Thursday, May 28, 2009

நான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்

ஆங்கிலத்தில் இருந்து தமிழ் படுத்தியிருக்கிறேன்...

I kill an ant
and realize my three children
have been watching.


ஓர் எரும்பைகொன்றேன்

என் மக்கள் பார்த்ததை

கவனிக்கவில்லை

____________________

A sudden shower falls
and naked I am riding
on a naked horse!

திடீர் மழையில் நனைத்தேன்

நானும் என் குதிரையும்

நிர்வாணம்

___________________

Night, and the moon!
My neighbor, playing on his flute -
out of tune!

இரவும் நிலாவும் கூட

என் பக்கத்துவீட்டுக்காரரின் புல்லாங்குழல்

ஒன்றவில்லை


___________________

A giant firefly:
that way, this way, that way, this -
and it passes by.

ஓர் பெரிய மின்மினிப்பூச்சி

அங்கும் இங்கும் அலைபரித்தது

பறந்தோடிவிட்டது!

___________________

First autumn morning:
the mirror I stare into
shows my father's face.

இலையுதிர்காலத்தின் காலை

கண்ணாடியில் பார்க்கிறேன்

என் அப்பா!

___________________

After killing
a spider, how lonely I feel
in the cold of night!

எட்டுக்கால் பூச்சி ஒன்றை கொன்றேன்

தனிமை வாட்டுகிறது

இரவின் குளிர்

_____________________

The summer river:
although there is a bridge, my horse
goes through the water.

கோடையின் ஆறு

அதில் பாலம் என் குதிரை

சேர்ந்தே போகிறது!

____________________

No blossoms and no moon,
and he is drinking sake
all alone!

பூக்கள் இல்லை, நிலவும் இல்லை

அவன் குடிக்கிறான்

தனியாக!

____________________

Won't you come and see
loneliness? Just one leaf
from the
kiri tree.

வந்து பார்க்கமாட்டாயா என்
தனிமையை, ஓர் இலை தான்
கிரி மரத்திலிரிந்து!


*********

மொழி பெயர்ப்பு ஒ.கே.வா?

ஹைக்கூகள் அறிமுகம் செய்த சுஜாதா ரங்கராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம்!

ஆயுதமும் அமைதி வழியும்

இதை எழுதுவதால், நிறைய பேர் என் மீது கோபம் கொள்ளலாம்.

நானும் நெடு நாட்களாக அமைதி வழி தான் நன்று என்று எழுதி வருகிறேன் - ஸ்ரீலங்கா - ஈழம் குறித்து.

துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் தான் சாவான்.

காந்தி சொல்கிறார், ஒரு உயிர் கூட இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஆயுத போராட்டம் வழியில் போகக்கூடாது. அதன் பிறகு தான் சுபாஷ் சந்திரா போஸ் ஜப்பான் சென்று இந்திய அமைதி படையில் சேர்ந்தார். ஆரம்பித்தவர், வேறு ஒருவர் ( பெங்காலி - ஜப்பான் பெண்ணை திருமணம் செய்தவர் ).

"சுய ஆட்சி" தன் குறிக்கோள் என்று இன்றும் என் அப்பா சொல்கிறார், அங்கு பிறந்தவர். சிங்களதவரிடம் எந்த வகையிலும் எங்கள் குடும்பம் அல்லல் பட்டதில்லை. ஜாப்ன காடுகளில் இருந்து தீவிரவாதம், தான் ஒருவனே தான் தலைவன் என்று ஒருவர் புறப்பட்ட போது, வெடித்த வெடிகள், எங்கள் அப்பாவின் குடும்பம் புலம் பெயர வைத்து. இந்திய வந்த பிறகும், சம்பாரித்த பாதி பணம் கட்டப்பட்டது, சில நாட்கள் முன் வரை. அங்கு வேறு ஒரு தமிழ் தலைவர், தமிழர்கள் (இரண்டாம் டேக்ஸ்) கட்டாமல் இருந்தால், தீர்க்கப்பட்டார்கள். இது குறித்து எம்.ஜி.ஆரும் நன்றாக யோசித்து தான், அந்த தலைவருக்கு தமிழ்நாட்டில் அடைகலம் வழங்கினார். ஆனால் நடந்தது என்ன? பத்மநாபா கொலை.

யுரோப் நாடுகள், ஆயுதம் விற்க ஒரு தீவிரவாத க்ரூப் கிடைத்த சந்தோசம் ( இஸ்ரேல் என்று ஒரு நாடு மட்டும் அல்ல ) சண்டை நிற்க, வழி செய்யவில்லை. குண்டு கண்டுபிடித்த நாடு (நார்வே) தான் அமைதிக்கு வழி காட்டியது.

இன்று அப்பாவிற்கு சிங்கள நண்பர்கள் உண்டு. ராஜபக்சே குடும்பம் உட்பட.

தனி சுயாட்சி என்பது தான் நிஜ ஸ்ரீலங்கா தமிழர்களின் கனவு!

**********

தொடாபுடைய அனுஜன்யாவின் பதிவு...

என்னுடைய கமன்ட்...

//
Nice article, even though I don't believe in idolizing. I have written many articles about non violent method in my blog. At least leaders would have been alive.

Now UN says 50,000 families have been displaced since 1983. That is huge for an ethnic conflict.

But don't compare Prabhakaran with the Indian Mafiaso, might hurt "Eelam" Tamils.

A person who takes sword, dies with it!
//

***********

நானும் உங்களைப்போல ஒரு வருடமாக தமிழ் ப்ளாக் எழுதுகிறேன். ( அப்துல்லா அண்ணன், பரிசல் அண்ணன் செட் ) ;-)

Monday, May 25, 2009

அசைலம் கேட்கிறார்கள்

உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்...

