Saturday, December 6, 2008

தேவை ஒரு சாப்ட்வேர் வேலை

எனக்கு தேவை ஒரு சாப்ட்வேர் வேலை ...

டெஸ்டிங், க்வாலிட்டி அஷுரன்ஸ் போன்றவை எனக்கு கரக்டாக இருக்கும்.

பி.சி.ஏ முடித்த பிறகு இப்போ எம்.பி.ஏ இந்த வருடம் முடிக்கிறேன்.

விசுவல் பேசிக், சி, சி++, ஒரெகில் போன்றவை தெரியும்.

சென்னை அல்லது பெங்களூர் ஒ.கே.

விவரம் இருப்பின், எனக்கு கமன்ட் போடவும்.

கிண்டல் வேண்டாம், தமிழ் ப்லாகர் மொழியில் சொன்னால், கும்மி வேண்டாம்.

Friday, December 5, 2008

குழந்தைகள்

குழந்தைகள் என்றால் நிறைய சந்தோசம். அவர்களுக்கு ஒன்று என்றால்... மனசுக்கு கஷ்டம்...

புதன் இரவு முதல் என் குழந்தைகள் பிரிந்து இருப்புது கஷ்டமாக உள்ளது. எதிர் நோக்கி இருக்கிறேன். போனில் பேசுவது வேறு... நேரில் இருந்து பார்ப்பது தான் வேண்டும்.

பிரபு தேவாவின் குழந்தை மறைவு கடினம். புரிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

**********

நண்பர் கே.ரவிசங்கர் எழுதியிருக்கிறார்... குழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.

என்னங்க வேலைக்காரர்கள் எல்லாம் பேன்சி பெயர் வைக்க கூடாதா?

சென்னையில் ஊசி பின் வாங்கும் போது, விற்ற நரி குறவ பெண், அவர் மகளை அழைத்தது... 'சிம்ரன்".

பூக்கள்

பூக்கள் தான எத்தனை வகை! பெங்களூரில் மல்லிகை முழம் பத்து ரூபாய். கனகாம்பரம் இல்லை. ஆனால் ரோஸ் விலை கம்மி ஒன்று ஒரு ருபாய் என்று கொடுத்தார் ஒரு பெண். சென்னையில் கொள்ளை.

நாங்கள் தங்கியது ஒரு கெஸ்ட் ஹவுஸ். என் கணவரின் ஆபிஸ் ஏற்பாடு செய்து கொடுத்தது.

மிச்சிகனில் இருக்கும் ஒருவர் வந்து கோர்ஸில் உதவி செய்தார். வெளிநாட்டு படிப்பு எப்படி இருக்கும் என தெரிந்தது.

ஒரு வழியாக மார்க்கெட்டிங் கோர்ஸ் முடிந்துவிட்டது. புதிய விஷயம் கற்றேன். என் எம்.பி.ஏ படிப்பிற்கு உதவும். அப்புறம் பயோ டேட்டாவில் ஐ.ஐ.எம்மில் ஒரு கோர்ஸ் என்று போட்டால், மதிப்பு தான்.

இப்போது கண்டோன்மென்ட் அருகில் கணவரின் சொந்தம் ஒருவர் வீடு இருக்கிறது, அங்கு செல்கிறோம். அப்படியே குழந்தைகளை அழைத்து வரும் மாமனார், மாமியார்... ரிசீவ் செய்து ... பத்து மணி ஆகும்... எம்.ஜி.ரோட் அருகில் ஒரு லாட்ஜ். ஞாயிறு இரவு ட்ரைன் டிக்கட் கிடைத்து விட்டது.

இரண்டு நாட்கள். என் நண்பர்கள் இங்கு உள்ளனர். பார்க்க வேண்டும்.

பெங்களூரில் சில்க் சாரிகள், அலங்கார் பிளாசாவில் துணி... எம்.டி.ஆர். சாப்பாடு... கணவருக்கு பிடித்த ஹோட்டல்... என போகும் நேரம்.

