Saturday, January 3, 2009

நான் கடவுள் பாடல்கள் சொதப்பல்

இளையராஜா ஏன் இப்படி செய்தார்?

மாதாவின் கோவிலின் மணியோசை கேட்டேன் என்ற பாடலின் காபி தானா அம்மா உன் பிள்ளை? உண்மையை சொல்லுங்கள். ராகம் ஒன்று என்று டப்பாங்குத்து ஆடுவார்கள் இல்லையா?

ஓம் என்ற பாடல் தான் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. யாரோ உதவி செய்துள்ளார்கள் என்று இளையராஜா கூறியுள்ளார். படத்தில் நன்றாக இருக்கும்.

மற்றபடி, படத்தில் எப்படி பாலா ஷூட்டிங் செய்திருப்பார் என தெரியவில்லை.

மொத்தத்தில் நான் கடவுள் - பாடல்கள் - சொதப்பல்.

படம் எப்படியோ? ஆஸ்கார் வாங்குமா?

Friday, January 2, 2009

புது வருடம் முதல்

புது வருடம் முதல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.

2008 என்பது இப்போது முடிந்து போன ஒரு கனவு.

நேரம் கிடைக்கும் போது எழுதுவது ஒரு கலை.

அதுவும் ப்லோக் படிப்பது, மிகவும் தெரிந்த ஆட்கள் எழுதுவது தான் முதலில் படிக்க தோன்றுது.

அப்புறம் ஆங்கிலத்தில் இரண்டு மில்லியன் ப்லோக் இருக்கு. அதில் இந்தியா டாபிக்ஸ் படிக்க வேணும்.

எப்படியும், வாரம் ஒரு முறை அல்லது பல முறை ப்லோக் எழுத வேண்டும்.

**************

2008 டப் டென் சினிமா (தமிழ் ... எம்மொழியும்...)

10. ஜெயம் கொண்டான்
9. பொய் சொல்ல போறோம்
8. வாரணம் ஆயிரம்
7. சாது மிரண்டால்
6. வெள்ளி திரை
5. தசாவதாரம் (முக கவசதிற்க்காக)
4. அஞ்சாதே
3. குசேலன் (பசுபதி நடிப்புக்காக)
2. சுப்ரமணியபுரம்
1. பூ


என் வாசகர்களை ஒரு தொடர் பதிவாக எழுத வேண்டுகிறேன்.

இந்த வரிசையை பயன் படுத்தி உங்கள் ரேடிங்கும் கொடுக்கலாம்.

பின் குறிப்பு...

நீங்கள் பார்த்த படத்திற்கு ஒரு அளவுகோல். மற்றவை, பார்க்காத ஒவ்வொரு படத்திற்கும் சில விமர்சனம் படித்து ரேங்கிங் இடலாம்.

*****************************
நான் அழைக்கும் மூவர்

கே.ரவிசங்கர்
பரிசல்காரன்
ரமேஷ்

(மற்ற எல்லோரும் எழுதுங்க!)

Wednesday, December 31, 2008

நட்சத்திர பதிவரும் கதையும்

என்னுடைய ப்ளோகில் பல முறை சுட்டி காட்டிய லதானந்த் அங்கிள் அவர்கள் நட்சத்திர பதிவர் தமிழ்மணத்தில் ஆகியுள்ளார். வாழ்த்துக்கள்... இப்போது அந்த தளத்தில் அவர் பதிவுகள், முதன்மையாக காண்பிக்கப்படுகிறது.

நான் சுட்டி காட்டிய அவர் பதிவுகள்....

தலித் பின்னூட்டம்

பரிசல்காரன் - வலைப்பதிவு

வெண்பா

அவர் எழுதிய ஒரு கதை பத்திரிக்கைகள் பிரசுரிக்க மறுத்த கதை – ரசனை, ஏனோ பிரசுரம் ஆகவில்லை...