இங்கே கிளிக் செய்து ஆங்கிலத்தில் படிக்கவும்!

Pearl Action

Click here to send the appeal directly!

மூன்று டாக்டர்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.

உங்கள் கடிதம்... அவர்களுக்கு உதவும். மனிதாபிமானம் நிச்சயம்!

நன்றிகள்...

லீவு முடிகின்றது

குழந்தைகளுக்கு லீவு முடிகின்றது! இன்னும் ஒரு வாரம் தான்.

இப்போதெல்லாம் நன்றாக தூங்கி எழுகிறார்கள்... எப்படி டைம் மாற்ற முடியும் என்ற பார்க்க வேண்டும்.

பள்ளிக்கல்வி எப்படி மாறிவிட்டது பாருங்கள். அந்த காலத்தில் லீவு ஹோம் வர்க் இருக்கும்... இன்னும் பல... பெரிய க்ளாசில் க்வேச்டியன் பேப்பர் ஆன்சர் எழுதி செல்ல வேண்டும்.

இந்த முறை, கோவையில் குழந்தைகள் ஒரு இடத்தில் ( சாய்பாபா காலனி - அப்துல் கலாம் அவர்களின் நண்பர் வீடு அருகில் ) ஸ்லோகா படித்தார்கள். என் கணவர் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை! அன்னபூர்னாவில் நோட்டிஸ் பார்த்து இடம் பிடித்தேன்.

***********

அப்பா அம்மாவுடன், சர்வம் படம் பார்த்தோம். குழந்தைகள் ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். எதோ ஒரு இங்கிலிஸ் படம் தழுவி எடுக்கப்பட்டது போல? ஒரு குழந்தை ஆக்சிடன்ட்டில் இறக்கும் வலி ஒருவனை மன நோயாளி ஆக்குகிறது. அதை சுற்றி ஒரு படம். மாஞ்சா கயிற்றில் பட்டம் விடாதீர்கள் ப்ளீஸ்.

முன்னார் மிக அழகாக தெரியுது...

**********

குழந்தைகளோடு வாரம் சில முறை நான் வெஜ், ஸ்வீட் காரம் ஸ்நேக்ஸ் என்று வெயிட் ஏறி விட்டது. டையட் மற்றும் எக்செர்சைஸ் செய்ய வேண்டும். கோவையில் காலையில் நடப்பதற்கு நன்றாக இருக்கும்... ஆனால் குழந்தைகள் பேட்டை விட்டு சீக்கிரம் எழ மாட்டார்கள்...

*********

கோவையில் சில ஏரியாக்கள் பார்த்தோம். ஜி.வி.ரெசிடென்சியல் லேயவுட் - பெர்க்ஸ் ஸ்கூல் அருகில் நன்றாக இருக்கும் போல உள்ளது. இடம் விலை சென்ட்டுக்கு ஐந்து லட்சம் என்கிறார்கள். பார்க்க வேண்டும். ஒரு வீடு கட்டிக்கொண்டால், கோவைக்கு குடி புகுந்து விடலாம்!

எனக்கும் ஒரு வேலை கோவையில் கிடைத்து விட்டால் நல்லது!

ஆனால் இங்கு ரியல் எஸ்டேட் ஆட்கள், பணம் இருக்குது இன்வச்ட் செய்ய என்றால், தொந்தரவு தொல்லைகள் தாங்க முடியவில்லை! விளையும் குறைக்க மாட்டேன்கிறார்கள். சரி ஐ.டி. பார்க் வருவதால், எப்படி இடம் விலை ( ரெசிடென்சியல் ஏரியாவில் ) ஏறும்? லாஜிக்கே இல்லை! அப்பா சொன்னார் கே.ஜி. க்ரூப், சில நூறு கொடிகள் போட்டு இடம் வாங்கி, நஷ்டப்பட்டு உள்ளார்கள் என்று. எஸ்.ஈ.ஜெட்... ஏற்றுமதி ஏரியா... (மம்தா பானர்ஜிக்கு பிடிக்காது வார்த்தை ) இருகூர் வரை ஏக்கர் ஒரு கோடி என்று செய்துள்ளது. அப்பாவின் பத்து ஏக்கர் தெண்ணந்தோப்பு நல்ல விலை வரும். ஆனால், ரவுடிகள், கட்டாயமா விற்க வைப்பார்கள் என்ற பயம் வேறு.

***********

அமெரிக்க வரை ஐ.பி.எல் பாய்ந்துள்ளது. திவ்யாவும் எழுதியிருக்கிறார்...

"வாழ்க்கையும் கிரிக்கேட் மேட்சும்"

நேற்று இரவு, சென்னை மாகளுக்கு சோகம் தான். பைனல்ஸில் இல்லையே!

************

அப்புறம் ஸ்ரீலங்கா போராளிகள் குழி தலைவர் இறப்பு பற்றி பல செய்திகள்.

ராஜு என்பவர், இப்படி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

படிக்க சுவாரசியம் - End of an era, Brand Name

அவர் எழுதியதைப்போல, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அந்த பிராண்ட் நேமை மறைய விடாமால் அதை வைத்து பிசினஸ் செய்வார்கள். திருந்தமாட்டார்களா. இப்போது வாடி வதங்கி இருக்கும் ஸ்ரீலங்கா தமிழர்களின் நலன், சுய ஆட்சி, முக்கியம்மாக பணம் கொடுத்து உதவனும்.

என்னிடம் கொடுத்தால், நான் நல்லது செய்ய எண்ணம்.