Thursday, April 23, 2009

கேபிள் டிவி புறக்கணிப்பு

பந்த் என்று சொல்லிவிட்டு, சினிமா போட்டு (இரட்டை அர்த்த வசனங்கள் படம் வேறு) கேபிள் டிவி கேவலப்படுத்துகிறது தமிழ்நாட்டு அரசு.....

தமிழ்நாட்டில் இருந்து அனைவரும் ஓடி விட வேண்டும் பக்கத்து மாநிலங்களுக்கு.

பந்த் என்ற பெயரில் நடக்கும் கூத்து. அதனால் எங்கள் அபார்ட்மென்டில், கேபிள் டிவி புறக்கணிப்பு செய்துள்ளோம். லோகல் கேபிள் ஆபரேட்டரை அழைத்து கேபிளை எடுத்து போக சொன்னோம்.

நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இதை செய்ய வேண்டும். அப்போது தான் மாறன் ப்றேதர்ஸ் மற்றும் கலைஞர் டிவி ஆட்கள் ஆட்சி மட்டும் செய்வார்கள்.

வருமானத்தை கட் செய்தால் அடங்கிவிடுவார்கள்.

விஜயகாந்த் கட்சி தான் இந்த முறை அதிக இடங்களை அள்ளப்போகிறது... இந்த தி,மு.க, அ.தி.மு.க அவ்வளவு தான். வாழ்க வளமுடன்.

**********

நாளை வேண்டுமென்றால் இருக்குது டிஷ் டிவி. (தமிழ்நாட்டுக்காரன் சொந்தமான ஐட்டம் வேண்டாம்).

இலங்கையில் நடக்கும் போர், என்ன ஆகும் எனத் தெரியவில்லை.

இங்கே இலங்கைக்கு பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்றவர்கள் ( மொரிசியஸ், வெஸ்ட் இண்டீஸ் உதாரணம் எடுத்துக்கொள்ளுங்கள் ) அங்கு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அங்கும் ஜாதி, மதம் , மொழி என்று பாகு பாடு தான் இத்தனை அழிவிற்கும், முக்கியமாக, மக்கள் பணம் கொடுத்து டேரரிசம் வளர்த்து இப்போது கஷ்டப்படுகிறார்கள்... ( ஒரே சர்வதிகார தலைவன் முப்பது ஆண்டுகளாக)... அங்கிருக்கும் தமிழர் அனைவருக்கும் அது ஒரு இழுக்கு. மாபியாத்தனம்.

தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து, வாழ்வது, லோகல் மக்களுக்கு கொடுமையாகும்.

என் அப்பா அங்கிருந்து வந்து, கொண்டு வந்த சொத்தில் தான் வியாபாரம் செய்து வாழ்க்கை அமைத்தார். எவ்வளவு நாட்கள் தான் தண்டல் கட்ட வேண்டும், தமிழ் என்ற பெயரால்.

சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் மூலம் என்ன நடக்கிறது? தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

Monday, April 20, 2009

வெளியில் உணவும், மண்டை காயும் வெய்யிலும்

நேற்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், அவரது கல்யாண விருந்து கொடுத்தார்.(சிங்கப்பூரில் கல்யாணம் செய்துள்ளார் அதனால் இங்கு எங்களுக்கு ஒரு பார்டி வைத்தார் ;-) )

மதியம் வெய்யில் கொடுமை. எங்கள் பழைய ஏழு வருட ஏசி மக்கர் செய்ததால், புது ஏசி (கொரியன் கம்பெனி) ஒன்று காலையில் ஆர்டர் செய்தோம். மாலை ஐந்து மணிக்கு வந்து பிட் செய்தார்கள். பழையதுக்கு ஒரு விலை கூட கொடுத்தார்கள்.... குழந்தைகள் தூக்கம் கோவை போல இருக்கும். கரண்ட் தான் கேடு.

இரவு பூந்தமல்லி வெஸ்லி ஸ்கூல் முன்னால் நம்பர் 91, இருக்கும் ஒரு ஸ்பா மற்றும் ரெஸ்டரன்டில் ஏற்பாடு. அந்த நண்பரின் நண்பர்கள் முதலீட்டாளர்களாம். பெயர் வாயில் நுழையாது ஒன்றல்ல. எதற்கு வீண் விளம்பரம்?

உணவும் நல்ல விலை தான். பொன்னுசாமியை விட இரு மடங்கா இருக்கும்! இருந்தாலும், அதிகம் சாப்பிடும் (குழந்தைகள், கேட்கும் போன்லஸ் சிக்கேன்) போன்றவை, குறைவாகவே செலவானது. காரணம், விலையா, அங்கு புது இடம் என்பதால, அல்லது ருசியா?

நண்பருக்கு புது மண வாழ்வுக்கு வாழ்த்து சொல்லி, நன்றி கூறினோம். ( அருமையான இடம் கூட, மூன்று மணி நேரம் மொத்தம் செலவானது)

எப்படி முதலில் நன்றாக இருந்து பின்னால், பல ஹோட்டல்கள் சுமார் ஆகி, பெயர் கெட்டுப்போனால் மீண்டும் நல்ல உணவு கொடுப்பார்கள், அது மாதிரி ஆகாமல் இருந்தால் சரி. வாழ்த்துக்கள்.

சிறு வயதில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு எதிரில் இருக்கும் புஹாரியில் தான் பிரியாணி வாங்கும் வழக்கம். ஊருக்கு போகும் போது, கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஏறும் முன், அங்கு லன்ச் வாங்கும் பழங்கால பழக்கம்...

சரி சரி, எலெக்சன் சமயத்தில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் தினமும் பிரியாணி தான்.

Sunday, April 19, 2009

படித்ததில் பிடித்தவை

பள்ளி விடுமுறை.

இரண்டு வாரம் வெளியூர் பயணம். இப்போது தான் சில மணி நேரம் முன் வீடு திரும்பினோம்.

கணவர் மட்டும், வீட்டை பார்த்துக்கொள்ள, நான் மற்றும் குழந்தைகள் கோவையில்... அதை பற்றி ஒரு பதிவு நாளை.

கோவையில் ஆர்.பிரபு நிச்சயம் வெற்றி பெறுவார்! காங்கிரஸ். கிளீன் கய்...

அப்புறம், சென்னை விட கோவை வெதருக்கு மேல்!

*************

சில பதிவுகள், சில மணி நேரம் முன் படித்தேன். நன்று.

ரமா : காஃபி சாப்பிடப்போலாமா?

நடிகர் விவேக் சொற்பொழிவு

சோகம்

குடும்பமும் கோலாகலமும்

DAY 358 (அமிதாப் பச்சன் ஒரு வருடம் ப்ளாக் உலகில்... வாழ்த்துக்கள்!)