Wednesday, September 9, 2009

பிராப்திரஸ்து

நெடு நாட்களாக வீடு தேடி, இன்று ஒரு வீடு முடிவாகும் நிலைமை. அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. இனி என்னவர் பேங்க் டாகுமன்ட்ஸ், போன்றவற்றிக்கு அலைய வேண்டும்.

சென்னை விலைக்கு மிகவும் பரவாயில்லை. பெங்களூரு பன்னர்கட்டா ரோடு மேலேயே உள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் குடி புகலாம்.... வார்டுரோபுகள் ரெடிமேட் கிடைக்கின்றன. பர்னிசர் மற்றவை இருப்பவை மட்டும் தான்.

கொடுக்கும் வாடகையில் இரண்டு மடங்கு ஈ.எம்.ஐ. வருமாம். சொத்தாகும் எண்ணம், விலை உயர்வு, கையிருப்பு, ஒரு ஊரில் நிரந்தரமாகும் எண்ணம் என பல யோசனைகளில் இது உதவும்.

கல்யாணம் பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள்! ஒரு வித பயம் வீடு புகுந்து, க்ரகாப்ரவேஷித்து, நன்றாக வாழும் வரை இருக்கும்.

எனக்கும் நண்பர்கள் ஆசியினால் ஒரு வேலை பிராப்திரஸ்து ஆகும் என நம்புகிறேன். ( குழந்தைகள் ஸ்கூல் செல்லும் நேரம் காலை எட்டு முதல் அவர்கள் திரும்பும் மாலை மூன்றரை வரை ).

அடுத்த வெள்ளி முதல் தசரா விடுமுறை, குழந்தைகளோடு கோவையில் பத்து நாட்கள் கழிக்க எண்ணம். ஒரு சிறு ட்ரிப் கேரளா சென்று வர வேண்டும்!

Tuesday, September 8, 2009

திசைநாயகம்


வாஸ்துசாஸ்திர பகவானுக்கு இன்னொரு பெயர் திசைநாயகம்.


நீங்கள் வீடு கட்டி வாழும் திசையை பொறுத்து உங்கள் இல்லம் மன அமைதி, மற்றும் வருமானம், செழிப்பு பெற்று இருப்பீர்கள் என்கிறது மரபு.

மேற்குப்புற வாசல், தெற்குப்புற வாசல் எங்குமே யாரும் வைப்பதில்லை. கடைகள் தவிர. அதற்கு விஷயம் உண்டு.

மேலே உள்ள படத்தில் பார்த்தால், உருவத்தை வைத்தி ஒரு வழியாக ஊகிக்கலாம்...

சரி சயன்டிப்பிக்காக என்ன நடக்கும்? வெய்யில் வீட்டில் மேலே மதியம் விழாது. இரவு வீடு திரும்புவோர்க்கு, சுகமாக இருக்கும், வீட்டில் உள்ள மனைவி , குழந்தைகளுக்கு ஒரு கம்பர்ட் லெவல் அருமை...

***

சரி எதற்கு திடீரென்று திசைநாயகம்? அப்பாவோடு பேசிக்கொண்டு இருந்தேன், நாங்கள் வாங்கப்போகும் வீடு பற்றி... அதில் அடிக்கனக்கு, திசை போன்றவற்றை விவரம் சொல்லி விளக்கினார்!