Thursday, June 4, 2009

ஆமீரகத்தின் பதிவர்கள்

ஆமீரகத்தின் பதிவர்கள் நாளை வெள்ளிக்கிழமை, ஜூன் 5, டிபிக்கல் துபாய் மீட்டிங் ஸ்பாட்டான கராமாவில் கூடுகிறார்கள் என்று சில பதிவுகளில் பார்த்தேன்.

என்ஜாய் பண்ணுங்க!

********

துபாய் சில நினைவுகள்....

அப்பா அங்கு ஒரு பதினைந்து வருடங்கள் வேலை செய்தார். சில வருடங்கள் முன் தான் கோவையில் திரும்ப வந்து செட்டில் ஆனார். நல்ல ஏ.சி. மெக்கானிக் கம்பெனி, நல்ல வேலை... ( இப்போ சம்பந்தமில்லா வேலை )

நாங்கள் ( நான், தங்கை மற்றும் அம்மா ) படிப்புக்காக சில வருடம் ( ப்ளஸ் 2, காலேஜ் ) கோவையில் இருந்துவிட்டோம். பிறகு சில வருடம் அங்கு இருந்தோம்.

நான் என் கணவரை சந்தித்ததும் அங்கு தான்! ;-) தங்கையும் அப்படியே! மாடர்ன் பேமிலி...

*******

அப்பாவின் காரை இந்தியன் லைசன்ஸ் ( .டி.எல் ) வைத்துக்கொண்டு நான் தங்கையுடன் மற்றும் சில நண்பர்களுடன் அபு தாபி, நார்த் ஓமான் எல்லை வரை சென்றது எல்லாம் நினைவில் உள்ளது.

சார்ஜாவின் ஏர்போர்ட், அஜ்மானில் சில கோவைக்காரர்களை (நண்பர்கள்) சந்திக்க சென்றது எல்லாம் .... நினைவில்... நிற்பவை..

லூலுஸ், பர் துபாய் மற்றும் கரமாவை மறக்க முடியுமா. ஷாபிங்... ஷாபிங் தான்.

கராச்சி தர்பாரில் பெரிய பராட்டா மற்றும் கரம் சாய் இன்னும் கிடைக்கிறதா?

சிம்ரன் ஆப்ப கடையின் சிக்கன் பிரியாணியும் , மட்டன் சுக்காவும் மறக்க முடியவில்லை. சரியான சிலோன் டேஸ்ட்!

இப்போ எப்படிங்க வேலை நிலைமை எல்லாம். விலைவாசி ரொம்ப ஜாஸ்தின்னு, கணவர் சொந்தங்கள் எல்லாம் பக்ரைன் மற்றும் கட்டாருக்கு மாறிட்டாங்க. ஐ.டி. ஆளுங்க மட்டும் இருப்பாங்க... ?

விவரம் எல்லாம் கமன்ட்சில் போடுங்க.

( அப்பா கூடிய விரைவில் ரஸ் அல் கைமாவில் ஒரு ஆபிஸ் எடுக்கப்போகிறார்... )

Wednesday, June 3, 2009

அனானிமஸ் கொடுமைகள்

நான் பதிவு எழுத வந்த காலத்திலிருந்து இந்த அனானிமஸ் கொடுமைகள் / தொல்லைகள் அதிகம்... நிறைய கமண்ட்ஸ் அப்ப்ரூவல் போடுவதில்லை. பல கமண்ட்ஸ் மிகவும் கெட்ட வார்த்தையாக இருக்கும். (அண்ணன் ப்ளாகில் பார்த்திருப்பீர்கள்!) இதற்கும் ப்ளாக் எழுதும் நாள் ஆட்கள் தான். பலருக்கு ஈமெயில் மற்றும் போன் நம்பர் வேண்டுமாம். அதை வைத்து, அவர்களுக்கு கிடைக்குமா குஷி?

