Friday, March 6, 2009

தமிழில் எழுதினால் நன்று

எனக்கு ஒருவர் பின்னூட்டம் போட்டார். நானும் தமிழில் எழுதினால் நல்லது என்று சொன்னேன். ஆங்கிலத்தில் எழுதினால் பிரச்சனையே இல்லை, முடிந்தவரை தமிழ் எழுதலாம் அல்லவா? தனி நபர் விருப்பம் தான் அது. (தமிழ் ப்ளோகில் ஆங்கில பின்னூட்டம், கொஞ்சம் மொழிக்கு இடைஞ்சல்)

அவர் புனைப்பெயர் ப்லாகர். நிஜம் தெரியவில்லை.

அது தான், இந்த பதிவு..

குறிப்பு - இந்த கூகிள் தளத்தில் சென்று, ஆங்கிலத்தில் தமிழ் பேச்சை டைப் செய்தால், தமிழ் உருவம் கிடைக்கும்.

ப்ளோகில், தமிழ் மற்றும் மாற்று மொழிகளில் எழுத வழி உண்டு. (க்ரேயட் போஸ்ட்)

*************

இதை படித்தவுடன்.... நெஞ்செமெல்லாம் நடுங்குது. வயதானவர்கள், மக்கள் இப்போது திரும்புகிறார்கள் (இந்தியாவிற்கு) வெளிநாட்டிலிருந்து..

அவர்களின் சாபம் தான் இந்தியர்களை திரும்ப வர வைக்கிறது.

உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி

உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி... இரண்டாம் உலகப் போரில் டன்கர்க்
சம்பவம்தான். ஜூன் 1940-ல் பிரெஞ்சு தேசத்து கடற்கரையில்
மாட்டிக்கொண்டு பின்வாங்கிய மூன்று லட்சம் பிரிட்டிஷ், அமெரிக்க, பெல்ஜிய
துருப்புக்களைப் பத்திரமாக கொண்டு சேர்த்தது இங்கிலாந்து டீம். உயிர்ச்சேதம்
இல்லை என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. அத்தனை பிரமாண்டமான
மீட்புக்கு மிகக் குறைவான உயிர்ச்சேதம்தான்.

இது எங்கோ படித்தது...

இங்கே தான்....

Such interesting facts are the need of the hour!

Thursday, March 5, 2009

குஷ்பு இட்லி

குஷ்பு இட்லி செய்வது பற்றி விளக்கவுரை எங்காவது கிடைக்குமா என்று தேடினேன். ஹுஹும்ம்... ஒரு பெரிய சீக்ரட் அசைன்மெண்ட் போல இருக்கு.

வெந்தயம் அதிகம் போட்டு (ஊற வைத்து ஆட்டினால்) எப்போதும் போல உளுந்து போட்டு, இட்லி (குண்டா) தட்டில், துணி போட்டு ஊற்றி ஆவி வர வைத்தால் போதும்... (குக்கரில் செய்தால் தட்டையாக தான் வரும்).

எனக்கு தெரிந்த வரை, மதுரை பஸ் ஸ்டாண்டில் தான், முதன் முதலில் இப்படி கூவி விற்றார்கள், ஒரு எட்டு வருடம் முன்பு இருக்கும்... (இல்லே சின்ன தம்பி வந்த டைம் ஆ?)

இன்றும் அங்கு விற்கும் சந்தகம் / சந்தவை அருமை என்கிறார்கள் நண்பர்கள். தேங்காய்ப்பால் அதன் மேல் போட்டு சாப்பிட்டால் தான் அதன் தனி டெஸ்ட். வீட்டிற்கு வாங்கி சென்று (பத்து ரூபாய்க்கு போதும்!) வெங்காயம் போட்டு தாளித்து விட்டால், குடும்பத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

********************

நரசிம் அவர்களின் பதிவில் படித்தேன்...

பெண்.. பிரிவுத்துயர்.. பார்வை..

எளிதில் விளங்க இந்த வரிகளைப் படித்து விட்டு...

