Friday, June 19, 2009
இரண்டு பதிவுகள், குழந்தைகள்
பதிவு படித்தேன்... நான் இட்ட கருத்து...
//
என்ன சொல்ல வரீங்க ? புரிஞ்ச மாறி இருக்கு... புரியலே!
ஆனா ஒன்னு Survival of fittest அப்படின்னு சொல்லி, ஒருவரை ஒரு கூட்டுக்குள் அடைக்காமல், அதிகம் முயற்சி எடுக்க வைக்க வேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து. Never give up!
பரிணாம வளர்ச்சியால், குழந்தைகள் தாமாக வளர்கின்றன. பெற்றோர் எல்லாம், ஒரு படிதாங்கி தான்.
எங்கள் அப்பார்ட்மென்ட் அருகில் இரு கவன்மெண்ட் பள்ளிகள் உள்ளன ( ஆண், பெண் ). இரண்டு குரங்குகள் ஜோடியாக சில வருடம் முன், பெரிய அரச மரத்தில் வாழ்க்கை ஆரம்பித்தது. இப்போ அதற்க்கு மூன்று குட்டிகள்... எப்படியோ நகர சந்தடியில் வாழ்கின்றன. தினம் ஒரு முறையாவது பார்த்துவிடுவேன்... நகர வாழ்க்கையில் அவை ஒன்றி, குப்பை மேட்டில் உணவு எடுத்து, பெட்டிக்க்கடைக்காரர் போடும் அழுகியபழம் தின்று... என்ன ஒரு பயம் என்றால், அவை யாரவது குரங்காட்டி இழுத்து சென்று விட்டால்? நாம் தான் அவைகளுக்கு இடம் கொடுக்காமல், இருக்கும் இடம் எல்லாம் எடுத்துக்கொள்கிறோம். ( கொல்லுகிறோம் - ஒபாமா உட்பட - கரக்ட் தான் - தொந்தரவு செய்தால்)
குழந்தைகள் குழந்தைகளாக இருக்க விடுங்கள்!
//
************
அப்புறம் பரிசல்காரனின் "ஆஸ்பத்திரி நாட்கள்"
இந்த மாதிரி விஷயம், எங்கள் குடும்பத்திலும் ... என் மகனுக்கும் நடந்தது. நான் அவரைக்குழ்ம்பு செய்ய அவரை ( ராஜ்மா ) ஊற வைத்திருந்தேன். அப்போது அவனுக்கு மூன்று வயது. பள்ளிக்கு காலை ஒன்பது முதல் பன்னிரண்டு வரை - பேபி க்ளாஸ் - சென்று வருவான். மகள் பள்ளியில் இருந்து மூன்று மணிக்கு தான் திரும்புவாள்....அன்று, அவனை அழைத்து வந்துவிட்டு, குக்கரில் அவரை வேக வைத்து சமைக்க ஆரம்பித்தேன். அவர் டிவி முன் இருந்தான். கொஞ்சம் நேரம் கழித்து அவனை பார்க்கும் போது, மூக்கை நோண்டிக்கொண்டு இருந்தான். என்னடா என்று கேட்டதற்கு, ஒண்ணுமில்லே சும்மா என்று சொல்லிவிட்டான். நானும் கவனிக்கவில்லை. ஒரு மணிக்கு என்னவர் வீட்டிற்க்கு சாப்பிட வந்தார். அப்போது அவன் மூக்கின் இடது புறம் வீங்கியிருந்தது. டார்ச் அடித்து பார்த்ததில், மூக்கில் ஒரு அவரை இருந்தது. ஏன்டா பண்ணினே என்ற கேட்டதில், அழுக்கு என்றான்! ( எனக்கு திட்டு பலம்... ). டாக்டரிடம் சென்றோம். ஏ.வி.எம். ஈ.என்.டி. மைலாபூர். குறடு மாதிரி ஆயுதம் வைத்து எடுத்தார்கள். அப்பப்பா என்ன பயம்...
ஆறு மாதத்தில்...மீண்டும் ஒரு முறை, ஸ்கூலில் காதில் நோடேபூக் அட்டை பேப்பர் போட்டு விட்டான். திரும்பவும் அதே டாக்டர் .... என்னடா என்று கேட்டால், க்ளாசில் ஒரே சத்தம். பஞ்சு இல்லே, அதனாலே பேப்பரில் அடைத்தேன் என்றான்!