அதையே ரமேஷ் அவர்களும் எழுதியிருக்கிறார்...

அனானிமஸ் கமன்ட்டர்கள்

இங்கே படியுங்க, இன்று அடிபட்டது என் நண்பி திவ்யா.

பெங்களூரில் நான்

என்ன கொடுமை இது?

சம்மந்தப்பட்ட ஆள் பிடிக்கப்படும் வரை, யாருக்கும் நிம்மதி இல்லை.

அந்த ஆள் நான் தான் கமன்ட் போட்டேன், "சாரி" என்று சொல்ல வேண்டும்.

இன்டர்நெட் கொடுக்கும் சுதந்திரம், தவறாக உபயோகித்தால், களி தின்ன நேரிடும்!

:-(

குழந்தை எனும் மேஜிக் வார்த்தை

[baby-cartoon.jpg]

இந்த கதை (லக்கிலூக் யுவக்ரிஷ்னா எழுதியது) படித்தேன்...
குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!
கதை அருமை. நிகழ்வை அருமையாக படம் பிடித்துள்ளீர்கள்! நன்றி!

********

எனக்கு தெரிந்த நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு ஒன்பது வருடமாக குழந்தைகள் இல்லை, கமலா செல்வராஜ், ஜமுனா, ஆஷா ராவ் எல்லரையும் பார்த்தாகிவிட்டது. சிங்கபூரில் சில லட்சங்கள் செலவு செய்தாகிவிட்டது. கொடுமை என்னவென்றால், இருவருக்கும் நார்மல் தான்!

பாம்பிற்கு அறியும் பாம்பறியும் பாம்பின் கால்!

Monday, June 1, 2009

தக்காளி முட்டை ஆம்லெட்

இந்த பதிவை படித்த போது ஒரு கமன்ட் போட்டேன்.

இரண்டு முட்டையும் ஒரு வெங்காயமும்

//ரொம்ப நல்லா இருக்கு. தக்காளி சேர்த்தால் இன்னும், ஆம்லெட் நல்லா வரும். என் ப்ளோகில் எழுதுறேன்.//

******

அதனாலே, இந்த போஸ்ட்.

நான் முட்டை வெஜிடேரியன் என்று நம்புகிறேன்.

முதல் ஆளுக்கொன்று என முட்டை கணக்கு வைத்து, தேவையான அளவு உப்பு காரம் போட்டு மிக்ஸ் செய்யவும். ( கலக்கவும் - என் மகள் தான் இதில் இப்போ எக்ஸ்பர்ட் )

பிறகு தவாவில், சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்த வெங்காயத்தை, வதக்கவும் (கோவை ஸ்டையில், பொன் வறுவல் ).

நறுக்கி வைத்த தக்காளியை ( ஸ்மால் பீஸ் ) சேர்த்துப்போட்டு வதக்கவும். இந்த சீக்குவன்ஸ் முக்கியம். அதை நன்றாக தவா அளவு பரப்பிவிடவும்!

பிறகு, கலக்கி வைத்து முட்டை கலவையை அதன் மீது ஊற்றவும். ஸ்ப்ரெட் செய்யவும். சிறிது எண்ணெய் மேலே ஊற்றவும். வேக விடவும்.

தோசை திருப்பி போடுவது போல, திருப்பி போடவும். வேக விடவும்.

மூன்று நிமிடத்தில் தக்காளி முட்டை ஆம்லெட் ரெடி. என்ஜாய் பண்ணுங்கள்.

******

குழந்தைகள், ஸ்கூலில் இருந்து வந்துவிட்டார்கள். அரை நாள் தான். புது உனிபார்ம், டை மற்றும் குதுகுலம்., சொல்லி மாளாது!

மதியம் சிம்பிள் தாளித்த சாப்பட்டிற்கு இது தான் தொட்டுக்கொள்ள காய்.

என்னவர் ஆபீஸில் கொட்டிக்கொள்வார். :-(