Saturday, November 15, 2008

சென்னையில் பதிவர் சந்திப்பு

பதிவுலகம் மூலம் கிடைத்த நண்பர்கள் ரமேஷ், திவ்யா மற்றும் சாந்தி ஜெய்குமார்.

பீட்டர்ஸ் ரோடு சரவணா பவன் அருகில் நடக்கும் தூரத்தில்.. திவ்யா அவர் நண்பர் ரமேஷ் வந்திருந்தார்... இரண்டு சிறு குழந்தைகள் ... அப்புறம் ரவி என்பவர், திவ்யாவின் நண்பர் குடும்பமும் வந்திருந்தது. அவர் மனைவி சித்ரா மற்றும் இரண்டு பெரிய குழந்தைகள் ... வசதி ஆனவர்கள் குழந்தைகள் வளர்க்கும் விதம் அருமை. கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பார்கள் போல. நாங்கள் வளர்ப்பது அடித்து... வித்தியாசம் தான்... சூழ்நிலைகள் மாறும் போது, குழந்தைகள் மன நிலையும் மாறுகிறது.

உலகம் சிறியது என்று தெரிகிறது. நண்பர் வட்டம் வேறு, பதிவுலகம் வேறு.

எனக்கு இந்த காபி ஹவுஸ் பற்றி எல்லாம் தெரியாது. எங்கள் வீடு அருகில் தான். நடக்கும் தூரம். தனியாக சென்றேன். குழந்தைகள் குறும்பு அதிகம். கணவருக்கு அவர்களை பார்க்கும் வேலை. வசதி வாய்ப்புள்ளவர்கள் சென்று வருவது என்பது தெரிகிறது, காபியின் விலை பார்த்து! எனக்கு சங்கோஜமாக இருந்தது.

திவ்யா ஏன் கணவரையும் குழந்தைகளையும் அழைத்து வரவில்லை என்று கோபித்து கொண்டார். அடுத்த முறை நிச்சயம், எங்கள் வீட்டில் சாப்பிடுவார்.

நான் கேட்டுக்கொண்டு தான் இருந்தென். நிறைய உலக விஷயம் பேசினோம். நேரம் போனது தெரியவில்லை. பிறகு சந்தோசமாக கிளம்பினோம். இந்த பதிவுலக நண்பர்கள் எப்போதாவது ஒரு முறை சந்தித்து கொண்டால் நல்லது... வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் செலவு செய்வது கொஞ்சம் கூச்சம் ஏற்படுத்துகிறது. என் பர்சில் நூறு ருபாய் இருந்தது. அந்த இடத்திற்கு நண்பர்களோடு செல்ல குறைந்த பட்சம் கையில் ஆயிரம் ருபாய் இருக்க வேண்டும். (இதை டைப் செய்யும் போது கணவர் சிரித்துக்கொண்டார்... நம்ம ஒரு வார சிலவு பணம் என்றார்!)

போட்டோ கூடாது என்ற நிபந்தனை, இருந்தாலும் சில போட்டோஸ் எடுக்கப்பட்டன. ப்ளோகில் போடக்கூடாது. என் கையில் கேமரா இல்லை.

நான் நெட்டில் இருந்து ஒரு பழைய போட்டோ அமேதீச்ட் பற்றி இணைக்கிறேன்.


திவ்யா சீக்கிரம் ஏர்போர்ட் செல்ல வேண்டும் என்று கூறி விடைபெற்றார், ரவி குடும்பத்தினரோடு. சாந்தி ஜெய்குமார், மற்றும் ரமேஷ் குடும்பத்தினரோடு விடை பெற்று கிளம்பினேன். திவ்யா கொடுத்த கிப்ட்ஸ் பேகை பிடித்துக்கொண்டு நான் வீட்டிற்க்கு நடக்க ஆரம்பித்தேன். மனம் கனமாக இருந்தது.

