வியர்வையை வாசம் நாத்தம்
என்று ஒதுக்கி விட முடியாது
உடல் நன்றாக வேலை செய்கிறது
என்றே காட்டுகிறது!
குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும்போது
வாரி அணைக்கும் போது
வரும் கம கம வியர்வை வாசம்
காத்திருந்து அவர்களை காணும் சொர்கம்!
உடலை கண்ணா பின்னாவென்று வளர்த்தி
பின் வருத்தி உடல் குறைக்க
வியர்வை வரவைக்கும் மனிதர்களை
பார்த்தால் வரும் சிரிப்பு!
கஷ்டப்பட்டு சைக்கிள் ரிக்சாவை
மிதிக்கும் மனிதர்களின் வியர்வை
அவர்கள் குடும்பத்திற்கு
கொடுக்கிறது சந்தோசம்!
உடலுக்கு தெரியும்
எப்படி உணர்த்துவது என்று...
பரமானந்தம்!
Veeramangai Velu Nachiyar (Veerangana)
13 hours ago