கதை நன்றாக தான் அவர் டச்சில் உள்ளது. ஆனால் எதோ மிஸ்ஸிங். அடல்ட் விஷயம் மற்றும் இந்த சினிமா பைத்தியங்கள் (மதிப்பிற்குரிய ரசிகர்கள்!) சொந்தங்கள் விசயத்தில் இப்படி நடக்குமா என்ற எதார்த்தமான கேள்வி ... அதுவும் இந்த மே பி அஜீத் படம் நேசம் என்பதால்? தெரியவில்லை! வேற டைட்டில் கொடுத்து எழுதினால்... பிரசுரம் செய்வார்களா? "சினிமாக் காதல்?"

******

எனக்கு நட்சத்திர பதிவர் ஆக ஆசை இல்லை. ;-)

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.

My Photo

Tuesday, December 30, 2008

அமெரிக்காவில் கசின்

என் சித்தி மகள் (கசின்) அமெரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கிறாள்...

பி.ஈ. படித்தவள்... இப்போது வீட்டில், முதல் குழந்தை கவனித்துக்கொண்டு, இரண்டாம் குழந்தை எதிர்பார்த்து... அப்புறம் கணவனையும் கவனித்து கொள்கிறாள்.

கல்யாணம் செய்த பிறகு ... சிகாகோவில் ஒரு வருடமும், பிறகு மூன்று வருடங்களாக இருப்பது ஹூஸ்டன். சென்னை மாதிரி இருக்கிறது என்கிறாள்.

சித்தி பையன்
ஜனவரி இறுதியில் அவர்களை அழைத்துக்கொண்டு அமெரிக்கா செல்கிறான்... இரண்டாவது குழந்தை பெப்ருவரியில்... உதவிக்கு ஆள். ஆறு மாதம் இருந்துவிட்டு வருவார்கள், விசா எக்ஸ்டன்சன் கிடைத்தால் ஒரு வருடம். மூன்று வருடத்திற்கு முன் ஒரு வருடம் இருந்துவிட்டு வந்தார்கள் கசினின் முதல் குழந்தை பிறந்த போது.

அவள் கல்யாணம், ஒரு ஸ்பீட் படம் மாதிரி. 2004 இல் மே மாதம் போட்டோ பார்த்து ஒக்கே செய்து, வெப்கேமில் பார்த்து சேட் செய்து... பாஸ்போர்ட் ரெடி செய்து, இந்தியன் டிரைவிங் லைசன்ஸ் எடுத்து காத்திருந்தாள்... மாப்பிள்ளை இந்திய மூன்று வார லீவில் வந்தார்... யு. எஸ். விசா அப்பாயின்ட்மன்ட் புக் செய்திருந்தார்கள்... கூடவே அழைத்து சென்றார்.

நல்ல வேலை இரண்டு வாரம் முன் தான் சித்தி பையன் விசா எடுத்திருந்தான். கண்மூடித்தனமாக ரிஜக்ட் செய்வார்களாம். கணவருக்கு வாய்ப்பு வருகிறது. அவரின் கம்பனியே இன்னும் ஆறு மாதத்தில் அனுப்புகிறேன் என்றிருக்கிறார்கள். எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

கசின் மாப்பிள்ளை சைடில் இரண்டு முறை அமெரிக்கா சென்று வந்துள்ளார்கள்.... ஒரே மகன். செல்லம்.

இந்தியாவில் தான மாமியார்களை மருமகள்களுக்கு பிடிப்பதில்லை. அமெரிக்காவில் மாமியார்கள் அடங்கி ஒடுங்கி இருக்கிறார்களாம். ஒரே ப்ரெண்ட்ஷிப் என்றாள்.

ஆனால்
பெண் கேட்பது அம்மாவை தான் பிரசவ காலத்தில். ;-)

******************

ஒரு பதிவு எழுத ஆரம்பித்து மூன்று பதிவு ஆகிவிட்டது....

ப்லோக் முறைப்படி சிறிதாக இருந்தால் படிப்பதற்கு நன்றாக இருக்கும்.