-----*------

அப்புறம் சென்னையில் ஒரு பதிவர் கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது நான் என் குடும்பத்துடன் அந்த ஏரியா பக்கம் சென்று வந்தேன், காந்தி சிலை. எல்லாம் ஆண்கள் மாயம். ஐந்து மணிக்கு பீச் சென்றோம், நல்ல காற்று. கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசினோம். சூடான சுண்டல், குழந்தைகள் ஐஸ் கிரீம்... குழந்தைகள் அது வேண்டும் இது வேண்டும் என்று கத்தினார்கள்... கணவர் சொன்னார்.. நண்பர்கள் பார்க்க குழந்தைகளோடு சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றார்... தூறல்...மழை வரலாம்...ஆறரைக்கு கிளம்பி விட்டோம். மொத்த சிலவு ஒரு அமேதீச்ட் காபி விலை.

இப்போது
சாப்பாடு என்று ஒன்று உள்ளது செய்ய வேண்டும்.

ஹில்லரி கிளிண்டன் ஒபாமாவின் அமைச்சர் ஆகிறார்

இந்த நியூஸ் படித்தேன்.

ஹில்லரி கிளிண்டனுக்கு ஒரு பெரிய வாய்ப்பு.

ஒபாமா எட்டு வருடங்கள் யு.எஸ். பிரேசிடண்ட் ஆக தொடரும் தந்திரம்.

செக்ரடேரி ஆப் ஸ்டேட் என்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைச்சர் பதவி போன்றது.

வாழ்த்துக்கள் ஹில்லரி!

Friday, November 14, 2008

பதிவுபோதை: சென்னையில் இருந்து

பதிவுபோதை: சென்னையில் இருந்து ரமேஷ் அவர்கள் எழுதியது.

என்னுடைய கொடுமைக்கார பாவிகள் பதிவுக்கு ஒரு அப்டேட்...

நாளை ஒரு பதிவர் சந்திப்புக்கு திவ்யா, சாந்தி மற்றும் ரமேஷ் வருகிறார்.

நோபல் பரிசும் இந்தியர்களும்

நோபல் பரிசும் கிடைப்பது இந்தியர்களும் கஷ்டமான விஷயம் போல இருக்குது.

இது வரை, இந்தியாவில் பிறந்து அல்லது இந்தியராக வாழ்ந்தவர் வாங்கியது...

  1. இலக்கியத்திற்கு ரபீந்தரநாத் தாகூர்.
  2. பிசிக்ஸ் சர். சி.வி. ராமன்
  3. மருத்துவம் ஹர்கோபிந்து கொரானா
  4. அமைதிக்கு அன்னைதெரசா
  5. பிசிக்ஸ் சுப்ரமணியன் சந்திரசேகர்
  6. எகனாமிக்ஸ் அமர்த்யா சென்
  7. அப்புறம் உலக அமைதி பரிசு, அல்கொரோடு, பச்சூரி.

இப்படி நோபல் நோக்கி பயணம் இந்தியர்கள்...

எல்லாம் வாழ்கையில் இருப்பது தான், இல்லாதவர்கள், கொஞ்சம் கஷ்டம் தான் படுவார்கள்.

ஆல்ப்ரெட் நோபல் ஒரு வெடிகுண்டு தயாரிப்பாளர் என்பது கொசுறு செய்தி. அவர் தான் கன் பவ்டர் கண்டுபிடித்தார்.

Thursday, November 13, 2008

கொடுமைக்கார பாவிகள்

இரண்டு மூன்று ப்லோகுகளில் பார்த்தேன்...

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood sport

சட்டக்கல்லூரி மாணவர்களின் வன்முறை


காட்டுமிராண்டிக் கல்லூரி

சட்டக்கல்லூரி: கண்களில் பிறப்புறுப்பை சொருகிக்கொண்ட சக மாணவர்கள்..

பதிலுக்கு பதில்

Barbarians

ஈரல் கெட்ட எதிர்மறைக் காவல்துறை!

என்னங்க நடக்குது சென்னையிலே? இதுலே பொண்ணுங்க நின்னு வேடிக்கை பார்த்திருக்காங்க. செருப்பு எடுத்து அடிச்சிருக்க வேணாம்?