பெண் குழந்தைகள் இந்த விசயத்தில் கொஞ்சம் பொறுப்பு என்று தோனுது...
பெற்றோர்கள் தான் கவனமாக இருக்கணும். ஆபத்து என்று ஒன்று வரும் போது ( எப்படி வரும் என்று தெரியாது, எந்த ரூபத்தில் இருக்கும் என்று தெரியாது ) டாக்டர்களோ, நண்பர்களோ காப்பாற்றுவார்கள்.
குழந்தைகளை கண் முன்னாள் வைத்திருங்கள்!
Thursday, June 11, 2009
சாமி பாடல்கள்
bhaktipaadal என்ற தளம் பற்றி சஞ்சயின் இந்த பதிவில் பார்த்தேன்... "சாமி பாட்டுக் கேட்கலாம் வாங்க" நன்றி!
என்ன பாடல்கள், தரம் வரிசை, தமிழ் பெயரில் இல்லை. தேடுவது கஷ்டம்!
நானும் "பள்ளிக்கட்டு", "விநாயகனே" , "குன்றத்திலே", "புல்லாங்குழல்", "மருதமலை", போன்ற பாடல்களை நிறைய தடவை தேடினேன். கேசட் தான் இப்போ இருக்கு.... யாரவது ப்ளீஸ் லிங்க்ஸ் கொடுங்க...
வேறு மதத்தவர் என்றாலும் என்னவருக்கு இந்த பாடல்கள் பிடிக்கும். சுப்ரபாதம் இல்லாமல் அவர் எழுவதில்லை. ( அவருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது! )
வானவில் வீதி - தனிமையின் விலை
என் கமன்ட்...
//
என்னமோ கொஞ்சம் குறையிற மாதிரி இருக்கு!
மத்தபடி, சுஜாதாவின் நடையை பின்பற்றி ( பிரிவோம், சிந்திப்போம்.... ) எழுதியிருக்கிறீர்கள்!
வெளிநாட்டு மோகம் உங்களுக்கு? நல்லா படிங்க, ஆடோமேடிக்காக வாய்ப்பு வரும்.
அப்புறம் நம்ம இந்தியாவில் இல்லாததா? ( ஆஸ்த்ரேலியா, கேனடா... X )
//
********
சரி சரி கதை எங்கே? ( அவர் மொத்தமா, ஒரே ப்ளாக் போஸ்டில் போட்டால், நன்றாக இருக்கும்..... என் பதிவில் நான் தொகுக்கவா? )
தனிமையின் விலை - 1
தனிமையின் விலை -2
தனிமையின் விலை -3
தனிமையின் விலை - 4
************
அப்புறம் ஜெயா டிவியில் ஒருவர் பெண்கள் என்றால், ப்ளாகில் சமையல் குறிப்பு, அழகு குறிப்புகள் மட்டும் எழுதாமல் கதை, கவிதை, மற்றும் சமூக, அரசியல் பிரச்சனைகள் பற்றி நன்றாக எழுதுறாங்கன்னு சொன்னதற்கு வாழ்த்துக்கள்! ;-)
( நான் அந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை, நண்பர் ஒருவர் இமெயில் பண்ணியிருந்தார்... )
புளியோதரை
உங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசை. ரொம்ப நாள் தேடியது!
புளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)
நன்றி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் மற்றும் விவரமா தந்த திரு. சம்பத!
------------------------------------------
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்
செய்முறை:
- புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
- புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
- நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
- எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
- பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
- 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
- மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
- சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
- பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.
ஆமாம், நாங்கள் நல்லெண்ணெய் ஊற்றுவதில்லை, சன் ப்ளவர் ஆயில் தான். என்ன செய்வது?
Wednesday, June 10, 2009
சில காதல் வார்த்தைகள்
இது எனது பதிவில் காதல் கடிதங்கள் வரிசையில் மூன்றாவது பதிவு...
நிலவில் ஆரம்பிக்கும்...