சித்தி பையன்

இன்று காலை இருந்த அமெரிக்காவில் இருந்து வந்துள்ளான். பாவம் அறுபது மணி நேரம் தொடர்ந்து பிரயாணம்...ப்ருசல்ஸ் விமானம் இறங்கிய போது பனிரெண்டரை மணி. பிக்கப் செய்து வீடு வரும் போது இரண்டு மணி. நினைத்து பாருங்கள். சென்னை குளிர் எப்படி இருந்திருக்கும் என்று? நல்ல அனுபவம்.

அவன்
படிக்கும் ஊர் நார்த் டகோடாவில் உள்ள பார்கோ. கடும் குளிர் ஊர். ஆகஸ்டில் சில சமயம் ஸ்னோ வரும் என்று கிண்டல் செய்கிறான்... வெள்ளி இரவு கிளம்ப வேண்டியவன், கடும் பனியால், டிக்கட் மாற்றி, சிகாகோ சென்று, நியூ யார்க் அனுப்பி, ஒரு நாள் வெயிட் செய்ய வைத்து - ஹோட்டல் கொடுத்து... லண்டன் , ப்ருசல்ஸ் வழியாக, எப்படியோ, அறுபது மணி நேரம் தொடர்ந்து, நிறுத்தி நிதானமாக பிரயாணம் செய்துள்ளான்... வாழ்த்துக்கள்!

மதியம் ட்ரெயினில் கோவைக்கு பயணம். பாவம், மரக்கட்டை மாதிரி தூங்கி பன்னிரண்டு மணிக்கு எழுந்து, குளித்து அவசரமாக ட்ரயின் பிடித்தான். நல்ல வேலை எப்படியோ டிக்கட் கிடைத்தது. திங்கள் காலை வர வேண்டியவன் என்பதால், மதியத்திற்கு டிக்கட் எடுத்திருந்தார்கள், லேட் ஆகும் என்று பொன் செய்ததால், கேன்சல் செய்துவிட்டு இன்றைக்கு மாற்றினார்கள்.

டிசம்பர் முதல் வாரத்தில் செமஸ்டர் எக்ஸாம் முடித்து விட்டு, ஒன்றரை வருடம் கழித்து வருகிறான்.... ஆகஸ்ட் 4, 2007 சென்றவன், 16 மாதங்கள் பிரிவு ... இன்னும் இரண்டு கோர்ஸ் தான் பாக்கியாம். இதுவரை ஆறு லட்சம் செலவு ஆகியுள்ளது என்றான். அவனே 12% வட்டிக்கு பாங்க் கடன் வாங்கி செலவு செய்கிறான்... எப்படியும் தானே திருப்பி கட்டுவேன் என்கிறான். எப்படியும் அடுத்த அக்டோபரில் சம்பளம் வரும் என்கிறான், எச். 1 விசா வந்த பிறகு....

ஏதோ அவன் காலேஜ் (ஸ்கூல் ஸ்கூல் என்றான், அமெரிக்கன் ஆக்சன்டில்) டிபார்ட்மன்ட் வேலை செய்து சிறிது காசு மிச்சம் செய்துள்ளான். இரண்டு மாதம் லீவு சமயம் வேலை செய்து சம்பாரிக்கிறார்கள், எதாவது வேலை கிடைத்தவர்கள்.

இப்போதே பெண் பார்கிறார்கள், அங்கு படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்ணை, எப்படியோ சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு கல்யாணம் செய் என்கிறோம். இருபத்தைந்து வயது ஆகிறது...

எம்.பி. வேறு செய்வேன் என்கிறான். வேலை செய்துக்கொண்டு செய்தால் நலம். அந்த மாதிரி ஊரில், சன் பிரான்சிஸ்கோ, சிகாகோ, டல்லஸ் அல்லது நியூ யார்க் தான் வேண்டும் என்கிறான்.

எப்படியோ கார் ஒட்டுகிறானாம்... பனியில் வாழ்வது கடினம் போல. பெண்கள் கூட கல்யாணம் செய்து அமெரிக்கா சென்றவுடன், கார் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிவிடுகிறார்கள்.

