Wednesday, February 25, 2009

ஈஷா யோகா மையமும் வியாபாரத்தனமும்

ஈஷா யோகா மையமும் வியாபாரத்தனமும் வாழ்கையில் ஆன்மீக வழி நாடுவோருக்கு ஒரு பாடம்....

இதை படியுங்க... பரிசல்காரன் எழுதுகிறார்....

அவியல் – 25.02.2009

இந்த பதிவில் திரு கிருஷ்ணகுமார் அவர்கள் சொல்கிறார்....

//அங்கே புத்தக ஸ்டால்களில் புத்தகம் வாங்கியபோது ‘640 ரூபாய்’ என்றார்கள். பில் கேட்டேன். பில் கொடுக்க மாட்டோம். அது எங்களுக்கு வேண்டும் என்றார்கள். ‘அப்போ நான் வேற யாருக்காவது வாங்கிட்டு போறேன்னா அவங்களுக்கு விலை எப்படித் தெரியும்?’ என்று கேட்டேன். (பல புத்தகங்களில் என்ன விலை என்பது அச்சடிக்கப்பட்டு இருக்காது!) அப்படி உங்களை நம்பாதவங்களுக்காக நீங்க ஏன் வாங்கீட்டுப் போறீங்க?’ என்று கேட்டார் அந்தப் பெண். கேட்டதோடு மட்டுமில்லாமல் ‘புக்ஸை திருப்பி வாங்கிக்கோங்க’ என்றார் கடையில் விற்பனையில் இருந்தவரிடம். இவர் அங்கே வாலண்டியராம். ‘நீங்க ஈஷா க்ளாஸ் முடிச்சு வாலண்டியரா இருக்கறது வேஸ்ட்டுங்க. இப்படி ஒரு பதிலை உங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்கல. நீங்க வியாபாரம்னு ஆரம்பிச்சு கடை விரிச்சுட்டீங்க. நான் உங்களுக்கு டிவோட்டீயோ, ஃபாலோயரோ இல்ல. வெறும் கஸ்டமர்தான். என்னைத் திருப்திப் படுத்தறது உங்க கடமை’ என்று திட்டிவிட்டு நகர்ந்தேன். ச்சே!//

என்னே ஒரு பிரச்சனை!

************

என் நண்பி திவ்யாவும், இன்னொரு நண்பி சாந்தி மூலம் ஈஷா யோகா மையம் குறித்து அவ்வளவாக ப்ரிரியப்பட்டு சொல்லவில்லை. திவ்யாவின் கணவர் அமெரிக்கன் என்பதால், அவர்களிடம் சில ஆயிரம் டாலர்கள் கறப்பதில் தான் ஆர்வம் காட்டினார்களாம்.

நானும் இந்த அடோநேசன் (Attenuation - Dwindling - திருட்டு) ஆர்வத்தை ரவிசங்கர் மையத்தில் (பெங்களூரு கனகபுரா ரோடு) பார்த்துள்ளேன். ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தால், உங்களுக்கு, குசன் மண்டியிட்டு அமர்ந்து வாஜ்ராசனம் செய்து பிரணயாமம் செய்ய வைப்பார்கள் (சோ ஹம்), இல்லையென்றால் வெறும் தரை தான், கவனிப்பு இருக்காது!

சில மனிதர்கள் அப்படிதான். கடவுள் பெயரைச்சொல்லி என்ன ஒரு ஏமாற்றுத்தனம்!

Another thing, they accept all religion people to get hold of more in their business.

Monday, February 23, 2009

எல்லா புகழும் இறைவனுக்கே

வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான். இரண்டு ஆஸ்கார்கள். அருமை.

நிச்சயம் கிடைக்கும் என்று நம்பியவர்கள் தமிழர்கள்.

நிஜமாக உங்கள் பக்கம் அம்மா (க்கள்) உள்ளனர். நீங்கள் சொன்ன ஹிந்தி பட வசனம்... மேரி பாஸ் மா ஹே.

ஒரு இந்தியன் ஆஸ்கர் வாங்குவதை காண வேண்டும் என்ற என் கனவும் நிறைவேறியது. கமலை நான் ஒரு பேச்சுக்கும் நம்பவில்லை. அது வேறு விஷயம்! ;-)

ஈழம் குறித்து நீங்கள் பேசியிருக்கலாம்... ஏ.ஆர்.ரகுமான்... உலகத்தின் எம்மூலையிலும் கருத்து எதிரொலித்திருக்கும். அமைதி அன்பு வழியில் தான் உலக அமைதி வரும் என்பதை எவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் சொன்னீர்கள்!

ரஹ்மானும் ஸ்லம் வாழ்க்கை மாதிரி தான் இந்துவாக திலீப் என்ற பெயரில் பிறந்து பிறகு முஸ்லீமாக வளர்ந்து... வாழ்ந்து பிறகு சினிமாவில் வளர்ந்து, இந்த இடத்தை பிடித்துள்ளார். வெறும் பத்தாம் வகுப்பு தான். அவர் பலரை இப்போது படிக்க வைக்கிறார். சில இன்ஜினியர்கள் மற்றும் டாக்டர்கள் உருவாக காரணம் அவர். என் கணவர் மூலம் விவரம் தெரிந்தது. மதம் சார்பு இருந்தாலும், அவர் நல்லவர்.

என்ன ஓர் மனக்குறை, ஏழை வீட்டில் பெண் எடுக்காமல், ஒரு பணக்காரியை கட்டினார். ஒரு சராசரி ஆள் என்பதை காட்டினார்.

இன்னொரு விஷயம், ஏ.ஆர்.ரகுமான்னோடு இருக்கும் (பாட்டு வரிகள் மாற்றப்பட்ட விசயத்தில்) கருத்து வேறுபாடு காரணமாக, குல்சார் அமெரிக்கா செல்ல விரும்பவில்லையாம். என்ன ஒரு வித்தியாசம்!

இளையராஜா மனமுவந்து பாராட்டினால் தகும்!

*********

தமாஸ் பதிவு.... ஆஸ்கார் நாயகன் கமலுக்கு விருது இல்லையா?