நிலா,
உயிரே,
மானே,
தேனே,
கண்ணே,
கண்மணி,
நெஞ்சே,
மனசு,
இதயம்,
மூச்சு,
வார்த்தை,
நோகுது,
தெரியாதா,
போகாதே,
நில்,
முத்தம்,
தாலி,
பாடல்,
இதழ்,
அப்பா,
அம்மா,
அம்மம்மா,
ஐயோ!
*******
கவிஜர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய் மற்றும் வைரமுத்து ஒரு பஸ்ஸி லாஜிக் பாடல் ஜெனரேடர் எழுதி ரெடியாக வைத்து, கேட்கும் இடத்திர்க்கேர்ப்ப ( சீன ) பாடல் வந்து விழுகும்.
மூசிக்? கீபோர்டை யாராவது குழந்தை கையில் கொடுத்துவிட்டால், போதும்... வருவதெல்லாம் சுக ராகம் தான்!
டண்டனக்கா...
என்ன எழுதுவது காதல் கடிதம் பற்றி
பொறுத்திருந்து பாருங்கள். கற்பனை தான் நிற்கும்!
என்ன எழுதுவது காதல் கடிதம் பற்றி?
ஆண்கள் தான் அதில் விற்பன்னர்கள் ஆயிற்றே?
Tuesday, June 9, 2009
வித்தியாச காதல் மடல்
வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா,
*******
அருமை!
*******
பெண்ணாக இருந்தால் காதல் கடிதம் எதாவது வகையில் ( கடிதம் தான் வருமென்று எதிர் பார்க்க வேண்டாம்...) வந்திருக்கும்.
காதல் பார்வை - மாமன் மகன்கள், உறவின் தையிரியம்!
காதல் பேச்சு - கல்லூரி ஆண்கள் , பள்ளி - பையன்கள்
மற்றும் பல வாராக, கல்யாணம் செல்லும் போது, ஒரு விழாவிற்கு செல்லும் போது, எதோ பேச வேண்டும் எனதுடிக்கும் கண் - பார்வைகள்...
***********
வெளிநாட்டில் - சினிமா, நண்பர்கள் கோட்டம், டேட்டிங் (?) போல உதாரணங்கள். அப்புறம் பர்சில் எவ்வளவு காசு இருக்கு என்பதை பொறுத்து, யார் செலவு செய்கிறார்கள் என்பதை பொறுத்து இருக்கும்?
வித்தியாசம்!
கடைசியில் கல்யாணம் என்று வரும் போது, காதல் ஒப்புதல் பெற ஆண் தான் கதறவேண்டும்... பெண்ணுக்கு, கொஞ்சம் ஈசி. பெண்ணின் பெற்றோருக்கு பையன் நல்லவன், வைத்து காப்பாற்றுவான் என்று நம்பிக்கை வந்தால் போதும்!
சரி...
காதல் கல்யாணத்திற்கு பிறகு எப்படி இருக்கும்?
இருவரின் குடும்பத்தாரும் இணங்கி போனால், நன்று. அமிர்தம் தான்!
இல்லாவிட்டால், முள் மீது விழுந்த சேலை மாதிரி, ஒவ்வொரு முள்ளாக, பார்த்து பார்த்து எடுக்க வேண்டும். அன்பு தழைத்தோங்கும்!
*******
எனக்கு காதல் இமெயில் மட்டும் தாங்க வந்தது... என்னவரிடம் இருந்து, கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு!
Thursday, June 4, 2009
ஆமீரகத்தின் பதிவர்கள்
என்ஜாய் பண்ணுங்க!
********
துபாய் சில நினைவுகள்....
அப்பா அங்கு ஒரு பதினைந்து வருடங்கள் வேலை செய்தார். சில வருடங்கள் முன் தான் கோவையில் திரும்ப வந்து செட்டில் ஆனார். நல்ல ஏ.சி. மெக்கானிக் கம்பெனி, நல்ல வேலை... ( இப்போ சம்பந்தமில்லா வேலை )
நாங்கள் ( நான், தங்கை மற்றும் அம்மா ) படிப்புக்காக சில வருடம் ( ப்ளஸ் 2, காலேஜ் ) கோவையில் இருந்துவிட்டோம். பிறகு சில வருடம் அங்கு இருந்தோம்.
நான் என் கணவரை சந்தித்ததும் அங்கு தான்! ;-) தங்கையும் அப்படியே! மாடர்ன் பேமிலி...