காலேஜ் ரவுடிகள் அட்டகாசம் தாங்கலைங்க?

காவல் துறை மந்திரி அய்யா வூட்டுக்கு போங்க, ராஜினாமா பண்ணிட்டு.

அவீங்களை எல்லாம் வூட்டுக்கு அனுப்புங்க. அவீங்க அப்பா அம்மா எல்லாம் என்ன கொடுப்பினை செய்தார்களோ அவீங்களை பெக்கரதுக்கு! கழிசடைகள்.

Wednesday, November 12, 2008

ஐம்பது பதிவுகள்

நான் மே மாதம் 2008 முதல் தமிழ் பதிவுகள் போடுகிறேன். இவை எல்லாம் எனக்கு தெரிந்த மற்றும் பிடித்தவை.

பதிவு போடும் பாதி ஆட்கள் கொடுமை...

சிலவற்றை நான் தொடர்கிறேன், படிக்கிறேன்... ரைட் சைட் பாருங்கள்.

ஒரு ஒரு பதிவரோடு மட்டும் பேசியுள்ளேன். இன்னொருவரை, வரும் சனி பார்க்க போகிறேன்.

ஐம்பது பதிவுகள் எல்லாம் எழுதியவை, எனக்கு பிடித்தவை அதிகம்.

நான் எழுதும் சமையல் குறிப்புகள்... Cooking Tips

எனது ஆங்கில ப்லோக்

இப்படி போகிறது எனது பாதை!

உதவி வேண்டி எங்கும் கரங்கள்


மேலே உள்ள லிங்கில் உள்ளது விவரம்.

உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.

பதிவர்கள் அனைவரும் விழிப்புணர்வு செய்யவும். நன்றிங்க.

Sunday, November 9, 2008

நிலாவும் சந்தரயானும்

நிலாவும் சந்தரயனும் ஒரு நல்ல நிகழ்ச்சி இந்திய பொறுத்த வரை.

இப்போது நிலாவை சுற்றுகிறது சந்திராயன். நொவம்பர் பதினாலு குழந்தைகள் தினம் அன்று, நமக்கு நிலாவின் நிஜமான தோற்றம் பற்றி படம் கிடைக்கும்.

இனி நிஜமான நிலா பற்றி யோசிக்கலாம். நடிகை நிலா இல்லை. ஹி ஹி ... அவர் இன்னும் மினரல் வாட்டரில் குளிக்கிறாரா?

பத்ரி அவர்கள், சந்திராயன் பற்றி எழுதுகிறார்! படங்களுடன். நன்றி.

********

நண்பர் சவுண்ட் பார்டி லாஸ் ஏஞ்சலஸ் போலிஸ் பற்றி எழுதியது -

LAPD நாய்கள், Shoot 'em Up, கொலை வெறி

அமெரிக்கர்களின் குணம் பற்றி பிடிக்கவில்லை.... எழுதவும் பிடிக்கவில்லை.

********

ஸ்ரீலங்கா பிரச்சனைக்கு தீர்வு என்ன?

ஒரே வழி - அணு குண்டு, பத்து! ஆட்டம் காலி. சோ சொல்கிறார்!

பதஞ்சலி யோகா சூத்திரம்

சிறு வயதில் அப்பா என்னகு பதஞ்சலி யோகா சூத்திரத்திற்கு அழகான விளக்க புத்தாக்கம் ஒன்று கொடுத்தார்.

ஆழியாரில், வேதாத்ரி மகாரிஷியும் அப்படி ஒரு சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அவர் இருந்த சமயம்.

ஐந்து வகை உணர்வுகள் உடல் வருத்தி யோகா மூலம் சரி செய்யும் விதை தான் அது. ஆறாவது உணர்வு, வந்து ஜனனம் அது நிச்டையால் வருவது. தியானம்.

சிலர் அவர்கள் தான் பெரியவர் எழுத்தாளர் என்று பெரிய் விசயமா எழுதுறாங்க.