************

என் ஹிந்தி பற்றி பதிவிற்கு பதிலுக்கு பதிலாக ரமேஷ் அவர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார்.

ஹிந்தி ரஜினிகாந்த் நான்

எதற்கு அந்த பாட்டு போட்டீர்?

ஹிந்தி படிப்பது பற்றி

ஹிந்தி என்பது நாட்டின் மொழி ஆகிவிட்டது. நான் டிவி பார்ப்பது மூலம் சொல்கிறேன்.

How can we live without Kyu Ki Saas bi Kabhi Bahu thi?

தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயம் திணிக்கப்படுகிறது என்று சொன்னார்கள். எத்தோ ஒரு பள்ளியில். எங்கே என்று தெரியாது... Erode?

நேற்றிலிருந்து பெங்களூரில் ஐ.ஐ.எம்மில் ஒரு இரண்டு நாள் கோர்ஸ் ... கணவரோடு வந்தேன். பல மொழிகள். ஹிந்தி பேசுவதால்... அட்லீஸ்ட், ஆங்கிலத்தை தவிர ஒரு மொழி, கலந்து உரையாட. Hindi கட்டாயம் இல்லை. நல்ல விஷயம் ... மகிழ்ச்சி... நான் தமிழர் என்று நினைத்து ஒருவரோடு பேச, அந்த பெண், சாரி "நன்கே தமிழ் பரல்லா..." என்றார். At least there was English to converse.

சென்னையில் குழந்தைகள், கணவரின் அப்பா அம்மா பார்த்துக்கொள்கிறார்கள். இன்று மதியம் கிளம்பி அவர்களும் பெங்களூரில். ட்ரைன் பிடிக்க சீக்கிரம் போனால் சரி.

மொழி பற்றி... என் கணவருக்கு உருது நன்றாக பேசுவது எழுதுவது வரும். நாங்கள் இருவரும் தமிழ் தான் பேசிக்கொள்கிறோம். குழந்தைகள் எப்போதும் ஆங்கிலம் தான். தமிழ் பேசுகிறார்கள். ஹிந்தி நன்றாக படிக்கிறார்கள். இது அவர்களுக்கு மூன்றாம் லாங்குவேஜ். பக்கத்து வீட்டுக்காரர்கள் கன்னடம் பேசுகிறார்கள். அதனால் குழந்தைகள், கன்னடமும் சிறிது பேசுவார்கள்.

நாங்கள் நண்பர்களோடு சென்னையில் கட்டாயம் இங்கிலீஷ் தான். தமிழில் பேசினால், சுத்தமாக, கலப்படம் இல்லாமல் பேச முயற்சி செய்தால்... வினோதமாக பார்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை தேவை இருப்பின், கட்டாயம் இல்லாமல், ஹிந்தி படிப்பது நன்று.

ஒருவருடைய பதிவு... நான் இட்ட கமன்ட்... எப்போதும் போல பல வித பாடங்கள், பதில்கள். எதோ ஒரு பள்ளியில் கட்டாயம் ஹிந்தி படிக்க வைக்கிறார்கள், என்று எழுதி இருந்தார்.

நான் இட்ட கமன்ட்...

Please tell me one thing, if those kids who study there, end up getting a job only in North India, how would they survive?

My kids study in a school, where Tamil is also compulsory, apart from a third language, which can be Hindi/French or whatever.

Different thinking is needed to survive in this world.

Also half the Central secretariat is filled with Tamilians only in Delhi, which has more than 10 lakhs Tamil population.


சில பதிலுக்கு பதில்கள்... நல்ல விஷயங்கள்... நன்றி...

தேவை இருப்பின் கற்றுக்கொள்வதல்ல நம் பிரச்சனை. வலுகட்டாயமாகத் திணிப்பது தான் பிரச்சனை. அப்படி நாம் வட நாடு சென்று தான் ஆக வேண்டும் என்றால் ஹிந்தி ஒரு மாற்றுப்படமாக படிக்கலாம், இல்லை வெளியில் பயின்றுகொள்ளலாம். அவனவன் ஸ்பானிஷ் போன்ற மொழிகளையே 24 நாட்களில் கற்றுக்கொள்கிறார்கள்.