*******
அப்பாவின் காரை இந்தியன் லைசன்ஸ் ( ஐ.டி.எல் ) வைத்துக்கொண்டு நான் தங்கையுடன் மற்றும் சில நண்பர்களுடன் அபு தாபி, நார்த் ஓமான் எல்லை வரை சென்றது எல்லாம் நினைவில் உள்ளது.
சார்ஜாவின் ஏர்போர்ட், அஜ்மானில் சில கோவைக்காரர்களை (நண்பர்கள்) சந்திக்க சென்றது எல்லாம் .... நினைவில்... நிற்பவை..
லூலுஸ், பர் துபாய் மற்றும் கரமாவை மறக்க முடியுமா. ஷாபிங்... ஷாபிங் தான்.
கராச்சி தர்பாரில் பெரிய பராட்டா மற்றும் கரம் சாய் இன்னும் கிடைக்கிறதா?
சிம்ரன் ஆப்ப கடையின் சிக்கன் பிரியாணியும் , மட்டன் சுக்காவும் மறக்க முடியவில்லை. சரியான சிலோன் டேஸ்ட்!
இப்போ எப்படிங்க வேலை நிலைமை எல்லாம். விலைவாசி ரொம்ப ஜாஸ்தின்னு, கணவர் சொந்தங்கள் எல்லாம் பக்ரைன் மற்றும் கட்டாருக்கு மாறிட்டாங்க. ஐ.டி. ஆளுங்க மட்டும் இருப்பாங்க... ?
விவரம் எல்லாம் கமன்ட்சில் போடுங்க.
( அப்பா கூடிய விரைவில் ரஸ் அல் கைமாவில் ஒரு ஆபிஸ் எடுக்கப்போகிறார்... )
Wednesday, June 3, 2009
அனானிமஸ் கொடுமைகள்
அதையே ரமேஷ் அவர்களும் எழுதியிருக்கிறார்...
அனானிமஸ் கமன்ட்டர்கள்
இங்கே படியுங்க, இன்று அடிபட்டது என் நண்பி திவ்யா.
பெங்களூரில் நான்
என்ன கொடுமை இது?
சம்மந்தப்பட்ட ஆள் பிடிக்கப்படும் வரை, யாருக்கும் நிம்மதி இல்லை.
அந்த ஆள் நான் தான் கமன்ட் போட்டேன், "சாரி" என்று சொல்ல வேண்டும்.
இன்டர்நெட் கொடுக்கும் சுதந்திரம், தவறாக உபயோகித்தால், களி தின்ன நேரிடும்!
:-(
குழந்தை எனும் மேஜிக் வார்த்தை
![[baby-cartoon.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizSXL-wM_x2d2V4HJCfTT_SkjplY_8MpMlqOACgSng0Hzguj6nZ05izuE48ewKvFnBs0g83T33s9tcq1xp6ziDLv1Y-OsElhgDiqoHlP2Pa29bjJS0HKl47mrDeL0PGvr0IQnd8FwRA0w/s1600/baby-cartoon.jpg)
இந்த கதை (லக்கிலூக் யுவக்ரிஷ்னா எழுதியது) படித்தேன்...
குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!
கதை அருமை. நிகழ்வை அருமையாக படம் பிடித்துள்ளீர்கள்! நன்றி!
********
எனக்கு தெரிந்த நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு ஒன்பது வருடமாக குழந்தைகள் இல்லை, கமலா செல்வராஜ், ஜமுனா, ஆஷா ராவ் எல்லரையும் பார்த்தாகிவிட்டது. சிங்கபூரில் சில லட்சங்கள் செலவு செய்தாகிவிட்டது. கொடுமை என்னவென்றால், இருவருக்கும் நார்மல் தான்!
பாம்பிற்கு அறியும் பாம்பறியும் பாம்பின் கால்!
Monday, June 1, 2009
தக்காளி முட்டை ஆம்லெட்
இரண்டு முட்டையும் ஒரு வெங்காயமும்
//ரொம்ப நல்லா இருக்கு. தக்காளி சேர்த்தால் இன்னும், ஆம்லெட் நல்லா வரும். என் ப்ளோகில் எழுதுறேன்.//
******
அதனாலே, இந்த போஸ்ட்.
