில்லை... எப்போது ஓயும் இந்த டிவி நிகழ்ச்சி.. அப்படி தான் கேட்கிறார்கள் குழந்தைகள். ஒரே கவரேஜ்.

கணவருக்கு கோபம்.

விளம்பரங்கள் வருகின்றன.... தேவையா?

நண்பி திவ்யா எழுதுகிறார்... அமெரிக்காவில் ரெட் அலர்ட்

அமெரிக்காவிலும் பயமாம் .

என்ன கொடுமைங்க இது?

உலகில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாதா?

நான் தான் விடுதலை நாள் வீர உரை ஆற்ற வேண்டும். ஆண்டவனே எம் மக்களை காப்பாற்று.

இந்த விஷயம்? மனிதர்களின் மனம் படித்து பாருங்க புரியும்.

அண்ணன் வாஞ்சூர் அவர்கள் சுட்டிக்காட்டியது...

குமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.

அப்புறம்... பரிசல்காரன் எழுதியது.... ஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூடங்களும்

என் குழந்தைகள் படிப்புக்கு வருடம் நிறைய ஆகிறது... நாங்கள் தான் சொல்லிக்கொடுக்குறோம். டீச்சர்கள் வேஸ்ட்.

டிவியில் மும்பை

டிவியில் மும்பை அட்டேக் பற்றி ஒவ்வொரு சேனலும் ஒரு மாதிரி காட்டுகிறார்கள்.

இப்போது தான் பார்த்தேன், சி.என்.என். ஐ.பி.என். சொல்கிறார்கள், எல்லாம் முடிந்தது... மேலும் நாற்பது உடல்கள் தாஜ் ஹோட்டலில் கண்டுபிடிப்பு...

அப்புறம், டைம்ஸ் நொவ் சொல்கிறார்கள்...

இன்னும் ஆட்கள் இருக்கிறார்கள்... அங்கே...

என்.டி.டிவி சொல்லுது..

ஒருவர் "வினய்" ரூம் நண்பர் ஐந்திலிருந்து கால் பண்ணுறார்... அப்படியே லைன் கட்... மனசு திக் திக்.

சாப்பாடு இன்னும் இல்லை. எங்கே இறங்கும்?

இன்டர்நெட்?

என்.டி.டிவி. இங்கே அழுகிறார்கள்.

போட்டோக்கள்...

குழப்பங்கள்... அவரவர் இஷ்டமான நியூஸ்.

இந்தியா என்ன செய்ய வேண்டும் ?

சென்னை வெதர் மோசம். இதை பற்றி யாரவது எழுதினால் நன்று.

நான் மட்டும் எழுதி என்ன பயன்?

  1. காய்கறி விலை ஏற்றம் பற்றி இன்டர்நெட்டில் எழுதலாம்...
  2. ஸ்கூல் அட்மிசனில் நடக்கும் கேலி கூத்துக்கள் பற்றி எழுதலாம்...
  3. மாபியா மாதிரி இருக்கும் விடுதலை வீரர்கள், ஆள்கடத்தல், பயம் காட்டிபணம் பிடுங்கும் கூட்டம், ட்ரக் விற்று தளவாடம் வாங்கும் ஆட்கள் பற்றி வரலாறு எழுதலாம்...
  4. எங்கே போய் முட்டிகொள்வது?

மும்பை

எழுத்தால் ஒன்றும் செய்ய முடியாது, கொடுமைக்கார மனசுகளை. யார் என்ன சொன்னாலும் இன்னும் காந்தி வழி தான் ஜெயிக்கும். சினிமாவில் வையலன்ஸ் காட்டுவது நிறுத்தும் வரை, டேரரிசம் தொடரும்...

Please do not glorify violence!

மும்பையில் உயிர் நீத்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இட்லிவடை

நெட்டில் படித்த ஒன்று, இந்துகள் எழுச்சி, பயங்கரவாதம்...

நான் எழுதிய பதிவு....

ஹிந்துக்களும் மதவாதமும்

யோசிக்கும் விஷயம்.....

நண்பர் ரமேஷ் எழுதுகிறார்...

மும்பையில் பயங்கரம்

எல்லோரும் நாட்டுக்கு நல்லது நடக்க பிரார்த்தனை செய்வோம்.