ஏன் தேவையில்லாமல் திணிக்க வேண்டும்? அதுவும் நம் தாய் மொழியை விட்டுவிட்டு ? :-))

இந்தி பேசாத இந்தியை தாய்மொழியாகக் கொள்ளத இந்திய மக்களிடம் இந்தி மொழியையோ பிறமொழியோ திணிப்பவர்கள்தான் உண்மையான “தேசத்துரோகிகள்” “மக்கள் விரோதிகள்” நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் .... ;-)

முற்றிலும் உண்மை. நம்ம ஊரிலும் வட நாட்டு மாணவர்கள், ஏன் ஆப்ரிக்கா மாணவர்கள் , சீனா மாணவர்கள் என்று நிறைய வந்து பயில்கிறார்கள். அவர்கள் எல்லாம் வாழவில்லையா? :-)

தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயப்பாடமாகும் என்று கனவிலும் கூட நான் கருதியதில்லை. இப்படி நாம் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருந்தது தான் காரணம் என்று நினைக்கிறேன். :-(

அது போலவே "தேவை" என்று வரும்போது தமிழன் ஹிந்தியும் பேசுவான், கொரியனும் பேசுவான் .... :-))

அதனால் இந்த இந்தி படிச்சா வடநாட்டுல போய் பொழைச்சுக்கலாம் என்ற பழைய பல்லவியை பாடுவதை நிறுத்துங்கள் முதலில்... ;-)

...உண்மை. ஹிந்தி நண்பர்களைச் சந்திக்கும்பொழுது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி என் தமிழர்களுக்கு ஹிந்தி தெரிவதில்லை? நீங்கள் இந்தியர்கள் தானே? என்று....அப்பொழுதெல்லாம் நான் அவர்களுக்கு எடுத்துக்கூறி, நாங்கள் இந்தியர்கள் தான் , ஆனால் ஹிந்தியர்கள் இல்லை என்று.... :-()

முடிவுகள் ஒன்று... தேவை இருப்பின் படிக்கலாம்...

Be a Roman in Rome, on a need basis.

நேற்று இரவு, ஒரு வீட்டிற்கு இரவு உணவிற்கு சென்றோம். உருது மட்டும் பேசிக்கொண்டார்கள். ஹிந்தி தெரிந்ததால்... தப்பித்தோம்.

Atleast, I could well come out of the embarassing situation, even being in South India.

Thursday, December 4, 2008

யோசிக்க வைத்த பதிவு

மும்பை தாக்குதலும் பிரபலங்களும்

பேசுவதால் எழுதுவதால் ஒன்றும் ஆகிவிடபோவதில்லை தான்.

இருந்தாலும்...

ஒரு வாய்ஸ்.

பெண்கள் பதிவுகள்

நான் ஆரம்பித்த பெண்கள் பதிவுகள் என்ற ப்லோக் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் நண்பி திவ்யா இங்கே சில பதிவுகள். இந்த வருடம் மே மாதம் நான் ஆரம்பித்த முயற்சி.

அது தேவையில்லை என்று இருந்தேன். ஒரு பெண்கள் முயற்சி அது என்று இருந்துவிட்டேன்.

இருந்தாலும், அது ஒரு நல்ல தொகுப்பு என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள். நீங்களும் அதில் உதவலாம்...

நீங்களும் உங்கள் பெண்கள் பதிவுகள் அங்கு இடம் பெற ஒரு கமன்ட் போடவும்.

நன்றி.

Wednesday, December 3, 2008

பூவாசம்

பூவாசம் என்று பெண்களுக்கான இணையதளம் ப்ளொக்கரில் நடத்துகிறார் ஒருவர்.