நகக் கீற்றென் இருக்கும் நிலவுக் கீறல் வளர்ந்து,வளர்ந்து முழுநிலவாய்,பெளர்ணமிப் பந்தாய் வான்வெளியில் உருள்கிறதே.. அதுபோலத்தான் என்காதலும் காமமும்.. மெல்லிதாய் பூத்து,வல்லியதாய் வளர்ந்து,காமப் பந்தாய்உருண்டு, என்னை உருட்டி,உழுக்கி பின் கை வளையல்கள் கூட நெகிழ்ந்து விழும்அளவு என்னை உருக்கி விட்டது..அவரின் அருகாமைச் சுகம் அற்றுப்போனதால் மரம்தப்பிய கசங்கிய இலைபோல ஆகிவிட்டேன். என் தலைவனின் தீண்டல் இல்லாமல்துவண்டு போன என் நிலை கண்டு வானம் கூட அழுது மழையாய் பொழிகிறதே.. என் காதல் தலைவனின் காதல் விளையாட்டுகள் இல்லாமல் வாடிப்போய் வருந்தும்என்னைவிட என் மேல் இரக்கம் கொண்டு எனக்காக இந்த ஊர் மக்களும்வருந்துகிறார்களே...

எவ்வளவு அழகியல் தெறிக்கும் வார்த்தைகள்..

அந்த பாடல்...

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி! மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக்கண்ணும்
அவர்திறந்து இரங்கும் நம்மினும்
நம் திறந்து இரங்கும்,இவ் அழுங்கல் ஊரே.

புலவர்: பெருங்கண்ணன்.. முல்லைத் திணை பாடல்

//ஒரு பெண் தனியாக, பஸ் ஸ்டாப்பிலோ,தியேட்டரிலோ காத்திருந்தாலே சமூகத்தின் வறண்ட மனநிலை மனிதர்களின் தேவையற்ற பார்வையை தவிர்க்க முடிவதில்லை.//

அவர்கள் குடும்பத்தில் பார்க்கிற மாதிரி பெண்கள் இல்லாவிட்டால் தான் ( இந்த தவறு, சமுகம் சொல்லிகொடுப்பது ) ஏற்படும்.

பஸ் பிடிக்கும் அவசரம், இல்லை, மாதக்கடைசி செலவு என்று இருப்பார்கள்.

பார்வை எங்கோ இருக்கும்.

***********************

ஆமாம் இப்போதெல்லாம், தமிழ் ப்லோகர்கள் எல்லாம், தங்கள் பெயரில் வலைமனை வைத்திருக்கிறார்கள். செலவு குறைவா?

படித்ததில் பிடித்த கவிதைகள் மற்றும் எலெக்சன்

உழவனின்...

http://tamiluzhavan.blogspot.com/2009/01/blog-post_22.html

ஈழதாலாட்டு .... இங்கே...

ரொம்ப நல்லா இருக்கு....

***********

எலெக்சன் பற்றி எழுதியே ஆக வேண்டும்....


தேர்தல் நடக்கும் நாட்கள் பாருங்கள்...

இதில் ஐ.பி.எல் வேறு.

கஷ்டகாலம்.

இப்போதெல்லாம் டிவி பார்ப்பது

இப்போதெல்லாம் டிவி பார்ப்பது பிடிப்பதேயில்லை. கருமமாக உள்ளது. கன்றாவியாக உள்ளது. வேறு தமிழ் வார்த்தை தெரியவில்லை.

சண் டிவி, கலைஞர் டிவி மற்றும் விஜய் டிவி தான் வாழ்க்கை என்று போய், இன்று சோனி மற்றும் கலர்ஸ் என்று உள்ளது.

எந்த ப்ரோக்ராமும் உருப்படியில்லை.

சரி எதையாவது படிக்கலாம் என்றால், தமிழ் புத்தகங்கள் விலை அதிகமாக உள்ளது. ரோட்டில் போட்டு விற்கும் ஆங்கில புத்தகங்கள் இன்னும் (இந்திய பிரிண்ட்) குறைவான விலையில் உள்ளது.

லேண்ட்மார்க்கில் என்ற 3 டிவிடி செட் ஐம்பது ரூபாய்க்கு கிடைத்தது. மோசர் பெயர் கம்பெனி. மூன்று செட் வாங்கினோம். குழந்தைகள் விடாமல் பார்கிறார்கள். வீட்டில் கார்டுன் சேனல் வருவதில்லை. வெறும் பேசிக் மாத்திரம் தான்.

********************

கோவை சென்று வாழலாம் என தோன்றுகிறது.

இந்த மாதம் முதல் 1300 ருபாய் வாடகை ஜாஸ்தி. அது என்ன கணக்கு என்று கேட்க வேண்டாம். ஓனர் சொல்கிறார், நாங்கள் கொடுக்கவேண்டும். அவர் மகன் திருமணம் வேறு ஜூனில் வருகிறது. இப்போதே பயம், என்ன கிப்ட் வாங்கி கொடுக்க வேண்டுமோ....