நான் முட்டை வெஜிடேரியன் என்று நம்புகிறேன்.
முதல் ஆளுக்கொன்று என முட்டை கணக்கு வைத்து, தேவையான அளவு உப்பு காரம் போட்டு மிக்ஸ் செய்யவும். ( கலக்கவும் - என் மகள் தான் இதில் இப்போ எக்ஸ்பர்ட் )
பிறகு தவாவில், சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்த வெங்காயத்தை, வதக்கவும் (கோவை ஸ்டையில், பொன் வறுவல் ).
நறுக்கி வைத்த தக்காளியை ( ஸ்மால் பீஸ் ) சேர்த்துப்போட்டு வதக்கவும். இந்த சீக்குவன்ஸ் முக்கியம். அதை நன்றாக தவா அளவு பரப்பிவிடவும்!
பிறகு, கலக்கி வைத்து முட்டை கலவையை அதன் மீது ஊற்றவும். ஸ்ப்ரெட் செய்யவும். சிறிது எண்ணெய் மேலே ஊற்றவும். வேக விடவும்.
தோசை திருப்பி போடுவது போல, திருப்பி போடவும். வேக விடவும்.
மூன்று நிமிடத்தில் தக்காளி முட்டை ஆம்லெட் ரெடி. என்ஜாய் பண்ணுங்கள்.
******
குழந்தைகள், ஸ்கூலில் இருந்து வந்துவிட்டார்கள். அரை நாள் தான். புது உனிபார்ம், டை மற்றும் குதுகுலம்., சொல்லி மாளாது!
மதியம் சிம்பிள் தாளித்த சாப்பட்டிற்கு இது தான் தொட்டுக்கொள்ள காய்.
என்னவர் ஆபீஸில் கொட்டிக்கொள்வார். :-(
Thursday, May 28, 2009
நான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்
ஆங்கிலத்தில் இருந்து தமிழ் படுத்தியிருக்கிறேன்...
I kill an ant
and realize my three children
have been watching.
ஓர் எரும்பைகொன்றேன்
என் மக்கள் பார்த்ததை
கவனிக்கவில்லை
A sudden shower falls
and naked I am riding
on a naked horse!
திடீர் மழையில் நனைத்தேன்
நானும் என் குதிரையும்
நிர்வாணம்
___________________
Night, and the moon!
My neighbor, playing on his flute -
out of tune!
இரவும் நிலாவும் கூட
என் பக்கத்துவீட்டுக்காரரின் புல்லாங்குழல்
ஒன்றவில்லை
___________________
A giant firefly:
that way, this way, that way, this -
and it passes by.
ஓர் பெரிய மின்மினிப்பூச்சி
அங்கும் இங்கும் அலைபரித்தது
பறந்தோடிவிட்டது!
___________________
First autumn morning:
the mirror I stare into
shows my father's face.
இலையுதிர்காலத்தின் காலை
கண்ணாடியில் பார்க்கிறேன்
என் அப்பா!
___________________
After killing
a spider, how lonely I feel
in the cold of night!
எட்டுக்கால் பூச்சி ஒன்றை கொன்றேன்
தனிமை வாட்டுகிறது
இரவின் குளிர்
_____________________
The summer river:
although there is a bridge, my horse
goes through the water.
கோடையின் ஆறு
அதில் பாலம் என் குதிரை
சேர்ந்தே போகிறது!
____________________
No blossoms and no moon,
and he is drinking sake
all alone!
பூக்கள் இல்லை, நிலவும் இல்லை
அவன் குடிக்கிறான்
தனியாக!
____________________
Won't you come and seeloneliness? Just one leaf
from the kiri tree.
வந்து பார்க்கமாட்டாயா என்
தனிமையை, ஓர் இலை தான்
கிரி மரத்திலிரிந்து!
*********
மொழி பெயர்ப்பு ஒ.கே.வா?
ஹைக்கூகள் அறிமுகம் செய்த சுஜாதா ரங்கராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம்!
ஆயுதமும் அமைதி வழியும்
நானும் நெடு நாட்களாக அமைதி வழி தான் நன்று என்று எழுதி வருகிறேன் - ஸ்ரீலங்கா - ஈழம் குறித்து.
துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் தான் சாவான்.
