Thursday, February 5, 2009

ஏ.டி.எம் தானியங்கி வங்கி டப்பா

ஏ.டி.எம் என்றால் தானியங்கி வங்கி டப்பா என்று சொல்லெலாம் அல்லவா?

சரி இது என் அனுபவம்.

நான் செய்த வேலைக்கு, ஒரு கம்பெனியில் இருந்து, சில நூறு டாலர்கள் வந்தது. அதை சிடிபாங்கில் அக்டோபர் சமயத்தில் டெபாசிட் செய்தேன். (அண்ணா சாலை ஏ.டி.எம்). இன்னும் அந்த பணம் கிடைத்த பாடு இல்லை. ஒரு செக் ஆறு மாத வேலிடிட்டி இருக்கும்.

என்ன ஆயிற்று என்று கேட்க, பல நூறு கால்கள். பணம் கொடுத்த கம்பெனி திவால் ஆகவில்லை. என்ன ஆயிற்று?

அதை கேன்சல் செய்துவிட்டு, டைரக்ட் டெபாசிட் செய்ய சொல்லியுள்ளேன்.

என் கணவரின் சம்பளம் கொடுக்கும் ஏ.டி.எம்மும் இது தான், அதனால், பணம் காய்ச்சிக்கொண்டு தான் இருக்கு! (மாதம் தவறாமல்)...

கதவு ஓபன் செய்யும் விதம், கேவலம். செக்கூரிட்டி இருந்தாலும், நம் கார்டை உள்ளே சொருகி எடுக்க வேண்டும். நம்பமாட்டார்களா?

அப்புறம், பாதி நேரம், காசு கொடுக்காது. மீண்டும் மீண்டும் கார்டை, உள்ளே சொருகி எடுக்க வேண்டும். திடீரென்று பின் நம்பர் தவறு என்று சொல்லும். அது வரை, பேங்க் பேலன்ஸ் காட்டும்... வேறு எல்லாம் எல்லாம் செய்யும்...

சமீபத்தில் ஒரு நாள் இரவு சுமார், பத்து மணி இருக்கும், அடுத்த நாள் காலை கோவை செல்ல இருப்பதால், அப்போதே பணம் எடுக்க நின்றோம், ஒருவர் குடித்து இருப்பார் போல... ஏ.டி.எம்மை திட்டிக்கொண்டு உதைத்துக்கொண்டு இருந்தார்!

*******

நான் ரசித்த பதிவு...

ஏடிஎம்மிற்குள் லட்சுமி பூஜை.!