கோவையில் எந்த ஏரியா நல்ல ஏரியா சொல்லுங்கள். வாழ , குழந்தைகள் படிக்க. குழந்தைகள் வரும் வருடம் நான்கு மற்றும் இரண்டாம் வகுப்பு செல்ல வேண்டும்.

நன்றி.

ரசித்த கவிதை

இந்தி கவிதை, எங்கோ படித்தது, தினமலர் வாரமலர் என்று ஞாபகம்.

கெமிஸ்ட்ரி லேபில்
ஸ்வேதாவை வலுக்கட்டாயமாக
முத்தமிட்டது
இப்போது வலிக்கிறது!
தாவணியில்
பள்ளிக்குச் செல்லும்
மகளை பார்க்கும்போது!


***********

படித்த இடம்... பரிசல்காரனின்....

"எண்ணிப் பார்க்கிறேன்!"


அசத்தல் பதிவு.... கடைசி பத்தி அருமை!

Tuesday, March 3, 2009

பாகிஸ்தானில் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மீது குண்டு வீச்சு

பாகிஸ்தானில் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மீது குண்டு வீச்சு !

என்ன கொடுமைங்க இது?

இந்தியர்களை பார்த்து தான் அடி உதை அப்பிடின்னு இருக்கும்... அது தான் நம்ம டீம் போகலே. நினைச்சு பார்த்தாலே, பயமா இருக்கு, நாம்ம டீம் அங்கே இப்போ இருந்திருந்தா? வார் தான். ஸ்ரீலங்கா கவர்ன்மென்ட், ஒன்னும் செய்யாது. இலங்கை தமிழரை தான் பூச்சாண்டி காட்டும்.

இன்னைக்கு, தான் இங்கிலீஷ் ப்லோக் ஒன்னுலே, காஷ்மீர் பிரச்சனைக்கு (மொத்த தீர்வு) பேச்சு வார்த்தை தான் முடிவு என்று சொல்கிறார்கள். உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரி ஆகிவிடும்.

அமெரிக்க ஆயுதம் (இஸ்ரேல் கிட்டே டைரக்டா வாங்காம, அமெரிக்க ப்ரோகர்கள் மூலம் ஆயுதம் வாங்குறாங்க!) சப்பளை, கெடுபிடி எல்லாம், இந்த தாலிபான் ஆட்களுக்கு, திருப்பி அடிக்க பயன்படுது.

என்ன கொடுமைங்க இது?

Monday, March 2, 2009

தேர்தலும் இந்தியர்களும்

இந்தியாவில் தேர்தல் என்றால், அடிமட்ட கட்சி தொண்டர்களுக்கு கொண்டாட்டம் தான். இன்று தேர்தல் அட்டவணை மதியம் மூன்று மணிக்கு மேல் (ராகு காலம் இல்லாமல் பார்த்து) அறிவிக்கப்போகிறார்கள்.

ரிடிப் தளத்தில் சொல்கிறார்கள், அமெரிக்க அதிபர் தேர்தலை விட, இந்தியாவில் அதிக அளவு பணம் செலவழிக்கப்படும் என்று. இது எல்லாம் கருப்பு பணம், தண்ணீராய்... இறைத்து....வோட்டுக்கள் வேண்டும் என்பதற்காக, வளைஞ்சு நெளிஞ்சு தெரிந்த வழிகளில் எல்லாம் கொடுப்பாங்க (டிவி கேமரா இல்லாமல் பார்த்து). Bribe in all different forms.

சரி இதில் வாழ்க்கை அடைபவர்கள் - பிரிண்டிங் பிரஸ், ஆய்வாளர்கள், லாரி, ட்ரக் ஓனர்கள், போன் கம்பெனிகள், எஸ்.எம்.எஸ். சர்வீஸ்கள், ஹோட்டல்கள், தெரு தளிகைகள், மற்றும் கதர் விற்பன்னர்கள் எல்லோரும் (டிவி சேனல்களும், அடங்கும், அவர்களுக்கு இருப்பது 24 மணி நேரம் தான்... ப்ரைம் டைம்... ஐ.பி.எல் சாப்பிட்டுவிடும்.)

நல்ல முறையில் தேர்தல் நடந்து, கூட்டணிகள் பங்கு பிரித்து போக, மிச்சம் (ஊழியர்கள் சம்பளம் போக) மக்களுக்கு வந்து சேர்ந்தால் நலம்.

வேட்பாளர்கள், தங்கள் ஜாதி, மத சொந்தங்களை நாடும் காலம் இது.

வாழ்க இந்தியா. வாழ்க வளமுடன்.