Friday, May 15, 2009

தேர்தல் முடிவுகள் 2009

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று அமேரிக்காவில் இருக்கும் சிலருக்கு வியப்பு வரும் போது எங்களுக்கு எப்படி இருக்கும். ;-)

ஸ்ரீ லங்கா பிரச்சனை வைத்து வோட்டு போட்டுளார்கள் என்கிறார்கள். தெரியவில்லை.

கடைசி ஒரு மணி நேரத்தில் பத்து சதவிகிதம் வாக்கு பதிவு. எங்கேயோ ஒரு ப்ராப்ளம்... தமிழ்நாட்டில் 90% ஐந்து சதவிகிதம் தான் எப்பவும் வெற்றி மார்ஜின். சரி சரி நாளை காலை பதினோரு மணிக்கு தெரிந்து விடும், எல்லோர் ஆட்டமும்.

35-5, 25-15, 20-20 என்னவோ நடக்குது! சரி விஜயகாந்த் கட்சி என்ன ஆகும்?

சென்ற முறை மாதிரி இல்லாமல் 72% வோட்டு. 10% அதிகம். அப்போ ஆளும் கூட்டணிக்கே லாபம் எனலாம்.

*************

தேர்தல் முடிவுகள் மாதிரி இந்த ப்ளஸ் 2 முடிவுகள் இருக்கு. எங்க வீட்டு பக்கத்தில் தேறாதே கேஸ் என்பவர்கள் எல்லாம், நல்ல மார்க் வாங்கியிருக்காங்க. அதுக்காக, நல்ல படிச்சவங்களை குறை சொல்லலே. எதோ எங்கேயோ இஷ்டத்துக்கு மார்க் போடறாங்க! கணக்கில் எனக்கு ஒரு மார்க்கில் சென்டம் போச்சு அந்த காலத்தில்.... டிகேட். (இதுக்கும் இரு முறை செக் செய்து பார்த்தேன்.... என்னை பார்த்து காப்பி அடிச்சு அன்பு கூட சென்டம் எடுத்திருந்தாள்... அது தாங்க தமிழ்நாட்டு போர்ட் சிஸ்டம்... ;-))

குறைவான மார்க் வாங்குனவுங்க கவலை படாதீங்க. அதை வச்சு, கிடைக்கும் கோர்ஸ் படிச்சு, பெரிய ஆள் ஆகலாம் நீங்க. இந்த காலத்தில், சீட்டு கிடைகிறதே பெரிய விஷயம்.

ஏதாவது டிகிரீ முடிச்சாலும்... ஐ.ஐ.எம் கோர்ஸ் படிச்சு பெரிய ஆள் ( அண்ணன் நரசிம் அவர்கள் மாதிரி...).. இல்லே பரிசல் அண்ணன் கிட்டே சொல்லி திருப்பூரில் வேலை வாங்கலாம்.

என்.ஐ.ஐ.டி கோர்ஸ் இருக்கு கம்ப்யுட்டர் தொழில் குறையாது, திறமை வளர்திடுங்க. பேங்க் வேலை... அப்புறம் இருக்கவே இருக்கு கவர்ன்மென்ட் ஜாப். நானும் ரெஜிஸ்டர் செஞ்சு ஆறு எழு வருஷம் ஆச்சு. ஒரு வேலையும் வரலே.

இப்போ டைம் லிமிட் ( வயசு வச்சு ) ஆகிடுமோன்னு பயம் தான்.

சொந்த தொழில் இருக்கு... கவலை இல்லே.

******************

அப்புறம் நெஞ்சை உறைய வைக்கும் விளம்பரம்...

பெண் சிசு கொலை பற்றி ஒரு விளம்பரம்

Sunday, May 10, 2009

சில பதிவுகள்...

பதிவுகள் போட்டு ரொம்ப நாள் ஆச்சு.

முதலில் .... யாரோ ஒருவன் ஒன் சக பெண் பதிவரை துன்புருத்துகிறானாம்... என்ன கொடுமை இது. எனது நண்பி திவ்யாவின் ப்ளாகில் தான் அப்படி ஒரு தொல்லை இருந்தது...

மேலும் படிக்க...

பாலபாரதியின் ப்ளாக் ...பெண் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும், மே-10க்கான அழைப்பும்..

*****

சில நேரங்களில் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுதறாங்க...

இது மாதிரி...

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

//என்ன சொல்ல வரீங்கன்னு புரியலே. மாட்டையும், அம்மாவையும் எதுக்கு வீனா கலக்கி ஒரு பதிவு?//

***********

தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய்!

அன்னையர் தின வாழ்த்துகள் - மே 10, 2009

**********

சங்கமத்தில் பேருந்து பற்றி ஒரு போட்டி. அதில் சில படித்தவை...

பேருந்துப்பயணத்தில் முடிவான வாழ்க்கை : கதிரவன் (கொஞ்சம் பெரிய பதிவு)

பாலம் - சங்கமம் போட்டிக்கு : வெட்டிப்பயல் (பரவாயில்லை)

பிரிவில் புரியும் உறவின் அருமை
பிரிந்து பார்த்தேன்
என்னில் நீ
உன்னில் நான்
புரிந்தது உனதருமை மட்டும் அல்ல
உன் அருகாமையும் தான் !

யாதுமாகி நின்றாய் : புன்னகை (மேலே உள்ள கவிதை நன்று தவிர, வீண் சண்டைக்கு ஒரு மேலோட்ட முடிவு)

பேருந்து பயணம் : விஜயஷங்கர் (எதார்த்தமாக, எளிய நடையில் அனுபவம் உள்ளது)

*************

அப்புறம்


அப்துல்லா அண்ணன் அவர்கள் சினிமா பாடகராகியிருகிறாராம். வாழ்த்துக்கள்.


தம்பியின் டைரிக் குறிப்புகள் (07/05/09)