Saturday, February 14, 2009

கோவையில் ஒரு வீடு வாங்க வேண்டும்

சென்னையில் இருப்பதை விட, விலை மலிவாக கிடைக்கும் என்கிறார்கள் கோவையில்.

கோவையில் ஒரு வீடு வாங்க வேண்டும், தனி இடத்தில்.

இல்லை இடம் மட்டும் வாங்கி, ஒரு வீடு கட்ட வேண்டும்.

தேடும் இடங்கள், கணபதி, வடவள்ளி, கவுண்டம்பாளையம் மற்றும் கோவைபுதூர்....

இண்டர்நெட்டில் விலை அதிகமாக போட்டுள்ளார்கள்.

விவரம் தெரிந்தவர்கள், விலை விவரத்தை பின்னூட்டம் இடவும்.

ப்லாகர் சமுதாயம், நல்ல விவரம் தெரிந்தவர்கள்...

வால்மீகியும் காதலர் தினமும்

வால்மீகியும் காதலர் தினமும் தொடர்புடைய ஒன்று என நினைக்கிறேன். ராமயாணம் மூலம். இன்று பிப்ரவரி பதினான்கு. காதலுக்காக ராமன் காட்டில் இருந்தது பதினான்கு வருடங்கள். எதோ ஒரு பதினான்கு தொடர்பு.

கம்பரை நான் இங்கு அழைக்கவில்லை.

சரி இந்த முதலிக்கை ஜெயிலில் போட்டுவிட்டால், தொந்தரவு குறையுமா?

ஹிந்துத்வா அமைப்புகள், பழங்காலத்தில் இருப்பதை போல பெண்கள் வீட்டில் கல்யாணத்திற்கு பிறகு, கொண்டு வந்த நல்ல டவ்ரியோடு) உட்கார்ந்துக்கொண்டு வாழ்க்கை ஓட்ட வேண்டும் என்று சொல்கிறார்களா?

சரி அவர்களுக்கு தெரியுமா மனித இனம் எங்கிருந்து வருகிறது என்று?

ஹேப்பி வேலண்டைன்ஸ் டே. ( அதன் இந்திய மதிப்பாக, அன்பை வெளிப்படுத்தும் தினமாக எடுத்துக்கொள்ளுங்கள் )

**************

மாலா 9ஆம் வகுப்பு 'பி' பிரிவு

நல்ல பதிவு, ரசித்துப்படித்தேன்.

நன்றி!

Tuesday, February 10, 2009

கல்யாணம் காட்சி

சென்ற வாரம் இறுதியில், நான் கோவை மற்றும் திருப்பூர் சென்று வந்தேன். நண்பர்கள், வலையுலகில் எழுதுபவர்களை அலைபேசியில் கூப்பிட டைம் இல்லை.

ஒரு கல்யாணம்.

காட்சிகளாய் நடந்தவை இவை. காலையில் நீலகிரி எக்ஸ்ப்ரெஸ்ஸில் கோவை சென்று மதியம் வரை, பெற்றோருடன் கழிந்தது. பிறகு, மதியம் இரண்டு மணி இருக்கும், திருப்பூருக்கு கிளம்பினோம்.

எங்கள் சொந்தம் ஒருவர் வீடு, கருவம்பாளையம் என்ற இடத்தில் உள்ளது, அங்கு சென்று அவர்களை பார்த்துவிட்டு, பட்டு சேலை சகிதம், திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றோம். டூ வீலர்கள் அதிகம் ... ட்ராபிக் ஜேம். தென்னம்பாளையம் என்ற இடத்தில் ஒரு பெரிய மண்டபம்.

திருப்பூரில் புக் எக்சிபிசன் டவுன் ஹால் மைதானத்தில் நடந்துக்கொண்டு இருந்தது. செல்ல முடியவில்லை. டைம், வாகன வசதி போன்றவை பயன் பெறவில்லை.

என் கசினுக்கு யு.கே. மாப்பிள்ளை. மூன்று வாரம் லீவில் வந்துள்ளார். போட்டோ பார்த்து அரேஞ் செய்தது. வீடியோ சேட் மூலம் பேசினார்கள்? வரும் புதன்கிழமை விசா வாங்குகிறார்கள். அடுத்த சனிக்கிழமை இரவு லண்டனுக்கு பயணம்.

மாப்பிள்ளை இடத்தில் வசதி குறைவு என்று பேசிக்கொண்டார்கள். அதனால் என்ன, பெண்ணை நன்றாக வைத்து காப்பாற்றினால் போதும் அல்லவா?

சரி, கல்யாணத்தில் என்ன விசேஷம்? எல்லாம் காண்ட்ராக்டில் கொடுத்து விட்டார்கள். இரவு பப்பே, மற்றும் சர்வீஸ். தோசை வகைகள், சுட சுட பரிமாறினார்கள். சர்வீஸ் செக்சனில் உணவு நிறைய வீண் ஆனது... வேலை ஆட்கள், இஷ்டத்திற்கு பரிமாறினார்கள். குழந்தைகள் எல்லாம் வேஸ்ட் செய்தார்கள். இரண்டு வேலை சாப்பாடு உட்பட, டெகரேசன் எல்லாம் சேர்த்து நான்கு லட்சம் என்றார் அத்தை! மூலைக்கு மூலை டிவி வைத்து எடுக்கும் விடியோவை காண்பித்துக்கொண்டு இருந்தார்கள்.

நிறைய சொந்தங்கள், தங்கள் நகைகளை போட்டு அழகு காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். நகைகளும் கல்யாணங்களும் ஒன்றுவிட்ட காலம் இது.

ஒரு கல்யாணம் நடக்கும் இடத்தில் தான், இன்னொரு கல்யாணம் நிச்சயம் ஆகும் என்பார்கள். அது தான் எல்லா கல்யாண வயது பெண்களும், அழகு நிலையங்களாக வந்து அமர்க்களம் செய்தார்கள்! (உன்ன வீட்டுலே பெண் இருக்கா?)

கசினின் அப்பா கம்பனியில் வேலை பார்த்தவர்கள், நூற்றி சொச்சம் குடும்பத்தினரும் வந்திருந்தது சிறப்பு. நெகிழ்ச்சியான விசயம்.... அவர்களும், தங்களது சார்பில் ஒரு கோல்ட் ப்ளேட் வாட்ச் செட் பரிசு கொடுத்தார்கள்....

அடுத்த நாள், ஞாயிறு ஒன்பது மணி தைப்பூச முகூர்த்தம். டிபன் முதலில் கொடுத்துவிட்டார்கள். பிறகு, கோவைக்கு சென்று பீளமேடு அருகே ஒரு மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் விருந்து. ஒரே இடத்தில் இருந்திருந்தால், உறவினர்கள் வந்து செல்ல கஷ்டம் போல?

நிறைவாய், நிறைய பழைய சொந்தங்களை பார்த்து விட்டு... சென்னையில் இருக்கும், மூன்று சொந்தங்கள், பக்கத்து தெருக்களில் இருக்கிறார்கள், இன்னும் சந்தித்ததில்லை.... சென்னை வாழ்க்கை பிசி.

இந்த வார இறுதியில், ஒருவர் வீட்டில் ஒரு சிறு விசேஷம், சந்திப்போம்.

இரவு எட்டரை மணிக்கு ரயில் பிடித்து, நேற்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தோம். இப்போது தான், சென்று வந்த அசதி தீர்ந்தது!