எதற்கு அங்கு போய் படிக்கிறான்.... மாஸ்டர் ஆப் கம்ப்யுட்டர் சயன்ஸ்? அமேரிக்கா ஆர்வம் எல்லோருக்கும்... என்ன செய்ய... இங்கே சென்னையில் கிரேசன்ட்டில் படித்தவன். 2004 படிப்பு முடித்துவிட்டு, பெங்களூரில் மூன்று வருடத்திற்கு மேல் இன்போசிஸில் வேலை. இப்போது லீவு தான் எடுத்துள்ளான்! (போல?) அமெரிக்காவில் வேலை கொடுப்பார்கள என்று தெரியவில்லை என்கிறான். வேறு கம்பனியில் சம்பளம் அதிகம் கிடைக்கும், கிரீன் கார்ட் போன்றவை ஈசி என்றான்......

வரும் ஏப்ரலில் படிப்பு முடித்து, எஸ்..பி. தொழில் கம்பெனியில் அங்கேயே ஜாயின் செய்கிறேன் என்கிறான். இன்னும் வேலை கிடைக்கவில்லை ... இன்டர்ன்ஷிப் ட்ரை செய்கிறானாம். மார்ச்சில் எஸ்..பி. எக்ஸாம் செர்டிபிகேசன் எழுதுகிறானாம்.

வேலை இன்டர்ன்ஷிப் கிடைத்தால் நல்லது... உதவி தேவை... விவரம் தெரிந்தவர்கள் கமண்ட்ஸ் போடவும்.

ஒரே மகன் - சித்தி அழுகிறார்கள் மகனை விட்டு விட்டு இருக்க, இருவரும் இப்போது தனி, சித்தப்பா கோவை அருகில் மளிகை கடை வைத்திருக்கிறார்.... இதற்கும் முதல் மகளை அமெரிக்காவில் தான் கட்டி கொடுத்துள்ளார்கள் படிப்பு முடித்தவுடனேயே... பெண் கோவையில் ஜி.சி.டியில் கம்ப்யுட்டர் சயன்ஸ் படித்தவள், இப்போது நன்றாக சமைத்துக்கொண்டு ரிலேக்ஸ் ஆக இருக்கிறாள்.

யாரோ நண்பர் ஒருவருக்கு லேப்டாப் வாங்கி வந்துள்ளான், இவனுக்கு கொண்டு வந்ததற்கு இருநூறு டாலர்கள் லாபம் பங்கு. இந்தியாவால் மேக்பூக் விலை அதிகமாம்... எப்படியெல்லாம் செய்கிறார்கள் அமெரிக்கன் ஸ்டுடண்ட்ஸ்!

சென்னையில் குளிர்

இந்த மாதிரி குளிர் சென்னையில் ஒரு இருபது வருடம் முன் பார்த்துள்ளேன்.

இன்று காலை 16 டிகிரீ செல்சியஸ். என்ன பெங்களூரில் இருக்கிறோமா என்று தோன்றும் அளவு.... அதுவும் மிட் நைட் சென்று ஏர்போர்ட்டில் பிக்கப் எப்படி இருந்திருக்கும் நினைத்து பாருங்கள்.... கிளம்பும் போதே ஸ்வெட்டர்!

சரி நாங்கள் தான் மைசூர் சென்று வந்தோமே, அதன் பலன் உடல் இப்படி என்று நினைத்தோம்.

பே ஆப் பெங்கால் டிப்ரெசன் என்கிறார்கள். என்னவோ நடக்குது. மரத்தை கண்டபடி வெட்டுகிறார்கள். மீண்டும் உலகில் ஐஸ் ஏஜ்?

*********************

அப்புறம் இந்த பதிவு படித்தேன்... ஒரு சுட்டி காட்டல்... சில ஸ்மைலிகள் கமன்ட்சில் விழும்...

Slumdog Millionaire

மீண்டும் சத்யமில் பார்க்க வேண்டும்!

கணவர் சொல்கிறார், வருடத்திற்கு எங்கள் சினிமா பார்க்கும் செலவு மட்டும் ஒரு மாதத்தின் சேமிப்பு.

Monday, December 29, 2008

மைசூர் பயணம்

மைசூர் பயணம் ஒரு மாதத்திற்கு முன் பிளான் செய்தோம்.