Wednesday, November 26, 2008

இலங்கையும் போரும்

இலங்கையில் தமிழருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க அனைவரும் காந்திய வழியில் சிந்திக்க வேண்டும். எனக்கு தெரிந்த வகையில் ஸ்ரீலங்காவில் இருபத்தி ஐந்து லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இன்னும் ஐந்து லட்சம் வெளிநாட்டில் அகதிகளாக, தொழிலாளிகளாக குடும்பத்தோடு இருக்கிறார்கள். ஆகா மொத்தம் 8% பாபுலேசன் தான் அங்கு.

ஆயுதம் ஏந்துவது கொடுமை. அங்கு ஒரு காந்தி பிறந்து வர வேண்டும்.

அனைத்து தமிழர் உணர்வும், அவர்கள் நல்லதுக்கு தான்.

எல்லோரும் கூடி, ஜனநாயக வழியில் ஸ்ரீலங்கா வட கிழக்கு மாகாணங்கள், தனியாட்சி அமைக்க, யோசித்தால் நன்று. அவர்கள் கொடுக்கும் ஜி.டி.பி. 5%. அதனால், ஒரு மாநிலமாக இருந்தால் தான். நன்று.

விக்கிபீடியாவில் பாருங்கள்....

ஒருவரும் தனித்து தான் தான் தலைவன் என்று சொல்லக்கூடாது. ஜாதி மதத்திற்கு அப்பார்ப்பட்டது இது. எல்லோரும் சமம் என்ற உணர்வு முதலில் வரட்டும். அப்புறம் தனி மாநிலம், சுகம், சொந்தங்கள், மரியாதை எல்லாம் வரும்.

இந்தியாவில் எப்படி ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் தனி அமைப்பு உள்ளதோ.. அது மாதிரி.

நார்வே நாட்டினர் சொல்வது இது தான். மறைந்த பாலசிங்கம் அவர்களும், இப்போது அவர் மனைவியும் சொல்வது இது தான். இருபத்தி ஐந்து வருடம் போர் தேவை இல்லாத ஒன்று என்று தோன்ற வைக்கிறது.

புத்தம் சரணம் கச்சாமி.

ஹிந்துக்களும் மதவாதமும்

நான் நேற்று இரவு என்.டி.டிவி நிகழ்ச்சி ஒன்றில் இரவு எட்டரை டு ஒன்பது மணிக்கு ஸ்ரீநிவாசன் ஜெயின் தொகுத்து வழங்கியது... எப்படி சாத்வி பிரக்யா அவர்கள், ஹிந்துக்களின் எண்ணங்களை மதிக்காமல், அடிக்கு அடி என்ற விதத்தில், ஆர்மி ஆள் ஒருவர் துணையோடு, தன்னை தானே சங்கராச்சார்யா என்று பறை சாற்றிக்கொண்ட ஒருவரோடு இணைந்து, அவர் சொற்படி நடத்தியதாக விவரம்.... மல்கவ் மற்றும் சூரத் வெடிப்பு. உண்மையோ பொய்யோ, இது வரை நடக்க விட்டிருக்க கூடாது. எதற்காக இது வேண்டும்? இன்னொரு விடயம்... ஆர்.எஸ்.எஸ் ஆட்களை கொள்ள, ஐ.எஸ்.எஸ். பணம் கொடுத்தார்களாம் இவர்களிடம்... எங்கே போயிற்று மதம் வாதம்?

அத்வானி அவர்கள் பாபர் மசூதி இடிப்பு சமயத்திலும், அதை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வர வாஜ்பாயுடன் சேர்ந்து ராமர் கோவில் ரத யாத்திரை செய்து பயன் படுத்திக்கொண்டார். செல்வி ஜெயலலிதாவும், இந்தியாவில் ராமர் கோவில் கட்டாமல், எங்கு கட்டுவார் என்றார். நான் அப்போதே சொன்னேன், ஸ்ரீலங்காவில், மலேசியாவில், சிங்கபூரில் எல்லாம் ஹிந்துக்களின் கோவில் உள்ளது, உலகில் எங்கு தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கு தமிழ் கடவுள் கோவில் உள்ளது. ஹிந்துக்கள் வாழும் இடத்தில் ஹிந்துக்கள் கோவில். ஆனால், எதற்கு ஒரு மசூதி மீது கட்ட வேண்டும்? பாலக ராமர் சிலை ஒன்றை உள்ளே சென்று வைத்துவிட்டால், போதுமா?

