Friday, January 16, 2009

டிவியும் பொங்கல் திருவிழாவும்

டிவியும் பொங்கல் திருவிழாவும் ... வந்து போய்க்கொண்டு இருக்கின்றது...

டிவி மூலம் தான் நாம் எந்த விழாவும் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறோம்.

நான் கல்யாணம் செய்து பத்து வருடங்கள் ஆகிறது. எதையும், எதிர்பார்த்து விழா என்று செய்வதில்லை. சில சமயம் அப்பா அம்மா வருவார்கள்.

சொந்தங்கள் வாரம் ஒருவராவது காலையில் குளித்து ரெடி ஆகி செல்ல வருவார்கள். ஒரு பிட் ஸ்டாப் என்பார், கணவர். இருந்தாலும், ஊரிலிருந்து ஏதாவது எடுத்து வருவார்கள், மகிழ்ச்சியின் பகிர்தல்கள்....

********************

அமிதாப் பச்சனின் ப்லோக் படித்தேன். எப்படி மீடியா அட்டகாசம் செய்கிறது பாருங்கள்.

இது கொஞ்ச நாள் முன் என் நண்பர்கள் பற்றி சிலர் அடித்த கூத்து (அனைத்து வயதினரும்) ஞாபகம் வருது...

அவர் ப்ளோகில் நான் கமன்ட் போட்டிருந்தும், எதோ காரணம் எனக்கு தெரியவில்லை. இந்த ப்லோக் விலாசம் (உரல்) கொடுத்தால் இருக்குமோ?

ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற சேரிவாழ் கோடீஸ்வரன் படம் குறித்து, அவருக்கு வந்த கமண்ட்ஸ் எழுதியிருந்தார். பிற்பாடு, நேயர்களின் கருத்து கேட்டிருந்தார். அதை அவர் கருத்தாக பத்திரிக்கைகள் அளித்து விட்டன.

அமிதாபும் ஜோக்காக மன்னிப்பு கேட்கிறார்... (நண்பர் எழுதிய மன்னிப்பு கோருகிறேன் பதிவு தான் ஞாபகம் வருது)

அதை போலவே இன்னொரு விஷயம். அக்சய் குமார் என்ற நடிகர், பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்குபவர்... வருடம் 70 கோடிகள் என்கிறார்கள்... அமிதாபை மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டு, அமிதாப் தான் தவறு செய்தார் என்ற ரீதியில்... ஒரு போஸ்ட். இங்கே படியுங்கள்.

http://www.uaedailynews.com/entertainment/1592.html

என்ன கொடுமை இது? பாவம் வயதானவர், குளிரால் பாத்ரூம் போக எப்படி சிரமம் பட்டிருப்பார்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?

சிலர் அப்படி தான் திருந்தமாட்டார்கள்... பெயர், வாசகர் பார்வை, என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஒரு கிக் இல்லையா?

Tuesday, January 13, 2009

கோபங்களும் தீர்வுகளும்

நேற்று அந்த சோதா அக்பர் பெண் பற்றி விஜய் டிவியில் பார்த்தேன். எதோ டுபாகூர் போல இருக்கு கோபிநாத். இதை வைத்து, நீங்கள் கப்சா நடந்தது என்ன என்று ஒரு தனி ப்ரொக்ரேம் போடலாம்.

உரைநடைகளில் தங்கள் நண்பர்கள் விலாவரியாக விவரித்த கூற்றுகளை, கோடிட்டுக்காட்டுவது தமிழர் மரபு. சாலமன் பாப்பையா, அவ்வை ஷண்முகம் போன்றவர்கள் இதில் கை தேர்ந்தவர்கள்.

நானும் கல்கி, குமுதம், ஆனந்த விகடன் போன்ற பிரபல இதழ்களில் நிறைய வருடங்களாக எழுதுகிறேன் வேறு புனைப்பெயரில். ஆசிரியர் குழுக்கள் எனக்கு மிகவும் பரிச்சியம். கதைகள் கட்டுரைகள் எழுதுவது யார், என்று தெரியும். ஆண் வடிவில் பெண்ணா, அல்லது பெண் வடிவில் ஆணா என்பதும் கூட.

ஒரு பெண் எழுதுறாங்க, அவர் இவரை பற்றி குறிப்பிட்டு எழுதும் முன், பதிவு போடும் முன் இவரிடம் கேட்டிருக்கவேண்டுமாம்.... சரி அவர் தான் இவரிடம் அது பற்றி முதல் ஆளாக கேட்டுவிட்டார் அல்லவா? அதன் பிறகு ஏன் மூன்று மாதங்கள் கழித்து எழுதவேண்டும்? அது அது இல்லை , அது மாதிரி என்று சொல்லிவிட்டார் அல்லவா? பின்னும் ஏன் நக்கல்? இன்னும் ஏன் அந்த பதிவு வாழ்ந்துக்கொண்டு இருக்கு?