பெங்களூர் சென்ற போது ஐடியா கிடைத்தது. நாங்கள் மங்களூர் அலல்து கோவா தான் பிளான் செய்தோம். உங்களுக்கே தெரியும் கூட்டம் மற்றும், இந்த தீவிரவாதிகள் பயம்....

பெங்களூரை விட கொஞ்சம் சூடு.

சனி காலை எட்டரை மணிக்கு சென்று சேர்ந்தோம்.

உடனே குளித்து ரெடி ஆகி, பப்பே ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு... மைசூர் பேலஸ் முடித்தோம். லன்ச் அருகில் நார்த் இந்தியன் சாப்பிட்டோம். பிறகு அப்படியே சாமுண்டி ஹில்ஸ். நான் மட்டும் குழந்தைகளோடு கோவில் உள்ளே சென்று வந்தேன். சுடிதார் போட்டு உள்ளே சென்ற முதல் ஆள் நான் தான் என நினைக்கிறேன்.

ஹோட்டல் வந்து, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, டி குடித்தபின், நான்கு மணிக்கு கிருஷ்ணராஜ சாகர் டேம் பயணம். பிருந்தாவன் கார்டன்ஸ். ஆறு மணிக்கு மேல் டேன்சிங் பவுண்டன் என்றார்கள். ஏழு மணிக்கு ஆண் செய்தார்கள். சில பாடல்கள், வித விதமான வண்ண விளக்குகள். சில பாரீனர்கள் வந்திருந்தனர்.

இரவு வரும் வழியில் ஹெரிடேஜ் என்ற ஹோட்டலில் டின்னர். மீண்டும் நான் ரோடி பன்னீர். குழந்தைகளுக்கு இது அலுக்காதா?

இரவு வந்து தூங்கி, காலை ஆறரைக்கு எழுந்து, வெளியே சிறு வாகிங். குழந்தைகள் டிவியில் ஹிந்தி படம் பார்த்தார்கள். அவசரமாக சென்று ப்ரேக்பாஸ்ட் முடித்துவிட்டு, பத்து மணிக்கு... ஸ்ரீரங்கப்பட்டினம். ஒரு மணிக்கு மைசூர் திரும்பி, காமத் ஹோட்டலில் லன்ச். சவுத் இந்தியன் தாளி. மினி பூரிஸ் அழகாக கொடுக்கிறார்கள். பெங்களூரில் சாளுக்கியாவில் சாப்பிடுவது போல இருந்தது.

இரண்டு மணிக்கு ஹோட்டல். இரண்டு நாட்கள் டாக்சி சார்ஜ் ருபாய் ஆயிரத்து ஐந்நூறு. சென்னைக்கு பரவாயில்லை?

ரெஸ்ட் எடுத்து விட்டு, ஆறு மணிக்கு ரெடி ஆகி மைசூர் பயணம் முடித்தோம்.

மைசூர் டு பெங்களூர் வழியெல்லாம், செல் போன் வேலை செய்கிறது. மடிக்கணினியும் இண்டெர்நெட்டும் என டைம் சென்றது. நாங்கள் இருந்த 3 டயர் ஏசி கம்பார்ட்மென்டில் ஒரே சத்தம், பெங்களூர் விட்டு கிளம்பும் போது பதினொன்றே முக்கால். காலை ஆறேகாலுக்கு சென்னை வந்து இறங்கினோம்.

*******

ப்ரெட் ப்ரேக்பாஸ்ட் முடித்துவிட்டு கணவர் ஆபிஸ் சென்று விட்டார், புளியோதரை செய்துவிட்டு, நான் இண்டர்நெட்டில் ....

Sunday, December 28, 2008

சில பிடித்த பதிவுகள்

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சந்தோசம் எங்கும். எல்லாம் லீவு மாயம். அப்புறம் என்ன?

இப்போது மைசூரில் இருந்து கிளம்புகிறோம். இரண்டு நாட்கள் போனது!

குழந்தைகள் நன்றாக என்ஜாய் செய்தார்கள்.

இங்கு எல்லாம் நன்றாக உள்ளது. எல்லோரும் நன்றாக தமிழ் பேசுகிறார்கள்.