நீங்கள் பெண் என்று கட்டாயம் தெரிவிக்க வேண்டும், அவரிடம் அலைபேசியில். சிம்பிள் வெரிபிகேசன் என்று மெயில் வரும். அதன் பிறகு அந்த என் வைத்து, என்ன செக்கூரிட்டி போன்றவை தெரியவில்லை. நான் என் ப்ளோக்கை இணைக்கலாம் என்று இருந்தேன். நான் என் அலைபேசியை எந்நேரமும் ஆண் செய்து வைத்திருப்பேன், வயதான பெற்றோர் ஊரில் இருப்பதால். கணவர், பிறருக்கு அலைபேசியில் பேசி முன் பின் பார்த்திராத ஒருவருக்கு எண் கொடுப்பது, வீண் வம்பை வளர்க்கும் என்கிறார். ததாஸ்து!

மகளிர் மணம்

மற்றபடி, அந்த தொகுப்பு மூலம் ஒரு பெமினிஸ்ட் பீலிங் வருகிறது என தோன்றுகிறது!

அனைவரும் சமம் என்ற கோட்பாடு... என்னவாயிற்று?

கருப்பு பேக்க்ரவுன்ட் கண்ணை சுழற்றுகிறது. வெள்ளைக்கு அல்லாத கண்ணுக்கு இதமான கலரில் மாற்றுங்கள்.

மற்றபடி அதில் இணைத்திருக்கும் சிலரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கவில்லை.

ரத்தம் ஒரே நிறம் தான்.

ஹைகூ. - சில விளக்கங்கள்

நண்பர் கே.ரவிசங்கர் அவர்கள், கொடுத்த குறிப்பு படி, இது ஒரு ஹைகூ. - சில விளக்கங்கள் பதிவு.

படித்துவிட்டு, அவரை பாராட்டுங்கள். எனக்கும் புரிகிற மாதிரி இருக்குது.

ஹைகூ....? மூணு வரில முடிச்சுடனும் ....

நடைமுறையில் உள்ள விதிகள்:

உவமை/உருவகம் இருக்க கூடாது. மூன்று வரிகள்தான் இருக்கவேண்டும்.

சுஜாதா ஹைக்கூ பற்றி சொன்னது :-

லாங் சாட், மிட் சாட், க்ளோஸ் அப் என்று மூன்று வரிகள்தான்.க்ளோஸ் அப் அல்லது zoom ஒருகாட்சி உரைத்தல் /திகில்/ஆச்சிரியப்படுத்தல்/திருப்பம் வேண்டும்.

சில ஹைகூ. எங்கோ படித்தது! எழுதியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

விழுந்த மலர்
திரும்ப கிளைக்கு செல்கிறது
வண்ணத்து பூச்சி!

மாதத்தில் ஒருநாள்
சலூன்காரன் பொன்னாடை
போர்த்துகிறான் .

அழகான வீடு
வாசல் கேட்டில்
அழுக்கான பால் பை
………………………………

மூன்று நிமிட
மௌன அஞ்சலியில்
யாருக்கோ வாயு தொல்லை
……………………………..

ஆண் பிணத்தின் இடுப்பு
துணியை ப்ரோகிதர் உருவ
கண் மூடி அழும் பெண்கள்
………………………………..

குடைக்குள் மனைவி
பேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்
…………………………………..

உத்பவம் சென்னை



வரும் சனி அன்று (டிசம்பர் ஆறு 6-12-2008) எல்டேம்ஸ் ரோட்டில் இருக்கும் தத்வலோகா என்ற இடத்தில், உட்பவம் என்ற பெண்களுக்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெண்கள் அனைவரும் கலந்துக்கொண்டு தங்கள் ஸ்ட்ரெஸ்சை குறைத்துக்கொள்ளுங்கள். நானும் வர முயற்சி செய்கிறேன்.

நான் நாளை வியாழன் மற்றும் வெள்ளி பெங்களூரில் ஐ.ஐ.எம்மில் ஒரு கோர்ஸ் அட்டன்ட் செய்கிறேன். அப்படியே, சனி ஞாயிறு அங்கிருக்கும் உறவினர் வீட்டில் இருக்கலாம்... குடும்பத்தோடு.