காந்தி சொல்கிறார், ஒரு உயிர் கூட இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஆயுத போராட்டம் வழியில் போகக்கூடாது. அதன் பிறகு தான் சுபாஷ் சந்திரா போஸ் ஜப்பான் சென்று இந்திய அமைதி படையில் சேர்ந்தார். ஆரம்பித்தவர், வேறு ஒருவர் ( பெங்காலி - ஜப்பான் பெண்ணை திருமணம் செய்தவர் ).
"சுய ஆட்சி" தன் குறிக்கோள் என்று இன்றும் என் அப்பா சொல்கிறார், அங்கு பிறந்தவர். சிங்களதவரிடம் எந்த வகையிலும் எங்கள் குடும்பம் அல்லல் பட்டதில்லை. ஜாப்ன காடுகளில் இருந்து தீவிரவாதம், தான் ஒருவனே தான் தலைவன் என்று ஒருவர் புறப்பட்ட போது, வெடித்த வெடிகள், எங்கள் அப்பாவின் குடும்பம் புலம் பெயர வைத்து. இந்திய வந்த பிறகும், சம்பாரித்த பாதி பணம் கட்டப்பட்டது, சில நாட்கள் முன் வரை. அங்கு வேறு ஒரு தமிழ் தலைவர், தமிழர்கள் (இரண்டாம் டேக்ஸ்) கட்டாமல் இருந்தால், தீர்க்கப்பட்டார்கள். இது குறித்து எம்.ஜி.ஆரும் நன்றாக யோசித்து தான், அந்த தலைவருக்கு தமிழ்நாட்டில் அடைகலம் வழங்கினார். ஆனால் நடந்தது என்ன? பத்மநாபா கொலை.
யுரோப் நாடுகள், ஆயுதம் விற்க ஒரு தீவிரவாத க்ரூப் கிடைத்த சந்தோசம் ( இஸ்ரேல் என்று ஒரு நாடு மட்டும் அல்ல ) சண்டை நிற்க, வழி செய்யவில்லை. குண்டு கண்டுபிடித்த நாடு (நார்வே) தான் அமைதிக்கு வழி காட்டியது.
இன்று அப்பாவிற்கு சிங்கள நண்பர்கள் உண்டு. ராஜபக்சே குடும்பம் உட்பட.
தனி சுயாட்சி என்பது தான் நிஜ ஸ்ரீலங்கா தமிழர்களின் கனவு!
**********
தொடாபுடைய அனுஜன்யாவின் பதிவு...
என்னுடைய கமன்ட்...
//
Nice article, even though I don't believe in idolizing. I have written many articles about non violent method in my blog. At least leaders would have been alive.
Now UN says 50,000 families have been displaced since 1983. That is huge for an ethnic conflict.
But don't compare Prabhakaran with the Indian Mafiaso, might hurt "Eelam" Tamils.
A person who takes sword, dies with it!
//
***********
நானும் உங்களைப்போல ஒரு வருடமாக தமிழ் ப்ளாக் எழுதுகிறேன். ( அப்துல்லா அண்ணன், பரிசல் அண்ணன் செட் ) ;-)
Monday, May 25, 2009
அசைலம் கேட்கிறார்கள்
இங்கே கிளிக் செய்து ஆங்கிலத்தில் படிக்கவும்!
Pearl Action
Click here to send the appeal directly!
மூன்று டாக்டர்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
உங்கள் கடிதம்... அவர்களுக்கு உதவும். மனிதாபிமானம் நிச்சயம்!
நன்றிகள்...
லீவு முடிகின்றது
இப்போதெல்லாம் நன்றாக தூங்கி எழுகிறார்கள்... எப்படி டைம் மாற்ற முடியும் என்ற பார்க்க வேண்டும்.
பள்ளிக்கல்வி எப்படி மாறிவிட்டது பாருங்கள். அந்த காலத்தில் லீவு ஹோம் வர்க் இருக்கும்... இன்னும் பல... பெரிய க்ளாசில் க்வேச்டியன் பேப்பர் ஆன்சர் எழுதி செல்ல வேண்டும்.
இந்த முறை, கோவையில் குழந்தைகள் ஒரு இடத்தில் ( சாய்பாபா காலனி - அப்துல் கலாம் அவர்களின் நண்பர் வீடு அருகில் ) ஸ்லோகா படித்தார்கள். என் கணவர் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை! அன்னபூர்னாவில் நோட்டிஸ் பார்த்து இடம் பிடித்தேன்.