ரிகாலிஸ் என்ற ஹோட்டலில் தங்கினோம். ஸ்டேசன் அருகில் தான்... அழகான ஹோட்டல். கணவர் கம்பெனி கொடுத்தது.... எங்களுக்கு வருடம் ஒரு ட்ரிப் கிடைக்கிறது. அடுத்த வருடமாவது சிம்லா அல்லது மணலி செல்ல வேண்டும்.

அப்புறம் மைசூரில் மைசூர் பா நல்லா இல்லே. நானே நன்றாக செய்வேன்!

வை பை இருக்கு இங்கே இலவசம். குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க நான் நெட்டில் மெயில் செக், மற்றும் ப்லோக் படிப்பு மற்றும் எழுதுறேன். ட்ரெயின் பிடிக்க கொஞ்சம் நேரம் இருக்கு.... எட்டு மணிக்கு தான்!

*******************

சில பிடித்த பதிவுகள்... இந்த வாரம் ....

முஸ்லீம் என்றால் தீவிரவாதியா?

அயோக்கியன்

பெருவெளி

ரமேஷ் பதிவில் எழுதிய இரண்டு படங்கள் பார்க்க ஆசை. சத்யமில் ஓடுகிறது. தமிழ் படம் என்றால் ஒக்கே. பெஞ்சமின் பட்டன், குழந்தைகள் பார்க்கும் படமா?

**************************************

இங்கே காலை எழு மணியில் இருந்து "தா ர ரம் பம்" என்ற ஹிந்தி படம் டிவியில் ஓடியது. குழந்தைகள் பார்க்கவில்லை படம் வந்த போது.... அப்போது. கஷ்டப்பட்டு ஜெயிக்கும் கதை. சில இடங்களில் குழந்தைகள் அழுதார்கள்.

அவசரமாக ப்ரேக்பாஸ்ட் பப்பே சென்று வந்தோம். நேற்று லன்ச், டின்னர், எல்லாம் நார்த் இந்தியன். இன்று மதியம் காமத். இரவு, ஸ்டேசனில் எதாவது.

என்ன இந்த 4 ஸ்டார் ஹோட்டல்களில் வந்து தங்கி சென்றால், குழந்தைகள் கெட்டு போவார்கள். ப்ரிஜ்ஜில் ஜூஸ், குடி வைத்து விடுகிறார்கள். இரண்டு நாட்களில் முன்னூறு ருபாய் ஜூஸ் மட்டும்... தனி பில் என்று போடுகிறார்கள்...

************

இரண்டு மூன்று கமண்ட்ஸ் எனக்கு...

நான் பதிவுகளில் ரொம்ப ரொம்ப மற்ற பதிவுகள் பற்றி எழுதுகிறேன் என்று.

என்ன செய்வது? எழுத தெரிந்த விதம் அவ்வளவு தான்!

என்ன நான் எழுதியவை, மே முதல் 105 பதிவுகள். சுமார் எட்டு மாதங்கள். பாதிக்கு மேல் எல்லாம் சுட்டி காட்டும் பதிவுகள். சிலர் எழுதும் மாதிரியே எழுதுகிறேன்! ஸ்டையில் காபி.

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா!

Friday, December 26, 2008

சிக்ஸ் சிக்மா

சிக்ஸ் சிக்மா பற்றி இரண்டு பதிவுகள் படித்தேன்... நன்றி.

சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்

சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம் (நிறைவு பகுதி)

இந்த மாதிரி ஒவ்வொரு பதிவரும் எழுதினால் அருமையாக இருக்கும்.

-----------------

கிறிஸ்துமஸ் செலப்ரேசன் எப்படி? டிவி முன்னால் எங்களுக்கு...

இன்று இரவு மைசூர் பயணம், இரண்டு நாள் ரிலேக்ஸ். குழந்தைகள் பரீட்சை லீவு!