தவறு இருப்பின் சம்பந்தப்பட்டவர் மறக்க வேண்டும், அந்த பதிவு போட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், இவ்வளவு வளர விட்டிருக்க மாட்டேன்.

ஒன்றை கவனிக்கவும், நான் யாருக்கும் சப்போர்ட் செய்யவில்லை. நியாயம் உள்ள பக்கம் தான் ஜெயிக்கும்.

அது இல்லாததுனால் தானே இவ்வளவு பதிவுகளும் தூற்றுகளும், குழாயடி சண்டை போல?

இதற்கெல்லாம் காரணம் வலையுலக மார்கெட்டிங் என்ற பதிவாக இருக்கலாம்.

இந்த பதிவை பாருங்கள், எவ்வளவு மனம் நொந்து எழுதுகிறார் திவ்யா.

பதிவுபோதை அய்யா நீங்க நலமா

ஆமாம், வேலை நேரத்தில் ப்லோக் பக்கம் வந்து டைம் வேஸ்ட் செய்பவர்களை, வேலையில் இருந்து தூக்கிவிடமாட்டார்களா? எச்.ஆர். பாலிசி என்ன சொல்லுது? எல்லாம் காலேஜ் முதல் இந்த ப்ராக்சி செய்யும் வேலை.

எப்படியோ, பார்த்து நடந்து கொள்ளவும்.

************

தமிழ்மணத்தில் போட்ட ஓட்டுக்களும் செல்லாமல் போய் விட்டன. மீண்டும் டைம் வேஸ்ட் பண்ணனுமா? என்ன கண்றாவியோ!

Monday, January 12, 2009

பதிவுகளின் நோக்கங்கள்

எதற்காக பதிவுகள் எழுதுகிறோம்? ஒரு நோக்கம் வைத்து தானே?

சரி, அந்த நோக்கம் தவறாக இருந்தால், ஆணாக இருந்தாலோ, பெண்ணாக இருந்தாலோ, அந்த பதிவை எடுத்து விட வேண்டியது தானே?

ஒரு பெண் எழுத்தாளர், சொல்லுகிறார், என்னிடம் கேட்காமல், ஒருவர், தன் நண்பியிடம் நக்கல் செய்துவிட்டார் என்று. அதற்காக ஒரு பதிவு போடுகிறார், தவறு என்றும் தெரிந்தும். மன்னிப்பு ஏற்கப்பட்டு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு மற்றும் அதன் தொடர்புடைய பதிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன. இப்போது இன்னும் அந்த கேனத்தனமான பதிவு உள்ளது. நக்கலா?

இடையில் சில நாட்டாமைக்காரர்கள், விசயத்தை திசை திருப்புகிறார்கள். தனி மனித தாக்குதல் மற்றும் ஆங்கில புலமை குறித்து பேசுகிறார்கள்.

ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள். சுண்ணாம்பு கேட்ட இசக்கி ஒரு பொருத்தமான கதை...

வம்பில் மாட்டிக்கொண்டு களி தின்ன போகாமல் இருந்தால் நலம்.

என் கணவரின் நண்பர் ஒரு பிரபலமான வார இதழில் எடிடோரியலில் வேலை செய்கிறார். நிறைய ஆட்கள் எழுதுவதில் கிசு கிசு என்று உண்மைக்கு புறம்பான சில தகவல்கள் சொல்லப்பட்டு உள்ளன. நான் வெளியிடப்போவதில்லை. சிலருக்கு மட்டும் இது புரிந்திருக்கும்.

Sunday, January 11, 2009

அர்த்தங்கள் வாதங்கள் பதிவுகள்

நான் இந்த பதிவை படித்தேன். மன்னிப்பு கோருகிறேன்!

மன்னிப்பு கோருகிற மாதிரி சாட்டை அடி கொடுக்கிறார் ரமேஷ்! கமன்டுகளை படிப்பது சுவாரசியமாக உள்ளது.

திவ்யாவும் பதிலுக்கு பதில் கொடுக்கிறார் இங்கே...

இண்டேர்ணலைஸ் மன்னிப்பு

திவ்யாவின் பதிலடிகள் அருமை. அவரின் பதிவில் உள்ள திடம், காரம் அமெரிக்காவின் கொள்கை வெறி போல உள்ளது.

ரமேஷ், நீங்கள் எதற்கு தலை தாழ்த்த வேண்டும்? உங்கள் முதல் கமன்டை அவர் (உஷா ராமசந்திரன்) ஏற்றுக்கொண்டு பின் மறந்தால், நியாயம் உங்கள் பக்கம் தான். அது தானே, இந்த பதிவுகளுக்கு காரணம்?

அவர் தன் பதிவில் உள்ள தமாஸ் கமன்ட்களை நீக்குவாரா? உங்களை திட்டி எழுதிய பதிவை எடுத்துவிடுவாரா?