***********
அப்பா அம்மாவுடன், சர்வம் படம் பார்த்தோம். குழந்தைகள் ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். எதோ ஒரு இங்கிலிஸ் படம் தழுவி எடுக்கப்பட்டது போல? ஒரு குழந்தை ஆக்சிடன்ட்டில் இறக்கும் வலி ஒருவனை மன நோயாளி ஆக்குகிறது. அதை சுற்றி ஒரு படம். மாஞ்சா கயிற்றில் பட்டம் விடாதீர்கள் ப்ளீஸ்.
முன்னார் மிக அழகாக தெரியுது...
**********
குழந்தைகளோடு வாரம் சில முறை நான் வெஜ், ஸ்வீட் காரம் ஸ்நேக்ஸ் என்று வெயிட் ஏறி விட்டது. டையட் மற்றும் எக்செர்சைஸ் செய்ய வேண்டும். கோவையில் காலையில் நடப்பதற்கு நன்றாக இருக்கும்... ஆனால் குழந்தைகள் பேட்டை விட்டு சீக்கிரம் எழ மாட்டார்கள்...
*********
கோவையில் சில ஏரியாக்கள் பார்த்தோம். ஜி.வி.ரெசிடென்சியல் லேயவுட் - பெர்க்ஸ் ஸ்கூல் அருகில் நன்றாக இருக்கும் போல உள்ளது. இடம் விலை சென்ட்டுக்கு ஐந்து லட்சம் என்கிறார்கள். பார்க்க வேண்டும். ஒரு வீடு கட்டிக்கொண்டால், கோவைக்கு குடி புகுந்து விடலாம்!
எனக்கும் ஒரு வேலை கோவையில் கிடைத்து விட்டால் நல்லது!
ஆனால் இங்கு ரியல் எஸ்டேட் ஆட்கள், பணம் இருக்குது இன்வச்ட் செய்ய என்றால், தொந்தரவு தொல்லைகள் தாங்க முடியவில்லை! விளையும் குறைக்க மாட்டேன்கிறார்கள். சரி ஐ.டி. பார்க் வருவதால், எப்படி இடம் விலை ( ரெசிடென்சியல் ஏரியாவில் ) ஏறும்? லாஜிக்கே இல்லை! அப்பா சொன்னார் கே.ஜி. க்ரூப், சில நூறு கொடிகள் போட்டு இடம் வாங்கி, நஷ்டப்பட்டு உள்ளார்கள் என்று. எஸ்.ஈ.ஜெட்... ஏற்றுமதி ஏரியா... (மம்தா பானர்ஜிக்கு பிடிக்காது வார்த்தை ) இருகூர் வரை ஏக்கர் ஒரு கோடி என்று செய்துள்ளது. அப்பாவின் பத்து ஏக்கர் தெண்ணந்தோப்பு நல்ல விலை வரும். ஆனால், ரவுடிகள், கட்டாயமா விற்க வைப்பார்கள் என்ற பயம் வேறு.
***********
அமெரிக்க வரை ஐ.பி.எல் பாய்ந்துள்ளது. திவ்யாவும் எழுதியிருக்கிறார்...
"வாழ்க்கையும் கிரிக்கேட் மேட்சும்"
நேற்று இரவு, சென்னை மாகளுக்கு சோகம் தான். பைனல்ஸில் இல்லையே!************
அப்புறம் ஸ்ரீலங்கா போராளிகள் குழி தலைவர் இறப்பு பற்றி பல செய்திகள்.
ராஜு என்பவர், இப்படி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
படிக்க சுவாரசியம் - End of an era, Brand Name
அவர் எழுதியதைப்போல, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அந்த பிராண்ட் நேமை மறைய விடாமால் அதை வைத்து பிசினஸ் செய்வார்கள். திருந்தமாட்டார்களா. இப்போது வாடி வதங்கி இருக்கும் ஸ்ரீலங்கா தமிழர்களின் நலன், சுய ஆட்சி, முக்கியம்மாக பணம் கொடுத்து உதவனும்.
என்னிடம் கொடுத்தால், நான் நல்லது செய்ய எண்ணம்.