அவசியம் படியுங்கள் இந்த பதிவு (ஆங்கிலத்தில்) Anecdote on Perceptions

Sunday, December 21, 2008

திருட்டு கல்யாணங்கள்

திருட்டு கல்யாணங்கள் என்று ஒரு விஷயம், இந்த பாரீன் மாப்பிள்ளைகள் வைத்து தான் தெரியும்.

என் கணவரின் சொந்தம் ஒருவர், ஏற்கனவே கல்யாணம் ரெஜிஸ்டர் ஆபீஸில் செய்து விட்டு, பிறகு சில காலங்களில் பிரிந்து விட்டார்கள்.

நடிகர் பிரசாந்த் கேஸ் ஞாபகம் வருது.

இப்போது ஒரு பெரிய இடத்து பெண் ....கல்யாணம். மாபிள்ளை யு.கே. வேலை .... ரெஜிஸ்டர் செய்ய போகும் போது தான், விஷயம் தெரிந்த்து. நண்பர்கள் கட்டாயத்தில் விளையாட்டு கல்யாணம்... படிப்பு காலத்தில்...

முதல் கல்யாணம் இருக்கும் போது, இரண்டாம் கல்யாணம்?

போலிஸ் கேஸ் ஆகவில்லை. இருந்தாலும்... அந்த பெண்ணிற்கும் கல்யாணம் ஆகி, துபாயில் இருக்கிறாள்... எப்படி மேரேஜ் சர்டிபிகேட் இல்லாமல் சென்றாள்?

மாப்பிள்ளையும், அந்த பெண்ணும், முசுவல் டிவோர்ஸ் செய்த பிறகு... அவர் துபாய்க்கு செல்லும் போது பிரச்சனை வருமா?

இப்போது டிவோர்ஸ் ஒரு வருடம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்... பாவம் .. பெண். அவர் அப்பா வயசாகி நோயாளி... இந்த கஷ்டம்... மகள் லண்டன் செல்வாள் என்று இருந்தார்கள்...

எல்லோரும் உஷார். மாப்பிள்ளைகள் ஜாக்கிரதை....

Friday, December 19, 2008

நான் ரசித்த கம்பனி லோகோஸ்





நான் ரசித்த கம்பனி லோகோஸ். சத்யம் எங்கேப்ப்பா? ஒரெகில் காணோம். நிச்சயம் இவை இந்திய கம்பனிகளின் நிலையை முற்றிலும் அருமையாக காட்டுகிறது. தேங்க்ஸ் பரிசல்காரன்.

ஒரு பதிவு பற்றி

இப்போது தான் இந்த ப்லோக் படித்தேன்... நன்றாக எழுதியுள்ளார்....

நான் எழுதிய கமன்ட்...

நீஙகள் பேசுவது எல்லாம் காசு இருந்தால் தான் நடக்கும் அல்லவா? மூடிந்தவரை விட்டு கொடுத்து போவது முக்கியமாக ஆண்களுக்கு நல்லது... வீட்டில் நிம்மதி, வேலையில் நிம்மதி!

எப்படி என்கிறீர்களா.... காலையில் இன்முகத்துடன் வேலைக்கு சென்றால், நன்றாக இருக்கும்...

வீட்டு கஷ்டம் பேசி தீர்த்துக்கொள்வது நலம்...

தொடர்புடைய பதிவு...

திருமணம் ஆன ஆண்களுக்கு ... !

Thursday, December 18, 2008

சத்யம் தவறிய சத்யம்

ஏழைகள் வயிற்றில் அடிக்காதே சேர்மேன் ராமலிங்க ராஜு! சத்யம் ஒரு கே.10 ஸ்டாக். .டி. கம்பனி. இன்னும் அவர்கள் தான் ஓனர்கள் என்ற நினைப்பு. மிகவும் கீழ்தரம் மிகுந்த செயல் செய்தார்கள் ராமலிங்க ராஜு குடும்பத்தினர். 8.65% ஷேர்கள் தான் வைத்துள்ளார்கள். மற்றவை எல்லாம் வெளிநாட்டு முதலீடு, மற்றும் எங்களை போன்ற மக்கள் வைத்திருப்பது...