நாங்கள் வேலை விசயமாக அமெரிக்கா சென்ற போது சில சர்ச்சுகளில் உள்ளே சென்று பார்க்க அனுமதி உண்டு. இந்தியாவில் கோவாவில் மட்டும் நடக்கும்... சென்னை சாந்தோமில் சுற்றுலாத்தலமாக இருப்பதால் ஒ.கே. காசு கேட்பார்கள், வெளியே உட்கார்ந்துக்கொண்டு.

நாங்கள் அம்ரிட்சருக்கும் போய் உள்ளோம். அஜ்மீர் ஷேரிப்பிர்க்கும் போய் வந்தோம். நல்ல மரியாதை. பெண்களுக்கு அருமையான பாதுகாப்பு.

முதலில் ஜாதி கொடுமைகளை களைய பாருங்கள்.

அஹிம்சை தான் வாழ்க்கையில் வேண்டும். அமைதி வேண்டும்.

கேடு கெட்ட உலகம் இதுங்க.

இவர்கள் இப்படி செய்வதால், நாட்டில் உணவு பஞ்சம் தீருமா?

கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு படிப்பறிவு வருமா?

அரசியல்வாதிகளின் சொத்து அனைத்தும் பிடுங்கி, ஏழைகளுக்கு, தேவையானதை செய்ய வேண்டும். அதற்க்கு கடவுள் அருள் புரியட்டும்.

*************

நல்ல பதிவு ஒன்று இங்கே அண்ணன் வாஞ்சூர் அவர்கள் எழுதியது...

சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்

Sunday, November 23, 2008

பேரழகன் மற்றும் மதவாதம்

இன்று பேரழகன் படம் குடும்பத்தோடு பார்த்தோம். தர்மம் வெல்லும் என்று சொல்வது போல, அன்பு வெல்லும் என்பதை, அழகாக சொல்லி இருக்கிறார் சசி ஷங்கர். கதாநாயகிக்கு கண் வருவதை பார்த்து இரு குழந்தைகளும் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்...

மதவாதம் பற்றி வாஞ்சூர் அவைகள் எழுதிய பதிவு (என் கணவர் விடாமல் அவரை படிக்கிறார்...) நீங்கள் படியுங்கள்...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 ராகினிஸ்ரீ

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ராகினிஸ்ரீ பற்றி எனக்கு நல்ல ஒபினியன் இல்லை.

மதிப்புடன் சொல்கிறேன், சென்ற இரண்டு வருடங்கள் போல, ராகினிஸ்ரீ வெற்றி பெற (அந்த கர கரப்பு வாய்ஸ் நல்லாவே இல்லை) எதோ ஒரு குழு வேலை செய்கிறது. மால்குடி சுபா. எல்லாம் தூக்குகிறார். எதோ சினிமா ஸ்டார் மாதிரி இருப்பதாலா? அல்லது ஏ.வி.ரமணன் சொன்ன மாதிரி, சினிமா உலகில் சஞ்சரிக்க வேறு ஸ்பெஷல் காரணம் உண்டா? அவர் நடத்திய சப்தஸ்வரங்கள் மூலம் எவ்வளவு அருமையான பாடகர்கள் வந்துள்ளார்கள்!

இரண்டாம் எபிசோடில் இருந்து கவனிக்கிறேன், ராகினிஸ்ரீ பெற்றது எதோ ஒரு மரியாதையான கவனிப்பு. மூன்று நடுவர்கள், சொல்லி கொடுத்து தேர்ந்தெடுத்த போட்டியில், உடனடி தேர்வு செய்தார்கள்... ஒரே ஒருவர் தங்க காசு பெற்றார். அப்போது இருந்தவர் மால்குடி சுபா மற்றும் ஒரு தாடிக்காரர்...

எஸ்.எம்.எஸ் பண்ண சொல்லி சொல்வார்கள் அல்லவா... வரட்டும்... எங்கள் நண்பர்கள் குழு எங்களால் முடிந்த வரை செலவு செய்து, தகுதியான ஒருவரை தேர்ந்து எடுப்போம்...

இந்த வாரம் சின்மயீ காணவில்லை? யுகேந்திரன் மற்றும் அவர் மனைவி வந்தார்கள்.... என்ன ஆயிற்று? நல்ல காம்பயர்.

நல்லவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!