Tuesday, December 2, 2008

ஹைக்கூ கவிதைகள்

இங்கே சில ஹைக்கூ கவிதைகள் படித்தேன்...

டிராபிக் சிக்னல்...ஹைகூக்கள்...

உண்மையை சொல்கிறேன். புரியவில்லை.

வாழ்த்துக்கள்.

பெண்களுக்கு எதிராக பயங்கரவாதம்

ஆண்கள் எப்படியெல்லாம் பெண்களை வதைக்கிறார்கள்... இதுவும் ஒரு வகை பயங்கரவாதம் தான்.

இப்போது பி.ஜே.பியின் நக்வி பெண்களை குறை சொல்வது... பவுடர் பூச்சு, லிப்ஸ்டிக் போடும் பெண்கள் அரசியல்வாதிகளை எதிர்த்து பேச கூடாதாம்...

நான் இந்த பதிவில் எழுதியிருந்தேன்...

அமெரிக்காவின் மிலிடரி தர்பார்

அதில், இந்த பதிவு குறித்து குறிப்பிட்டிருந்தேன்...

செக்சுவல் ஹராஷ்மன்ட் அதன் பலனாக, கேஸ் சால்வ்டு.

மீண்டும் மன உளைச்சலோடு நியூ யார்க்

நிம்மதி

சாந்தி ஜெயகுமார் அவர்கள், முயற்சி எடுத்து, அவருடைய நண்பர் டாக்டர் ரத்த அவர்கள் மூலம், ஒரு தீர்வு கொடுத்தார்.

//This case of செக்சுவல் ஹராஷ்மன்ட் at the Coimbatore college is solved.

Thanks to the Physics Dept. HOD Dr. S Jayakumar and my close friend Dr Rath, to close this.

The problem lecturer will move out.

I was worried that, whether it could be a case of impersonation, someone trying to take revenge on that person.

Glad it is over.//

இன்டர்நெட்டால், பயன் இருக்கிறது தான். பார்க்காத நண்பர்கள் உதவி...

Thanks to everyone concerned.

Monday, December 1, 2008

ராஜ் தாக்கரே எங்கே?

காணாமல் போய் விட்டார்?

ராஜ் தாக்கரே எங்கே?

அரஸ்ட் வாரண்ட் வேற உள்ளது...

மும்பை தீவிரவாத தாக்குதலை முறியடித்த களைப்பில் ரெஸ்ட் எடுக்கிறாரா?

அவரின் மாமாவும் (பால்) ரெஸ்ட் எடுக்கிறார். உதவ் எங்கே?

இதையும் படியுங்கள்....

மும்பை தீவிரவாதிகள் லைவ் டிவி

மும்பை பயங்கரம் - நான்கு ஆங்கில கட்டுரைகள்

மும்பை - 1: Audacity of Terror

பயங்கரவாதிகள் மன்னிப்பு பெற அரசு கருணைகாட்ட வேண்டும்

உலகின் 20 அபாயகர நாடுகளில் இந்தியாவும் சேர்ப்பு.

Sunday, November 30, 2008

அமெரிக்காவின் மிலிடரி தர்பார்

இப்படியும் இருக்குது உலகம்...

இந்த மனிதரை பற்றி ஆங்கிலத்தில் படியுங்கள்.

அமெரிக்காவின் மிலிடரி தர்பார்

ஆங்கிலத்தில் டைப் செய்தால், தமிழ் அர்த்தம் வரும் மென்பொருள் உண்டா?

நெஞ்சு பொறுக்குதில்லையே... இதை படித்து...

செக்சுவல் ஹராஷ்மன்ட்

அப்புறம்...

சிவராஜ் பாட்டில் ராஜினாமா...

ப சிதம்பரம் அவர்கள் புதிய உள்துறை அமைச்சர் ஆகிறார். நல்ல சாயஸ் ... யார் இப்போ நிதித்துறை பொறுப்பு? பிரதமர் பார்க்கிறாராம்.