ஹைதராபாத் தலைமை இடம். ராமலிங்க ராஜு சேர்மேன். சிறு கம்பனியாக இருந்து வளர்ந்தது. நல்ல அரசியல் ஒத்துழைப்பு. டி.டி.பி. நாயுடு.

மச்சான் ராம ராஜு ஒரு டைரக்டர். ஒன்பது பேர் குழு - மேனேஜ்மன்ட். ஆறு பேர் இண்டிபெண்டன்ட் டைரக்டர்ஸ். வெத்து வேட்டுக்கள். வெளி நாட்டு ஆள் எல்லாம் ஓடி விட்டார்கள். கேடன் பரேக் சூதாட்டத்தில் பணம் பண்ணிவிட்டு. இப்போது ஒருவர் மற்றும் படிப்பு சமந்தப்பட்ட இடத்தில்,. அதுவும் ஐ.எஸ்.பியில் சொல்லிகொடுதுக்கொண்டு வேலை செய்கிறார்.
இன்னொரு .எஸ்.பி ஆள் டைரக்டர்!

கேடன் பரேக் 10 ஸ்டாகுகளை இஷ்டத்திற்கு விலை ஏற்றி, சேர் ஒல்டர்களுக்கு நாமம் போட்டான்.

மகன்கள் மேடாஸ் (சத்யம் திருப்பி போட்டால் SATYAM -> MAYTAS )... பராபர்டிஸ் நடத்துகிறார்கள்... மொத்த மதிப்பு பத்தாயிரம்... ப்ரோமொடர்களுக்கு 36.64% சொத்து அதில் உள்ளது.

அதை சத்யம் வாங்க வைக்க ... ரூ 6800 கோடிகள் கொடுத்து.. தான் பிரச்சனை. ரிஸ்க் குறைப்பது என்று ஒரு நடவடிக்கை. 6300 ஏக்கர் நிலம் உள்ளதாம்... அதற்க்கு ஏக்கருக்கு ஒரு கோடி... இன்னும் பணம் கூட பைசல் செய்யாது நிலம். லேண்ட் பேங்க். நாற்பது லட்சம் பெறாது ஒரு ஏக்கர்,
ஹைதராபாத் சுற்றி... முப்பது கி.மி. தள்ளி.

அது எதை காட்டுகிறது... ஊரான் வீட்டு வெண்ணை எடுத்து குடும்பத்திற்கு கொடுப்பது... இதன் மூலம் அவர்கள் குடும்பத்தில், மகன்கள் சத்யமில் டைரக்டர் ஆவார்கள்... மற்றும்... ரூ 2500 கோடிகள் அல்வா.

இப்போது ஒரு நாள் வீழ்ச்சியில்... ரூ 600 கோடிகள் அவுட்.

கொடுமை... அக்டோபர் 27 அன்று தான் 30 ஸ்டாக் வாங்கினேன் 165 ருபாய் ஒன்றுக்கு. பி.ஈ ரேசியயோ 5.



*************

கொசுறு.. ராமலிங்க ராஜு அப்பா ஒரு பெரிய சூதாடி. எனக்கு ஒரு நண்பர் சொன்னார், அவர் ஜெயித்த சத்யம் மில்ஸ் வைத்து தான் குடும்பம் பிழைத்தது....

Tuesday, December 16, 2008

நல்ல விஷயங்கள் - தருணங்கள் 100

ப்லோக் மூலம் நிறைய நல்லா விஷயங்கள் நடக்கின்றன.

நானும் கடந்த எட்டு மாதங்களாக, எனக்கு தெரிந்தளவு எழுதி வருகிறேன்.

ஒரு சிறிய முயற்சி.

****************

கிரிகெட்டில் இந்திய மிக பெரிய வெற்றி பெற்றது. மகிழ்ச்சி.

அதிலிரிந்து என்ன நாம் எடுத்துக்கொள்ளலாம்? ஒற்றுமை, விடா முயற்சி...

என்னுடைய ப்லோக் லிஸ்டில் நான் படிக்கும், பிடிக்கும் எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு நன்றி.

****************

இது எனது நூறாவது பதிவு. வாழ்த்துக்களுக்கு நன்றி.